Skip to main content

Posts

Showing posts from April 6, 2014

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 5 லெம்பா பூஜாங் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த 'சண்டி' ராஜ ராஜ சோழனின் மைந்தன் ராஜேந்திர சோழன்தான் கடாரத்தை வென்றவன். ராஜ ராஜ சோழனின் கட்டளைக்கிணங்க அவன் கடாரத்தை 1030ல் வென்றான்  என்பது வரலாறு.  முதலாம் நூற்றாண்டிலிருந்து மூன்றாம் நூற்றாண்டு வரை ஆதிக்கத்தில் இருந்தவை பாண்டிய அரசும் சோழ அரசும்தான்.பல்லவர் ஆதிக்கம் நான்காம் நூற்றாண்டில் துவங்கி ஒன்பதாம் நூற்றான்டு வரை நீடிக்கிறது.மீண்டும் சோழர் அரசு தலைதூக்கியது ஒன்பதாம் நூற்றாண்டில். அது பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை கோலோச்சியது. இந்த நேரத்தில்தான் தென்கிழக்காசியாவுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தது சோழர் அரசு. ராஜேந்திர சோழன் கடாரத்தில் கால் பதித்தது அப்போதுதான். அங்கே அவர் ஒரு அரசை நிறுவியதன் அடையாளமாக பழங்கால வரலாற்று பொருட்கள் அங்கே காணக்கிடக்கின்றன.பௌத்த இந்து சாம்ராஜ்யங்களின் வரலாற்றுச் சான்றுகளே அவை. மலேசிய அரசு  'சண்டி லெம்பா பூஜாங், என்று அதற்குப் பெயரிட்டிருக்கிறது. (சண்டி-வழிபாட்டிடம்,) இது மலேசியாவை மேற்கு மாநிலத்தையும் கிழக்கு மாநிலத்தையும் பிரிக்கும் ஒர் நீண்ட மலைத்தொடரின் பள்ளத்தாக்கு ஒன்றில்

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்

குழப்பம் 4  ஜெமோவோடு பீஷ்மரும் அம்பையும் மற்ற துணை நடிகர்களும்                                   விரிவுரைஞர் குமாரசாமி அன்று எப்போதுமற்ற உற்சாகத்தில் இருந்தார். ஜெமோவின் தீவிர வாசகர் அவர். ஜெமோவை தன் பினாங்கு கல்லூரிக்கு வரவேற்பதில் அவரின் ஆர்வம் அவரை வேறு ஒரு குமாரசாமியாகக் காட்டியது. அறிவுலகம  சார்ந்து இயங்கும் மனிதர்களைப் பார்க்கும்போதெல்லாம் நமக்கு உற்சாகம் வந்துவிடுகிறது. பினாங்கு பயணமான எங்கள் குழு  தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கும் சிறிய குழு. திங்களுக்கு ஒரு முறை இலக்கியம் பற்றி பேசுவதற்கு கூடும்போதெல்லாம் இனம்புரியாத மகிழ்ச்சியில் இருப்போம். ஜெயமோகனின் வருகை எங்களுக்கு கூடுதல் ஆனந்ததைத்க் கொடுத்திருந்தது. கல்லூரி நிகழ்ச்சியைத் தாமதமில்லாமல் தொடங்கி இருந்தார்கள். தொடக்கமே அம்பையும் பிதாமகரும் தோன்றும் ஒரு காட்சிக்கு மேடை தயார் நிலையில் இருந்தது. அம்பை பீஷ்மரை மணம் புரிய கெஞ்சி பின்னர் அவர் அதற்குத் தான் சரியானவர்  என்று வாதாடி,அதற்கு  பீஷ்மரை உக்கிரமாக எதிர்கொள்ளும் காட்சி அரை மணி நேரம் சோடைபோகாமல் நடித்துக் காட்டப் பட்டது. அக்குறு நாடகத்துக்கு எரிதழல் என்று மிக