Skip to main content

Posts

Showing posts from October 4, 2009

தாயின் கழுத்தை இறுக்கும் தொப்புள் கொடி

என் நெருங்கிய உறவினர் பெண் ஒருத்தி மூன்றாவதாக கற்பமுற்றிருந்தால். ஸ்கேன் செய்து பார்த்தபோது மூன்றாவதும் பெண் குழந்தை எனத்தெரியவருகிறது. அந்தக்கணமே குழந்தை வேண்டாம் என்ற முடிவை எடுத்திருந்தாள். முதல் குழந்தைக்கு ஐந்து வயது ஆகிக்கொண்டொருந்தது. இரண்டாவது இரண்டு வயதைக்கடந்திருந்தது. இரண்டுக்குமே சேட்டை செய்யும் பருவம். முழு நேரமும் இவள்தான் பார்த்துக்கொள்ளவேண்டும் .இருவரின் அன்றாட லூட்டியும் தாங்க முடியாமல் விழிபிதுங்கிய மனைவிக்கு வயிற்றுச்சிசுவை கறைத்துவிடுவதற்கான முடிவை அறிவித்துக்கொண்டிருந்தது. டாக்டரைப் போய்ப்பார்த்தபோது எவ்வளவு சீக்கிரம் கலைக்கிறீர்களோ அவ்வளவு நல்லது உடம்புக்கு எனச்சொல்லியிருக்கிறார். தேங்காயாய் முற்றிவரும்வரை காத்திராமல் இளநீராக இருக்கும்போது அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டுவருவது லாபகரமானது என்பதை இன்றைக்கு வணிக நோக்கோடு பணியில் அமர்கிற டாக்டர்களுக்குத் தெரியும் . வேலைக்காரி வைத்துக்கொள்வதில் உசிதமில்லை. வேலைக்காரிகள் பெண்களாக இருக்கிறார்களே என்ற கவலை அவளுக்கு. நம்மூர் வேலைக்காரிகள் முழுநேரமாய் வீட்டில் இருக்கமாட்டார்கள். அக்கம் பக்கம் இருக்கவே இருக்கிறது வீட

அகமும் புறமும்- வெண்ணிலாவின் கவிதை

நான் வேலை செய்த பழைய அலுவலகத்தில் தற்செயலாக ஒரு பெண்மணியின் அறிமுகம் கிடைத்தது. களையான முகம் அவருக்கு. எவ்வளவு சிக்கலான வேலையாக இருந்தாலும், அதன் சூட்சுமங்களை எளிதாகப் புரிந்துகொள்வார். விரைவாகவும் செயலாற்றுவார். தன் வேலையைமட்டுமல்ல, அக்கம்பக்கத்தில் இருப்பவர்களின் வேலைகளுக்கும் ஒத்தாசை செய்வார். பழகிய கணத்திலேயே ஒருவருடன் நட்பு பாராட்டத் தொடங்கிவிடுவார். மகிழ்ச்சியும் கலகலப்பும் இணைந்த அவருடைய நடவடிக்கைகளால் மகிழ்ச்சி நிறைந்த வாழ்வில் திளைத்திருப்பவராகவே அவரைப்பற்றி எண்ணத் தோன்றியது. அப்படித்தான் சில நாட்கள் நினைத்திருந்தேன். ஆனால் உண்மை அதுவல்ல என்பதையும் தீராத எண்ணற்ற துயரங்களால் நிறைந்த இல்வாழ்க்கையையே அவர் வாழ்ந்து வருகிறார் என்பதையும் வெகுவிரைவில் அறிந்தபோது வருத்தமாக இருந்தது. புன்னகையையும் கலகலப்பையும் சுறுசுறுப்பையும் கவசமாக்கி தன் துயரங்களைத் தாங்கிக்கொள்ளப் பழகியிருந்தார். அகக்கோலத்துக்கும் புறக்கோலத்துக்கும் உள்ள தொடர்பு எப்போதும் ஓர் எளிய சமன்பாடல்ல. சிக்கல் தன்மை உடையது. காட்சித் தோற்றத்தை வைத்து அதை எப்போதும் எடைபோட்டுவிட முடியாது. வெண்ணிலாவின் கவிதையில் வெறுமை சூழ்

வாழ்வோடு கைகோர்த்து நடந்து வரும் வலிகள்

                               நேற்று என் மகனுக்கு பரிசம் செய்து முடித்திருந்தோம். சிங்கப்பூரிலிருந்து என் சம்பந்தி வீட்டாரின் மாமியார் வந்திருந்தார். அதாவது என் சம்பந்தி அம்மாளின் பெற்ற தாய் அவர். வயது எழுபத்தைந்தைத் தாண்டியவர். முதுமை காரணமாக, பரிசம்தானே...... திருமணத்துக்குபோகலாம் என்ற முடிவோடு இருந்தவர், இதன் சிந்தனையாகவே இரண்டு நாள் தூக்கம் கெட்டு, மனசு கேட்காமல் முடிவை மாற்றிக்கொண்டு பறந்து வந்து சேர்ந்திருந்தார்.முதுமை மனத்திடத்திடம் நிற்கமுடியவில்லை.                                இன்று இரவு எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்தபோது பேச்சுவாக்கில் அவரின் இளமை கால சோகங்களைப் பகிர்ந்துகொள்ளவேண்டிய சூழல் உண்டானது. இது திட்டமிட்ட ஒன்றல்ல. பழைய நினைவுகள் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள இது போன்ற சந்தர்ப்பங்களுக்குக் காத்திருக்கும்போலும். அது தன் காயங்களை ஆற்றிக்கொள்ளும் முடிவோடு புதியவர்கள் கிடைத்துவிட அவர்களோடு அந்நியோன்யம் கொள்ளும் புள்ளியில்                             தன் சோக வடுக்களை தடவிக்கொண்டே பழைய கதைகளைப் பரிமாற களம் புகுந்துவிடுகிறது.                            அவ