Skip to main content

Posts

Showing posts from August 18, 2013

யாருமற்றவர்களின் மறைவு

  உடன் யாருமற்றவர்கள் யாருமற்றவர்களாகவே இறந்துபோகிறார்கள்   உள் தாழ்ப்பாளின் முழு பாதுகாப்புடன் நடந்தேறுகிறது அவர்கள் இறப்பு   திரும்ப அழைக்கக்கூடுமென்றே நம்பித் தொலைக்கிறது பதிலற்ற தொலைபேசி அழைப்புகள்   சேர்ந்தும் சேராது நிரம்பி மினுக்கிட்டபடியே காத்திருக்கின்றன குறுந்தகவல்கள்   வேலையிடத்தின் பதிலற்ற அழைப்புகள் பொறுப்பற்றவன் என்ற நிர்வாகக் கோபத்தில் கனன்றுவிடுகிறது   பிள்ளைகள் தொடர்புகள் எரிச்சலூட்டி அடங்கும்போது அப்பா எப்போதும் போலவே வெளிநாடு சென்றிருக்கலாமென ஆசுவாசப்படுகின்றன     தொந்தரவாகுமென்ற மருகலே கதவு தட்டல்கள் இரண்டு முறைக்குபிறகு நிராகரித்துவிடுகின்றன   பதிலற்றபோது கடன் கொடுத்தவன் மனம் இவன் இறந்திருக்ககூடாதென்றே வேண்டிக்கொள்கிறது   இறந்த பின்னும் நீடிக்கிறது உயிரோடிருந்தபோது நிலை கொண்ட வீட்டின் மௌனம்   இருட்டிலிருந்து மீண்ட மின்விசிரி வெளிச்சத்தில் மேலும் இரைந்து சுழன்றுகொண்டிருந்தது   தான் செத்துப்போனால் யாருக்கும் தெரிய