Skip to main content

Posts

Showing posts from 2014

மீசை இருந்தால்தான் ஆம்பளையா?

மீசை இருந்தால்தான் ஆம்பிளையா? என்னுடைய 45வது வயதில் மீசையை எடுத்துவிடவேண்டும் என்ற திட்டம் துளிர்ந்தது. மீசையில் ஆங்காங்கே கத்தரிக்கப்பட்ட வெள்ளை நூலைப்போல கோடுகள் நீண்டடிருந்ததே காரணம். கருமையான பிரதேசம் கறை படிந்தது கிடப்பது போன்ற உணர்வு எனக்கு. அந்த வயதில் தோன்றிய எண்ணத்தை எளிதில் நிறைவேற்ற இயலவில்லை. ரொம்ப நாட்களாய் இருந்துவிட்டது ஒரு உருப்பு போல கருத்த அழகிய மீசை. திடீரென  நீக்கினால் முகத்தோற்றமே விகாரமாகிவிடும். இப்போது வேண்டாம் என்று தள்ளிப்போட்டுக்கொண்டே வந்தேன். வெள்ளை முடிகள் அதிகரிக்க அதிகரிக்க அது கருப்பு மீசையாக இல்லாமல் இரண்டும் கலந்த கலவையாக இருந்தது. இரு நிறத்தில் திப்பித் திப்பியாய் பாசானம் அடித்து செத்துக்கொண்டிருருக்கும் லாலான் திட்டு  மாதிரி. முக அழகு சன்னமாய்  தேய்ந்து கொண்டிருப்பது போன்ற நினைப்பு. அப்போது எடுத்துவிடலாம் என்றே தோணி பிலேடை முகத்தருகே கொண்டுபோய் பின் வாங்கிய தருணங்கள்  நிறைய. என் சக நண்பர்கள் மீசையை நீக்கிவிட்ட முதல் நாளில் பார்த்தபோது பெண் முகம்போன்றே தோற்றமளித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் நாள்பட நாள்பட அந்த மீசையற்ர முகங்கள் சகஜமாகிவிட்டன.

உணர்வுக் கொந்தளிப்பால் உடையும் கலைஞன் - காவியத் தலைவன்

  உணர்வுக் கொந்தளிப்பால் உடையும் கலைஞன் - காவியத் தலைவன் கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பர்கள் பல தருணங்களில் உன்மத்தத் தருணங்களைக் கொண்டாடினாலும், போட்டிகளும் பொறாமைகளும் கலைஞர்களுக்குள் பிரிவினையைக் கொண்டுவந்துவிடும் என்பது நடைமுறை யதார்த்தம். இந்த இரண்டு வகை உணர்களும் தவிர்க்க முடியாத நிலையையே கலைஞர்களின் வாழ்வில் இரணடரக் கலந்துவிட்டவை. கலைஞர்கள் வாழ்வை ஆராயும்போது காழ்ப்பு அவர்களின் மேலான வாழ்வை கறை படியச் செய்துவிடுகிறது . ஆனால் கலையில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்து கடந்து வந்து விடுகிறோம். வசந்தபாலனின் காவியத் தலைவன் இந்த உணர்வு நிலையையே மையமிடுகிறது. பால்ய பருவத்தில் சித்தார்த்தை(காளியப்ப பாகவதர்) சகோதரத்துவத்துடனும், நட்புடனும் அணுக்கமாகும் பிரிதிவி ராஜ்(கோமதி நாயகம்), அவர்கள் வளர வளர அவனின் திறமையின்மேல் காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்கிறான். அல்லது  நாடக  உலகம் காழ்ப்புணர்வை அவன் மீது தூவிக்கொண்டே இருந்து, கடைசியில் துருக்குவியலாக அவன் உள்ளுணர்வுக்குள் குவிந்து விடுகிறது. ராஜாபாட் வேடம் தரித்து நடிப்பதே தன் குறிக்கோள் என்ற கனவை வளர்த்துக்கொண

முத்தங்களால் நிறைந்த தேசம்..முத்தம் 23

 பனிவிழும் மலர் வனம்- ரிஹானா நீர்வீழ்ச்சி டில்டிஸ் மலியுச்சியின் குளிர் கோடைகாலத்திலும் மைனஸ் பாகைக்குப் போகிறது. மலையுச்சியில் ஒரு சுரங்கம். மைனஸ் பாகை செல்சியஸ் எப்படியிருக்கும் என்பதைச் சுற்றுப்பயணிகளுக்கு உணர்த்த உண்டாக்கப்பட்ட சுரங்கம். இதனை மெல்லதான் நடந்து கடந்து வரமுடியும், தரையுயிலும் ஐஸ்கட்டிதான். சுற்றிலும் ஐஸ் கெட்டிதட்டிப்போய்க்கிடக்கிறது. 15 நிமிடம் ஆகிறது 150 மீட்டர் தூரத்தைக்கடக்க. உள்ளே புகுந்துவிட்டால் எப்போது வெளியே வருவோம் என்று பீதியடைந்துவிடுகிறோம்.. கடுங்குளிர். பலமுறை வழுக்கி விழுந்தவர்களைக் காணமுடிகிறது. நானும் கிடதட்ட விழுந்து விட்டேன். சமாளித்துக் கொண்டேன். பாதுகாப்பானதுதான் என்ற உணர்வு வெளியே வந்தவுடந்தான்  ஏற்படுகிறது. மலையுச்சியிலிருந்து கீழே இறங்கி சூரிச் பட்டணத்தை அடைகிறோம். அங்கிருந்து றிஹானா நீர் வீழ்ச்சிக்குக் காரைச் செலுத்தினோம். உயரமான மலையும் காடும் உள்ள இடங்களில் நீர்வீழ்ச்சி இருப்பது சகஜம்தான். ஆனால் அது எவ்வளவு உயரத்திலிருந்து கொட்டுகிறது என்பதை மனம் கணக்குப் போட்டபடி இருந்தது. மருமகன் கூகலைப் பார்த்து  ரிஹானா இது மிகப்பிரபலமான நீர

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 22

சாருக்கானையும் கஜோலையும் டிடல்டிஸ் மலை உச்சியில் பார்த்தோம். தில்த்திஸ் மலையின்  உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம். சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது.  ஏஞ்ஜல்  பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக  நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி  சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள். கேபில் கார் இரண்டு இடங்களில் நிற்கிறது. முதல் இடம் 6000 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே இந்திய உணவு வகையான பிரியாணி உணவகம் பார்த்தோம். வெள்ளையர்கள் இன்றைக்கு பிரியாணி வகை உணவை விரும்பு உண்கிறார்கள் என்பது பல இடங்களில் பார்க்கமுடிகிறது. அடுத்த கேபில் கார் 10000 அடி உயரத்தில் நம்மை இறக்கிவிடுகிறது. 6000 அடி உயரத்தில் இறங்கிய போதே குளிர் ஆற