Skip to main content

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்


கோ.புண்ணியவான்

பகுதி 5



அந்த மழை பொழுதில்தானே

தோட்டத்தின் முச்சந்தி மரம்

கிளைகளை உதிர்த்திருக்கும்?

மரத்தில் அமர்ந்திருந்த

குருவிகள்

பறந்தோடிய ஓசையை

மழை சிதறலின் ஓசையைவிட

உன்னிப்பாகக் கேட்க முடிந்ததே!

(கே.பாலமுருகன்)





தமிழ்க்கல்வியைத் துடைத்தொழிக்கும் கொள்கை



மலேசியா தொழில் துறை நாடாக மாறிக்கொண்டிருப்பதாலும், தொழில் நுட்பத்துறை ஆங்கிலத்தில் இயங்கிக்கொண்டிருப்பதாலும் அறிவியல் கணிதம் போன்ற பாடங்கள் ஆங்கிலத்தில் போதிப்பது அவசியமென உணர்ந்த முன்னால் பிரதமர் மகாதிர், ஆரம்பக்கல்வித்தொடங்கி பலகலைக்கழகம் வரை அப்பாடங்கள் ஆங்கில கற்றல் கற்பித்தலுக்கு மாற்றப்பட வேண்டும் என மக்கள் கவனத்தைத்திருப்பினார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆரம்பப்பள்ளிகளில்( அடிப்படைக்கல்வி முதல் ஆறு ஆண்டு வரை) மலாய், ஆங்கிலப் பாடங்களைத்தவிர்த்து பிற பாடங்கள் தாய்மொழியிலேயே போதிக்கப்பட்டு வந்தன. தாய்மொழியின் மீது பற்று கொண்டவர்கள் பிரதமரின் இத்திட்டம் தமிழ் சீனம், மலாய் போன்ற மொழிகள் பேசுவதும் எழுதுவதும் குறைந்துவிடும் எனவும் மரபு சார்ந்த அதன் கலாச்சார தொன்மங்களும் அழிந்தொழிந்துவிடும் என்று முடிவெடுத்து, அக்கொள்கைக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினர்.அப்படி வந்த கவிதைகளில் ஒன்று இது.



தமிழ் மொழிக்கு

ஊறு விளைவித்தக்

கூட்டுச்சதி இந்நாள்



மொழிக்கு முள்கிரீடம்

அணிவித்த

பாவிகள் நாம்

ஒரு வகையில்

நாமும் யூதாஸ்கள்தாம்.

தமிழ்த்தாய் மகுடத்தை

மண்ணில் தட்டிவிட்டு

கொடும்பாவி எரிக்க

தீப்பந்தம் கொடுத்த

கருப்பு நாள் இது ( கோ.புண்ணியவான்)





மலேசியச் சரித்திரத்தில் 2007 நவம்பர் 25ம்நாள் தமிழர்களின் எழுச்சி தினமாகக் கருதப்படுகிறது. மலேசியா விடுதலை அடைந்து ஐம்பது ஆண்டுகளாய் ஒடுக்கப்பட்டுவந்த சமூகம் அன்றைய தினத்தில் தங்கள் உரிமைகளுக்காகப்போராட தலைநகரில் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டனர். மக்கள் தொகையில் எட்டு சதவிகமாக இருக்கும் இந்தியர்களின் சொத்துடமை இந்த ஐம்பது ஆண்டுகளில் ஒரு சதவிகிதத்தைக்கூட எட்ட முடியாத அவல நிலையில் இந்த தார்மீகக்கோபம் புரட்சியாக வெடித்தது.அரசு வேலை வாய்ப்புகளில், உயர் கல்விக்கூட கல்வி பயிலும் வாய்ப்புகளில், வணிக லைசன்ஸ் பெறுவதிலும்,வணிகத்துக்காக அரசு கடன் பெறுவதிலும் மாலாய்க்கார இனத்தோடு ஒப்பிடும்போது பெரிய ஏமாற்றத்தையும் சரிவையும் நம் இனம் அடைந்து வந்தது. ஆளுங்கட்சியோடு இணைந்திருந்த இந்தியர் சார்ந்த கட்சிகளும், அரசு சாராத பொது இயக்கங்களும் இந்தியர்களின் பின்னடைவை முன்வைத்து அதற்கான தேவைகளை முன்மொழிந்தும் செவிடன் காதில் ஊதப்பட்ட சங்ககான கதையாகவே ஆனது. ஐம்பது ஆண்டுகளாய் இதுபற்றிய கோரிக்கைகள் எழுப்பியும், மகஜர்கள் அனுப்பியும், பெரிதாய் ஒன்றும் சாதித்துவிட முடியவில்லை. இதனால் மற்ற சமூகங்களோடு ஒப்பிடும்போது இந்திய சமூகம் ஒரு பின்தங்கிய சமூகமாகவே கட்டமைக்கப்பட்டு வந்தது. இந்த நிலை நீடித்தால் மலேசியா வளர்ந்த நாடாகிவிட்ட நிலையில் இந்த சிறுபான்மை சமூகத்தின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என்ற அச்சம் மேலோங்கிய வண்ணம் இருந்தது. ஆளுங்கட்சியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு முக்கிய உருப்புக்கட்சியாக இருந்துவரும் ம.இகா இந்தியர் கல்வி சமூக நலன்களில் அக்கறை காடுவதான பாவனையிலேயே காலத்தைக்கழித்தது. பெரும்பான்மை இனமான மலாய் சமூக முன்னேற்றத்தின் மேலேயே ( 60 சவிகித வாக்கு வங்கி உடைய சமூகம்) ஆளுங்கட்சி கவனம் செலுத்தி வந்தது. சிறுபான்மை இனத்தின்பால் போதுமான அக்கறை செலுத்தாமலிருந்ததால், இந்திய சமூகம். கல்வி பொருளாதார மேம்பாட்டில் பின்னடைவு கண்டது. இதனாலேயே பெட்டிப்பாம்பாய் இருந்த சமூகம் 2007 நவம்பர் 25ல் உரிமைக்கேட்டு போராட்டத்தில் குதித்தது. இதனை உலகம் மக்கள் சக்தி போராட்டமென்றே கருதுகிறது. இந்தியசமூகத்துக்குச் சோதனை நிறைந்த காலக்கட்டமாகக் கருதிய நம் கவிஞர்களுக்குக் கற்பனை கரை புரண்டது.



அந்த ஈக்குஞ்சு பிழைத்துக்கொண்டது!



சுவைபான கோப்பையில்

தெரிந்தே விழுந்திருக்கலாம்

ஈக்குஞ்சு



காப்பாற்ற விரைந்து

பின்பு பின்வாங்கிய விரல்கள்

அதன் மரணத்தில்

மெளனமாய்ச் சிரிக்கின்றன



கோப்பைக்கு வெளியே

ஈக்குஞ்சுக்கு என்ன கிடக்கிறது?



விரட்டலுக்கும் துரத்தலுக்கும்

இன்னும் அடித்தலுக்கும்

இலக்காக்கிக் கொண்டு

சொற்ப வாழ்வின்

இடுக்குகளில்

சிதறுண்டு போவதைத் தவிர... ஏ.தேவராஜன்,



சமூக எழுச்சிக்கு வித்திட்ட இந்தப் போராட்டத்துக்கு ஐவர்(அவர்களுள் நால்வர் வழக்கறிஞர்கள்) முன்னின்றனர்.இதன் காரணமாக ஒடுக்குமுறை சட்டமான, உள்நாட்டுப்பாதுகாப்புச்சட்டத்தின் கீழ் இவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.இது மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இவர்கள் சிறை வைக்கப்பட்ட பாதிப்பை ஒன்பதாவது பொதுத்தேர்தலில் அரசே உணரும்படியான வரலாறு காணாத வகையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழந்தது.முதல் முறையாக இந்தியர்கள் பெரும்பான்மையான வாக்குகளை எதிர்கட்சிக்கு சேர்ப்பித்தன.கேள்வி முறையின்றி தடுத்து வைக்கப்பட்டவர்கள் பற்றிய கவிதை இது.



கருப்புக்காகிதத்தில்

வெள்ளை மையிட்டு எழுதுங்கள்

இவர்கள் அஞ்சாத வாசம் கொண்ட

புதிய பஞ்சபாண்டவர் என்று



நீண்டு இருக்கும் வரைதான்

இவை விரல்கள்

இறுக இணைந்திருப்பின்

இவை......



இவர்கள் ஐம்பொறிகள்

இந்தச்சமூகத்தின் ஜீவன்கள்

இவர்கள் ஐம்பூதங்கள்

எங்களின் மூல இயக்கம்

....................

................... ...... கோ.புண்ணியவான்



எனத்தொடரும் இக்கவிதை சமூகம் எந்த அளவுக்கு இந்த ஐவரையும் கொண்டாடினார்கள் என்பதற்கான சிறிய உதாரணமாகத் திகழ்கிறது.



கோயில் உடைப்பு



உள் நாட்டுப்பாதுகாப்புச் சட்டத்தை தன் கைவசம் வைத்திருக்கும் அரசு சிறுபான்மை மக்களுக்கெதிரான தன் சித்து வேலைகளைப் பல காலமாகச்செய்து வருகிறது. மேம்பாட்டுதிட்டம் என்ற போர்வையில் மக்களின் வழிபாட்டுத்தளங்களை, குறுகிய கால அறிவிப்பைக்கொடுத்தோ அல்லது முன் அறிவிப்பு இன்றியோ இவை பதிவு பெறாதவை எனக் குற்றஞ்சாட்டி கோயில்களை உடைக்கும் வேலையில் ஈடுபட்டு வந்தது அதில் ஒன்று. இதனால் கொதிப்படைந்த இந்துக்கள் இந்த உடைப்புக்கு எதிராக குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.சில சமயங்களில் கோயில் வாளகத்திலே ஆயிரக்கணக்கில் முற்றுகை இட்டு மனிதச்சங்கிலியாக ஒடுக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்க முனைந்தனர். (புதிய பிரதமர் நஜிப் பிரதமராகப்பொறுப்பேற்ற பிறகு கோயில் உடைப்பு குறைந்துவருகிறது) அதனைப்பிரதிபலிக்கும் கவிதைகள் பல புனையப்பட்டன.அதில் ஒன்று இது.



என்னடா செய்வீங்க?



முனீஸ்வர சாமி நெனவு தெரிஞ்ச நாளா

எங்க குடும்பமே கும்ம்பிட்டு வர எங்க குலசாமி

சாம்பிராணி புகையிலே

முண்டாசு, முறுக்கிய மீச, கையில அருவா

கம்பீரமா இருக்கும் எங்கள் காவல் தெய்வம்

துடியான தெய்வம்னு எங்க தாதா சொல்லுவாரு

காய்ச்சல்ல கெடந்த என்ன காப்பாத்தினது இந்த

ஐயனாரு தான்

அப்பத்தா சொல்லும் அடிக்கடி

கடப்பாறயில அவர இடிச்சி

கோயில தர மட்டமாக்கி

லோரியில தூக்கிப்போட்டு

போனான்ங்க அவனுங்க

“எங்க கடவுள காப்பாத்துங்களே:னு

கதறுனா எங்க தங்கச்சி

அன்னிக்கி திலஞ்சி போன சாமி

இன்னிக்கி வந்தாரு



தண்ணி அடிச்சாணுங்க சுத்தி பொகையா

கெலம்ப்பிச்சி

எல்லோரும் ஓடுனாங்க

நா ஓடுல

முண்டாசு, முறுக்கிய மீச

கையில அருவா

முனீஸ்வர சாமி இப்ப எனக்குள்ள

“டேய்ய் இப்ப வாங்கடா.....

என்னடா செய்வீங்க...........?

(பத்தாங்கட்டை பத்துமலை)

............தொடரும்

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின