Skip to main content

Posts

Showing posts from October 13, 2013

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

9. அணிவகுப்புக்கு என்ன நோக்கம்?   காளிக்கோயிலைப் பார்த்தபின்னர் இந்திய பாக்கிஸ்தான் ராணுவ அணிவகுப்பைக் காணக் கிளம்ப வேண்டும். அதற்கு இன்னும் நேரமிருந்தது. சரி நேரத்தை வீணாக்காமல் கடைத்தெரு பக்கம் கொண்டு போய்விட்டார்கள்.ஒரு மணி நேரம்தான் அனுமதி. அதற்குள் முடித்துக் கொண்டு ஒரு இடத்தைக்காட்டி இங்கே கூடி விடுங்கள் என்றார் சரத். அவர் விட்டது ஒரு பேரங்காடி. பேரங்காடி வாசலிலேயே அவர் காத்திருக்க நம்ம சனங்கள் ஒரே மகிழ்ச்சிக் களிப்பில் கோதாவில் இறங்கிவிட்டனர். மலேசிய ஒரு ரிங்கிட்டுக்கு பத்தொன்பது ரூபாய்கள் கிடைத்ததும் கையில் கற்றையான நோட்டுகளைப் பார்த்தவுடன் உற்சாகம் எகிறிக்கொண்டிருந்தது. என் நினைவில் பத்து ஆண்டுகளுக்கு முன் ஒரு ரிங்கினொட்டுக்கு  பத்திலிருந்து பதிரு ரூபாய் வரைதான் கிடைத்தது.  ஆனால் இப்போது இரட்டிப்புத் தொகை. இந்திய ரூபாய் அடிமாட்டு விலைக்குச் சரிந்திருப்பது  வரலாற்றிலேயே நடக்காதது. இந்தியப் பொருளாதாரத்துக்கு இன்றைக்கு மிகக் கடுமையான சோதனைக் காலம்.அதனைக் கடந்து மீண்டு விடுவார்கள் என்று நம்புவோம். ஒரு மணி நேரத்தில் என்னதான் வாங்க முடியும்? ஆனால் வாங்கினார்களே. மூட்

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

8. சகலமும் சாமியே   ஜாலியன்வாலா படுகொலை மனதைத் தொந்தரவு செய்து கொண்டிருந்தது. ஒரு அமைதிப் போராட்டம்  அதிகாரத்துக்கும் அடக்கமுறைக்கும் அடிபணிந்ததுதான் போனது என்றாலும் அந்தப் போராட்டத்தின் நீட்சியாகத்தான்  விடுதலை பிறந்தது. இந்தியாவில் ஒரு பக்த் சிங் மட்டுமல்ல பல பகத் சிங்குகள் விடுதலைக்கு வித்திட்டார்கள். இந்தியா எழுப்பிய விடுதலை அலைதான் ஆசிய நாடுகளின் அடிமைத்தளத்திலிருந்து அறுபட ஒரு முன்னோடி. ஏகாதிபத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டே ஆக வேண்டுமென்ற வேட்கையை முன்னெடுத்த காந்தியே ஆசியா அடிமை நாடுகளுக்கான விடுதலையை விதைத்த தீர்க்கதரிசி. விடுதலைப் போராட்ட உணர்வு மற்ற நாடுகளுக்கு பரவியது காந்தியால்தான். அன்றைக்கு நான்கு இடங்களைப் பார்த்தாக வேண்டும். முதலில் பொற்கோயில்  , பின்னர் ஜாலியான்வாலா நினைவகம். அதனையடுத்து  காளிக்கோயில், கடைசியாக நான்கு மணிக்கு மயிர் கூச்சரியும் பாகிஸ்தான் இந்திய ராணுவ அணிவகுப்பு. காளிக்கோயிலைப் பார்க்கப்போகிறோம் என்ற மனநிலையோடு போனது தப்பாகிவிட்டது. கோயிலுக்கு பேருந்தில் போக முடியாது. மக்கள் கூடும் இடங்களுக்கு வாகனங்களை ஒரு எல்லை வரைதான் வரையற

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

7. ஜாலியன்வாலா பாக் பஞ்சாப் மாநிலத்தின் வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது. பொற்கோயிலிலும் அதன் வளாகத்திலும் ரத்தக் கறை படிந்துள்ளது மட்டுமல்ல. அதே நகரில், அம்ரிஸ்டாரில் இன்னொரு இடமும் குருதியால் வரையப்பட்ட ஓவியாமாய்க் காட்சி தருகிறது. அதுதாதான் ஜாலியன் வாலா கொலை. ஜாலியன் வாலா என்பது மக்கள் கூடும் ஒரு பூங்காவாக, காட்சி தருகிறது இப்போது. கொலைக் களத்தின் நினைவகம் இது. இந்திய சுதந்தர போராட்டக் காலத்தில் அது மக்கள் கூடும் இடமாக, அல்லது  காற்று வாங்கும் வெளியாக இருந்திருக்கிறது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டக் குரல் பஞ்சாப்பிலும் உரக்க ஒலித்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த ரத்தக் களறி நினைவை நடுங்க வைக்கும் வரலாற்று  இடமாக   திகழ்கிறது இந்த ஜாலியன் வாலா.                                                       தோட்டாக்கள் சிதறிய அடையாலம். வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஐயாரிம் பேர் இந்த ஜாலியன் வாலவில் கூடி அமைதி பேரணி நடத்த முற்பட்டிருக்கிறார்கள். இங்கே கூடி பின்னர் நகர் வெளியில் நடந்து போவதாய் ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள். இவர்கள் நிராயுத பாணியாய்த்தான் இருந்திருக்கிறார்கள்

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

6. போராட்டமும், ராணுவ நுழைவும்                                                                      பொற்கோயில்                                                    பொம்மைப்    பொற்கோயில் ரரயில் அம்ரிஸ்டாரைச் (அமிர்த சராஸ்) சேரும்போது நன்றாக இருட்டிவிட்டது. இடை இடையே பெரிய பட்டணங்களில் பத்து நிமிடம் களைபாற நிற்கிறது ரயில். ஒவ்வொரு பட்டணத்தின் சிறப்பு பற்றியும் சுருக்காமாக சொல்லப்படுகிறது. பிலாட் பாரஙளில் அப்பட்டணத்தின் ஏற்றுமதிப் பொருட்கள் மூட்டை மூட்டையாய் காத்திருக்கின்றன. நாங்கள் குடும்ப சகிதமாக  'இன்னோவாவில்'முதல் முறை வந்த போது பல இடங்களில் இறங்கி   இளைப்பாறினோம். டபா(உணவு)  என்று அழைக்கப்ட்டு உணவகங்களில் பஞ்சாப்  மக்கள் விரும்பி உண்ணும் உணவை உண்டு மகிழ்ந்தோம். இனிப்பு புளிப்பும்,கலந்த கலவை உணவு. நம்முடைய ஊர் பசும்போர் மாதிரி பலவகை உணவு வகைகள் கலந்தது. ஆனால் இரண்டாவது முறை சாப்பிட வேண்டுமென்ற ஆசை இம்முறை நனவாகி நாவின் நுணியோடு நின்றுபோனது. இம்முறை ரயிலில் பயணம் செய்ததும் , கூட்டத்தோடு வந்ததும்தான் காரணம். கூட்டத்தோடு வரும்போது அதன் ஒழுங்கைக் கடைபிடிக்க வேண்ட

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

5. நீண்ட நெடிய பயணம். டில்லியில் 2 மணிக்கு ரயில் ஏற ஒன்றரை மணிக்கெல்லாம் நிலையத்துக்கு வந்து விட்டோம். இரண்டு இரவுகள் மட்டுமே அமிர்த சரஸில் தங்குவதால் சிறிய பயணப்பையிலேயே இரண்டு நாட்களுக்குத் தேவையான் உடைமைகளை எடுத்துக் கொண்டோம். அப்படியும் பயணப்பை கனக்கத்தான் செய்தது. நீண்ட நேரம் சுமக்கையில் தோள் பட்டை 'னங்கென்று விண்டது. பயணப் பேருந்திலிருந்து இறங்கி ரயில் நிலையத்தில் அம்ரிஸ்டார் பிலாட் பாரத்துக்குச் செல்ல அரைமணி நேரம் நடக்க வேன்டும். படியில் ஏறி இறங்க வேண்டும். மக்கள் நெருக்கடி மோதும், முட்டும். சுமைதூக்கும் கூலிகள் நம்மை பொருட்படுத்தாது விரைந்து நடப்பார்கள். நாம்தான் ஒதுங்கி வழிவிட வேண்டும். ரயில் நிலையத்தை அடைவதையும் கிளம்புவதையும், அறிவித்தபடியே இருக்கிறார்கள். நம் உடமைகளை நம் கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டி வரும் அறிவிப்பு நம்மை உஷார் படுத்துகிறது. வெளி நாட்டில் இருக்கும்போது இயல்பாகவே இரட்டிப்பு கவனத்துடன்தான் இருப்போம். தனியாளைப் பயணம் செய்யும்போது  மேலும் பலமடங்கு உஷார் வந்துவிடும். நாங்கள் பயணம் செய்த ரயில் நிலையத்தை வந்து அடைய அரைமணி நேரம் தாமதம்