கவிஞர் பா.அ.சிவம் பா. அ. சிவம் எனக்கு அறிமுகமானது தொலைபேசி வழியே. குரலை வைத்து அவர் முகம் இன்னெதென்று அனுமானிக்க முடியாததாக இருந்தது. ஆனாலும் மனம் அவர்க்கொரு முகத்தை வரைந்தபடி இருந்தது. அவர் பெயரை வைத்து , குரலை வைத்து அந்த ஓவியம் உருவாகிக்கொண்டிருந்தது. நமக்குப் பிரியமானவரின் முகத்தைப் பார்க்கும் ஆவலில் இப்படியான சித்திரங்கள் நம் மனம் வரைந்துகொள்வது இயல்புதானே! “மலாயாப் பல்கலைக் கழக பேரவைச் சிறுகதைப் போட்டிக்கு நீங்கள் எழுதிய சிறுகதை பரிசுக்குத் தேர்வு பெற்றிருக்கிறது, நீங்கள் நிகழ்ச்சியில் அவசியம் கலந்துகொள்ள வேண்டும்” என்று அழைத்துச் சொல்லியிருந்தார். அந்த ஆண்டு அவர் பேரவையின் தலைவராகப் பொறுப்பேற்று இருந்தார். எனக்குப் பரிசு கிடைத்த மகிழ்ச்சியை சற்றே மறந்து , நான் ஓர் இளம் எழுத்தாளர் ஒருவரோடு பேசிக்கொண்டிருக்கும் பிரக்ஞையே குறுக்கிட்டது அப்போது. நான் அவரிடம் கேட்டேன்,” நீங்கள் பத்திரிகையில் கவிதை எழுதும் பா. அ. சிவமா?” என்று. “ஆமாம் சார்” என்றார் அவர். ஒரு எழுத்தாளரோடுதான் நான் பேசிக்கொண்டிருக்கிறேன் என
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)