Skip to main content

Posts

Showing posts from 2010

சமீபத்தில் மிகச்சமீபத்தில்

என் பேத்தி நவீனா பள்ளி முடிந்து வீட்டுக்கு ஏற்றி வந்தேன். இன்று ஆண்டின் பள்ளி இறுதி நாள். காரில் ஏறும்போதே உற்சாகமாக ஏறினாள். நான் சோதனையில் முதலாவது மாணவி என்றாள். அதற்கு ஆதாரமாக் கையில் பரிசுக்கிண்ணங்கள். நல்லது வாழ்த்துகள் என்று சொன்னேன். எபோதுமே முதல் மாணவிதான். ஆரம்பப்பள்ளி வாழ்க்கையில் முன்றாண்டுகளைக் கடந்துவிட்டாள். வயது ஒன்பது. அவள் தம்பி நான்காவது இடத்தைப்பிடித்ததைச் சொல்லி இடித்துரைத்தாள். வீட்டை அடைந்ததும் தாத்தா இதப்பிடிங்க என்று என் கையில் ஒரு ரிங்கிட்டைத்திணித்தாள். ஏன் என்றேன். நான் உங்கள் வீட்டுத்தொலைபேசியை பயன் படுத்தப்போறேன், அதற்கான கட்டணம் என்றாள். செம் அடி எனக்கு. தொலைபேசியை அவள் பயன்படுத்தும்போதெல்லாம் பில் எகிறும் அடிக்கவேண்டாம் என்று எச்சரிப்பேன்.. அதற்காக கொடுத்த அடிதான் இது. அறைக்கதவை மூடிக்கொண்டு நான்கைந்து நிமிடம் பேசிவிட்டு வெளியே வந்தாள்.எத்தனை பேரிடம் பேசினாய் என்றேன். இருவரிடம் என்றாள். என்ன பேசினாய் என்றேன். என் சோதனை முடிவைச்சொன்னேன் என்றாள். அப்படியானால் நீ கொடுத்த பணம் போதாது. ஒரு நபருக்குத் தொலைபேசியில் பேசினால் ஒரு வெள்ளி தரவேண்டும் என்றேன். பதில

மாட் ரெம்பிட்

கோ.புண்ணியவான், மலேசியா மலேசியாவில் மலாய் சமூக இளைஞர்களிடையே ஒரு கலாச்சார பேரழிவு சமீப காலமாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்திய, சீன இளைஞரிடையே அதிகம் காணமுடியாத இந்த நவின கலாச்சாரம் மலாய் சமூகத்தின் தலைவர்களின் சிண்டு முடியை அடிவேர் ஆட்டங்காணும் வரை பிடித்து ஆட்டிக்கொண்டிருக்கிறது. காவல் இலாகாவினர் இவர்களைக்கட்டுப்படுத்த முடியாமல் விழி பிதுங்கி தவிக்கின்றனர். அரசியல் வாதிகளின் வியூகங்களைத் தவிடுபொடியாக்கியவண்ணம் உள்ளது இந்த இளைஞர்களின் போக்கு. பெற்றோர்கள் கண்களில் மண்ணைத்தூவி விட்டு இந்த இளைஞர்கள் நடத்தும் களியாட்டங்கள் ஒட்டுமொத்த சமூகத்தையே தலை குனிய வைத்துக்கொண்டிருக்கிறது. என்ன சமாச்சாரம் என்று தலையைச்சொறிவதை நிறுத்துங்கள். பீடிகையைக் கோட்டு ரப்பர்பால் மாதிரி இழுக்காமல் சொல்லிவிடுகிறேன். மாட் ரெம்பிட் என்பவர்கள் சாலை விதிகளை உடைத்தெறியும் மோட்டார் சைக்கில் கும்பல். உங்கள் மொழியில் டூ வீலர் அடாவடிக்கும்பல் என்று சொல்லலாம். இவர்கள் ஐம்பது அறுபது பேர் கூட்டமாய்க்கூடி மோட்டார் சைக்கில் ரேஸ் ஓடுவார்கள். பொது வாகனங்கள் ஓடும் சாலைதான் ஓடுதளம். கொஞ்சம் சமூகக்கரிசனம் உள்ள மாட் ரெம

அண்டை வீடும் அடிக்கடி எழும் விஷில் சப்தமும்

கோ.புண்ணியவான், மலேசியா Ko.punniavan@gmail.com என் அக்கம் பக்க வீடுகளில் குடியிருப்பவர்கள் சீனர்கள். எப்போதுமே ஓசையற்று கடந்துகொண்டிருக்கும் வீடு எங்களுக்கு இடது பக்கம் உள்ளது. முன்பு ஒரு குடும்பம் இருந்தது. இப்போது அந்தக்குடும்பத்திலுள்ள ஒரே மகன் அதில் குடியிருக்கிறான். இரவில் மட்டும் வருவான். பகலெல்லாம் பறவைபோல சுற்றித்திரிந்துவிட்டு தூங்குவதற்கென்றே அது அவனுக்குப் பயன்படுகிறது. எங்கள் வலது பக்க வீடு சதா கல கலவென்ற ஓசையோடு இயங்கிக்கொண்டிருக்கும். சீனர்கள் அதிகம் விரும்பி விளையாடும் மாஹ்ஜோங் சூது விளையாட்டு. துருப்புச்சீட்டு மாதிரி என்று வைத்துக்கொள்ளுங்கள். சதுரக்கட்டைகளால் எழுத்துக்களும் படங்களும் நிறைந்த சிறு சிறு துண்டுகளாலானவை. கலைத்துப்போட்டு அவரவருக்கு விழும் கட்டைகளை வைத்து தன் யூக அறிவைப்பயன் படுத்தி ஆடும் ஆட்டம். பல் சமயங்களில் இரவு பன்னிரண்டு வரை ஆட்டம் போய்க்கொண்டே இருக்கும். அதே தாமானிலிருந்து (வீடமைப்புப் பகுதியிலிருந்து) சீனப்பெண்களும் ஆண்களுமாய் வீடு கலகலத்துப்போயிருக்கும். வயதானவர்கள் அல்லது இல்லத்தரசிகள் வந்தவண்ணம் இருப்பார்கள் அந்த வீட்டுக்கு. இடது பக்க சலனம

புதுக்கவிதைகள் வாசகர்களைக்கூட்டின, நவீனக்கவிதைகள் அவர்களை விரட்டின.

(மலேசியக் கவிதைச்சிற்றிதழ் ‘மௌனத்தில்’ வெளியான என்னுடைய பேட்டி) `கோ.புண்ணியவானோடு ஒரு நேர்காணல் கே.பாலமுருகன். 1. உங்களை கவிஞராக அறிமுகப்படுத்தியது எந்தக் கவிதை? அக்கவிதை உருவான தருணங்களையும் அனுபவத்தையும் சொல்லவும். மலேசியாவில் 1974ல் புதுக்கவிதைகள் ஒரு புரட்சிப்பாய்ச்சலோடு பிரவேசிக்கிறது. அதன் தாவலைத் தடுத்து நிறுத்த மரபு சார்ந்த பற்றாளர்கள் எதிர்வினைப்புரட்சியில் ஈடுபடுகிறார்கள். ஆனால் இலக்கிய வடிவங்கள் எப்போதும் யாரோடும் சமரசம் செய்துகொள்வதில்லை. அது தனக்கான இடத்தைக்கைப்பற்றாமல் போனது கிடையாது. ஐரோப்பிய இலக்கியத்திலிருந்து வந்த நாவல், சிறுகதை, புதுக்கவிதை தமிழ் இலக்கியப்பரப்பில் தனக்கான இடத்தை கைப்பற்றி கோலோட்சி வந்திருக்கிறது. புதுக்கவிதை பல போராட்டங்களைச் எதிர்கொண்ட ஒரு பத்தாண்டுகளில் மலேசியாவில் தனக்கென தனியொரு நாற்காலியை இருத்திக்கொண்டது. அந்தப் பத்தாண்டுகாலப் போராட்டங்களைத் தீவிரமாக அவதானித்து வந்த நான் அதன் எழுத்து வீச்சில் கவரப்பட்டு புதுக்கவிதை எழுதத்துவங்கினேன். ஆரம்பத்தில் உணர்ச்சி வேகத்தில் எதையாவது கிறுக்கி அது பிரசுரமாகும்பட்சத்தில் அதனையே சிறந்த படைப்பூக்

(இது ஜெயமோகன் வலைப்பூவில் இடம்பெற்ற கடிதம்)

அன்புள்ள ஜெயமோகன், உங்களின் மலேசிய வருகை எனக்கு மிகுந்த உவப்பளித்தது. நீங்கள் கூறியிருப்பது போல இன்னும் பல ஆண்டுகளுக்குத்தேவையான இலக்கியப்படிப்பினையை மலேசிய தீவிர இலக்கியவாதிக்கு உவந்தளித்து விட்டுச்சென்றிருக்கிறீர்கள் என்ற உங்கள் குறிப்பை நான் ஆமோதிக்கிறேன்.. மலேசியத் தமிழ் இலக்கியத்தின் ஒரு கழுகுப்பார்வை உங்களுக்குக் கிட்டியிருக்கிறது என்பதை நான் அறிவேன். வல்லினம் அநங்கம் மௌனம் போன்ற தீவிர இலக்கியப் பதிவிலிருந்து மலேசிய இலக்கியப்போக்கை அறிந்திருப்பீர்கள். உங்கள் அபிப்பிராயத்தையும் சில கூட்டங்களில் கூறிவிட்டுச் சென்றிருக்கிறீர்கள். ஒரு சிலர் மட்டுமே அதனைக்கேட்டுவிட்டு கசந்துபோயிருக்கிறார்கள். அதன் நிஜத் தன்மையை உணர்ந்தவர்கள் நீங்கள் சொல்வதற்கு ஒத்துப்போகிறார்கள். நான் உட்பட. ஒத்துப்போகாதவர்கள் “விட்டேனா பார் இந்த ஜெயமோகனை, இங்கே எப்படிப்பட்ட இலக்கியமெல்லாம் நாங்கள் வளர்த்து வருகிறோம், பெரிய பெரிய இன்னாரெல்லாம் இங்கே இருக்கிறார்கள்! எப்படி இந்த ஜெயமோகன் இப்படி சொல்லப்போயிற்று ?”என்று புலம்பும் ஒரு பெண்ணின் குரல் இன்னும் இங்கே ஒலித்துக்கொண்டிருக்கிறது. விட்டால் படை திரட்டி வீச்சறிவா

கவிதைக்கும் வாசகனுக்குமான இடைவெளி பெரிதாகிக்கொண்டே போகிறது

1964ல் புதுக்கவிதை மலேசியாவுக்கு அறிமுகப்படுவதற்கு முன்பே நான் மரபுக்கவிதையால் சுவீகரிக்கப்பட்டிருந்தேன். 1961 வாக்கில் இடைநிலைக்கல்வி முடிந்து என்ன செய்வதென்று அல்லாடிய பருவத்தில் தோட்டப்புறத்தில் அலைந்து நேரத்தைப்போக்கிக்கொண்டிருந்தேன். தோட்டப்புறத்தில் அமைக்கப்பட்டிருந்த நூல் நிலையம் மதியம் இரண்டு மணிக்குமேல்தான் திறக்கப்படுமென்பதால் காலையில் நிரைக்குப்போய் அம்மாவுக்கு துணையாய் இருந்துவிட்டு வேலை திரும்பி அம்மா சமைத்த உணவை சாப்பிட்டுவிட்டு நூல்நிலையத்துக்குப்புறப்பட்டு விடுவேன். இடைநிலைக்கல்வியில் இரண்டாம் கிரேடில் தேர்ச்சி பெற்றிருந்தாலும்- ஒரு உண்மையைச்சொல்வதென்றால் ரப்பர்மரக் காட்டுப்பிள்ளைகளில் அந்தத்தோட்டத்தைப்பொறுத்தவரை MC SPMம்மில் தேர்ச்சிபெற்ற முதல் ஆள் நான்தான். கிராணிமார் வீட்டுப்பிள்ளைகள் எனக்கு முன்னாலேலேயே நல்ல மதிப்பெண்கள் வாங்கி மருத்துவக்கல்விக்கு இந்தியாவரை சென்றெல்லாம் இருக்கிறார்கள். தோட்டப்பாட்டாளியின் பிள்ளைகளில் இடைநிலைக்கல்வியில் தேர்ச்சிபெற்றது நான்தான் முதல் மாணவன் என்பது அப்போதைக்குப் பெரிய சாதனையாக இருந்தது. தேர்ச்சி பெற்று என்ன செய்ய? மலேசிய மொழியில் சிற

குரங்கின் கையில்

உரிமையைத்தானே கேட்கிறோம் என்றேன் நாங்கள் கொடுப்பதை எடுத்துப்போ என்றான் போதவில்லை என்றேன் உங்களுக்குத்தான் நாதியில்லையே என்றான் உரக்கக்கத்துவோம் என்றேன் என்றாலும் நீ நிராயுதபாணி என்றான் எங்களின் வரிப்பணத்தில்தானே வாங்கினாய் என்றேன் கஜானாவை நாங்கள்தான் பாதுகாக்கிறோம் என்றான் ஒருமித்த குரல் போதும் என்றேன் எங்கள் துப்பாக்கியில் குண்டு இருக்கிறதென்றான் உரிமையின் உண்மைக் குரல் கேட்கவில்லையா என்றேன் உங்கள் குரல்வளையை எங்கள் சட்டக்கயிறு நெறிக்கும் என்றான் சட்டம் எல்லோருக்கும் பொது என்றேன் சிறைச்சாலை இருக்கிறது என்றான் எங்கள் முறை வராமல் போகாதென்றேன் ஆட்சி எங்களுடையது என்றான் வாக்கு எங்களுடையது என்றேன் வாக்குப்பெட்டி அரசாணைக்கு உட்பட்டது என்றான் அரசை நாங்கள்தானே தீர்மானித்தோம் என்றேன் நாற்காலியை நாங்கள்தானே பிடித்திருக்கிறோம் என்றான் ஆளை மாற்றுவோம் என்றேன் ஆணையை அவ்வப்போது மாற்றுவோம் என்றான் பெரும் புரட்சி வெடிக்கும் என்றேன் துப்பாக்கிக்குள் குண்டுகளை நிரப்ப முனைந்துகொண்டிருந்தான். கோ.புண்ணியவான்.மலேசியா. Ko.punniavan@gmail.com

என் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல்

என் பால்ய நினைவுகளின் நீட்சியில் ஒலிக்கும் நாடக வசனக் குரல் கோ.புண்ணியவான் (kopunniavan.blogspot.com) மலேசியாவில் நாடகக்ககலை எழுபதுகளிலேயே முடக்கம் காண ஆரம்பித்து இன்றைக்கு அருதியாக இல்லாத நிலைக்குத்தள்ளப்பட்டுவிட்டது. எனக்குத்தெரிந்து ஒருவர் மட்டுமே மீதமும் காணாமற்போகாமல் இருப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். அவர் எஸ்.டி. பாலா. அவருடைய இருவர் நாடகம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் மரபார்ந்த நாடக அரங்க அமைப்பை, ஒப்பனையை, மிகை நடிப்பை எஸ்.டி பாலா தன் நவீன நாடகத்தில் சேர்த்துக்கொள்ளவில்லை. எனவே மரபான நாடகக்கலை மலேசியாவில் தழைக்கவில்லை. இருப்பினும் தனி ஒருவனாக இருந்து நாடகக்ககலையை முன்னெடுத்துச்செல்லும் பாலா மலேசியாவின் நவீன நாடகக்கலைக்கான நல்ல அடையாளம். இங்கே தெருக்கூத்து போன்ற விளிம்பு நிலைக்கலைஞர்க்கான, ரசிகர்க்கான நிகழ்த்துக்கலை எந்நாளும் இருந்தததில்லை. அந்தக்காலத்தில், அதாவது அரை நூற்றாண்டுக்கு முன்னால் ரப்பர்த்தோட்டத் தீமிதி விழாக்களின் போது விடிய விடிய கூத்து அரங்கேற்றப்பட்டிருக்கிறது. வட்டாரத்துக்குக் ஒரு நாடகக்குழு உயிர் வாழ்ந்திருக்கிறது. ஆண்களே பெண்வேடமணிந்து

புதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.

புதுவையிலிருந்து புறப்பட்ட ஒரு தமிழ்ப்புயல்.(பேராசிரியர் மு.இளங்கோவன்) 2003 ம் ஆண்டு என் நினைக்கிறேன். கெடா மாநிலத் தமிழ் ஆசிரியர் சங்கத்தோடு இணைந்து சிங்கப்பூரில் நடந்த உலகத்தமிழாசிரியர் மாநாட்டுக்குச் சென்றிருந்தேன். போதானா முறைகளில் நவீன மாறறங்கள் நிகழ்த்தப்படவேண்டும் என்ற நோக்கத்தோடு நடத்தப்பட்ட மாநாடு அது. மூன்று நாட்கள் நடந்த அந்த ஆய்வரங்கில் ஒரு அமர்வு முடிந்து வெளியே வந்த தருணத்தில் இன்னொரு ஆய்வரங்கிலிருந்து சிரிப்பொலி கேட்டுகாண்டிருந்தது. என்னதான் நடக்கிறது என்று நானும் உள்ளே நுழைந்தேன். முப்பது வயதுக்குள் இருக்கும் ஒரு இளம் பேராசிரியர் நாட்டுப்புறப்பாடல் தலைப்பில் பேசிக்கொண்டிருந்தார். நுழைந்த ஒரிரு நிமிடத்தில் நான் அவரின் பேச்சில் லயிக்கத்துவங்கினேன். நாட்டுப்புறப்பாடலைப் பாடியவாறே தன் பேச்சாற்றலால் அனைவரையும் தன்வயப்படுத்திக்கொண்டிருந்தார். அந்தச் சந்திப்பு முடிந்து 2007ல் நான் புதுவையில் ஒரு இலக்கிய நிகழ்வில் மீண்டும் அவரைச் சந்திக்கும் நல்வாய்ப்பு நேர்ந்தது.       “சிங்கப்பூரில் பேசிய இளங்கோவந்தானே நீங்கள்” என்றேன்.       “ஆமாம் “என்றார்.        “மலேசியாவுக்கு வருவ

தாயுமான மண்

குழந்தைகளுடனான ஓர் உல்லாசப்பயணத்தில் கே.எல்.ஐ.ஏ விமான நிலைய வழவழப்பான மொசைக் தரையில் கால் நனைத்து ஈரக்காற்றின் இதம் சுமந்து புத்ரா ஜயா பிரம்மாண்ட புராதனப்புதுமையில் சுயம் மறந்து பெட்றோனாஸ் இரட்டைக் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து அதிசயத்துப் பொங்கி பிரவாகித்து ஏறி வானத்தைத்தொட்டு விதான விசித்திரத்தை முகத்தில் பூசி எல் ஆர் டி விரைவு ரயில் தலயுரசி ஊர்ந்து அதனுடன் பார்வையை நகர்த்தி ஆகாயமாய் உயர்ந்துபோன தாய்மண்ணை வியந்து பின்னர் சீக்ரட் ரெசப்பியில் ஐஸ் கிரீமில் நா குளித்து வெளியேறியதும் பாழடைந்த சேலையில் காதும் கழுத்தும் வெறிச்சோடி முகத்தில் களைப்புச்சோகையுடனான அடி வயிறு மீண்டுமொருமுறை கனத்துத்தொங்க இடுப்பில் இன்னொன்றுடன் சரிந்து பால்வற்றிய புட்டியை உறிஞ்சும் குழந்தையோடு எதற்காகவோ யாருக்காகவோ வெகுநேரம் காத்திருக்கும் அந்தத்தாயின் நினைவே மிஞ்சித்தேங்கியது உல்லாசப்பயணத்தில் Ko.punniavan@gmail.com ஒரு ஏழை புத்தக வியாபாரிக்குக் கடன் தராமல் அலைக்கழிக்க வைத்த முன்னால் கெடா மாநில எழுத்தாளர் சங்கத்தலைவர் பற்றிய தில்லு முல்லு தகவல் விரைவில் இடம் பெறும் எதிர்பாருங்கள

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க முடியாத மேலும் சில பக்கங்கள் கதை 2

கோ.புண்ணியவான் கவிதை யாப்பதில் மட்டுமல்ல இன்னொரு வேலையிலும் திறமை மிக்கவர் புலவர் வேந்தர்கோன். கவிதை யாத்தலிலும் அதனைச் சந்தைப்படுத்தலிலும் உண்டாகும் பின்னடைகளைச் சமாளிக்க அவர் மீண்டும் தனது பிறப்பூருக்கே குடி பெயர்ந்து விடுவார். அவரைப் பிறப்பூரிலே பார்க்கும் நண்பர்கள் “ இது 1001வதா” என்பர். அங்கே எப்போதும் அவருக்கான வேலை காத்திருக்கும். அவருக்கு மட்டுமல்ல தொழில் நுட்பம் தெரிந்த மற்றெல்லாருக்கும் அங்கே வேலை உண்டு. நெல் மூட்டைகளை ஆலையிலிருந்து வெயிலில் காய வைக்கும் களத்துக்கும், களத்திலிருந்து மீண்டும் ஆலைக்கும், ஆலையிலிருந்து ஏற்றுமதி லாரிக்கும் சுமந்து கொண்டு போவதுதான் அந்த வேலை. நெல் மூட்டைகளை சுமப்பது எளிதானதுதான் ஆனால் நெல் மூடைகளைவிட அரிசி மூடைகளைச்சுமப்பதுதான் சிரமம். இரட்டிப்பு பாரம். 60 கிலோ வரை மிரட்டும். அறுபது கிலோவுக்கும் குறைவான எடையுள்ள மனிதர்கள், அதனை லாவகமாக தோளில் ஏற்றி சுமை அழுத்தாத வண்ணம் தூக்கி நடப்பதன் தொழில் நுட்பம் தெரிந்தால்மட்டுமே அது எளிதானதாகத்தெரியும். என்னாலும் இந்தச் சுமையை தோளில் ஏற்றி சுமந்து நடக்க முடியும் என்று ஆழமறியாமல் காலை விட்டவர்கள், முதுகெ

மாலதி தர்மலிங்கம் said

மாலதி தர்மலிங்கம் said பேரங்காடிகள் களவாடிவிட்ட நோட்டுக்களைப்போல..... இந்த வரிகளுக்கு விளக்கம் தந்தால் சிறப்பாக இருக்கும். நன்றி.
என் வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி, கவிதையைப் புரிந்துகொள்ள்ளும் சிரமத்தால் பெரும்பாலான வாசகர்கள் கவிதைப்பக்கத்தைக் கடந்துவிடுகின்றனர். நீங்கள் ஆர்வம் காட்டியமை ஆறுதல் அளிக்கிறது. கவிதைக்கு வருவோம். பேரங்காடிகளில் நமக்குத்தேவையான பொருட்களை விற்பதோடு நில்லாமல் நமக்குத்தேவையற்ற பொருட்களையும் கவர்ச்சியாக காட்சிப்படுத்துகின்றன. அந்த கவர்ச்சியில் ஈர்க்கப்பட்ட நாம் நமக்குத் தேவையற்றது என்பதை கவனத்தில் கொள்ளாமல். புறக்கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு பணம் செலவு செய்து அவற்றை வாங்கிவிடுகிறோம். நம்மை வாங்கவைக்கவே அவை கவர்ச்சியாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது ஒரு வகையில் பகற்கொள்ளைதான். கவிஞன் அன்றைய அனுபவ நீட்சியைக் கவிதையாக எழுதவேண்டுமென்று நினைக்கிறான். ஆனால் வீட்டில் தன் குழந்தைகள் அவனை ஆர்வத்தோடு வரவேற்கும்போது அவன் எழுத நினைத்த கவிதை வரிகள் குழந்தைகளின் வரவேற்பால் மறந்தே போகிறான். பேரங்காடிப்பொருட்கள் அவன் பணத்தைக் களவாடிவிட்டதுபோல குழந்தைகளின் ஆர்வ நிலை அவன் கவிதையைக் ‘களவாடிவிடுகிறது’ என் வலைப்பூவை உங்கள் ஆசிரியர்களிடம் அறிமுகம் செய்யுங்கள். எழுத்தாளர் ஒருவர் ஒரு ஏழை புத்தக வியா

களவாடப்பட்டுவிட்டன கவிதைகளும்

இலக்கை நோக்கிய நெடுஞ்சாலை பயணத்தில் கைக்குழந்தையுடன் காத்திருந்து பின்னுக்கு ஓடி மறைந்தும் கவிதையாய் மீள்பிரசன்னமாகிறாள் பேருந்துக்காக காத்திருக்கும் தருணத்திலும் இரு கால்களையும் விபத்தாலோ வியாதியாலோ இழந்த முகத்தோடு அன்னாந்து கையேந்தும் அவன் இடுப்புக்குக்கீழ் கால்களாய் கவிதைகள் முளைத்தன வியிற்றை நிரப்பிக்கொண்ட புத்தி சுவாதீனமற்ற இளம் தாயொருத்தி சிக்குப்பிடித்த தலையோடும் புராதன உடையோடும் தன்னிலை மறந்து திரிகிறாள் வாகனங்கள் சரசரக்கும் மேய்ன் சாலையில் அப்போதும் ஒர் கவிதை குழந்தையை மையமிட்டிருந்தது பள்ளிச்சீருடையோடு பையன் ஒருவன் தள்ளிக்கொண்டுவந்த மாணவி ஒலித்து வைத்திருந்த புத்தகப்பையைத்தேடி அலைந்தது இன்னுமொரு கவிதை பேரங்காடிப்பையோடு வாசலைதொட்ட வேளையில் ஓடிவந்த குழந்தை முகம்பார்த்ததும் மையமிட்டிருந்த கவிதைகள் சப்தமின்றி கசிந்து போய்விட்டன பேரங்காடிகள் களவாடிவிட்ட நோட்டுக்களைப்போல. கோ.புண்ணியவான். Ko.punniavan@gmail.com

பொறுமையாக இருங்கள்

நீங்கள் எதிர்பார்க்கும் என் பதில்கள் விரைவில் அரங்கேறும் தவணை முறையில் மகனின் திருமண வேலையாக இருக்கிறேன் முடிந்ததும் சந்திப்பேன்

புதிர்

எப்போதுமே பிறகு சொல்கிறேன் என்ற தலைப்புச்செய்தியின் புதிர்த்தன்மையோடு புறப்பட்டுவிடுகிறார் ஊகித்தறியா ஆர்வத்தில் கோடிட்ட இடங்களை நிரப்பிய வண்ணம் கழிகிறது பொழுது அவரின் பிறகு சொல்கிறேன் ஒற்றைசெய்தியைத்தாண்டி என்னிடம் நிறையவே சேர்ந்துவிடுகின்றன புதிர்கள். கோ.புண்ணியவான். மலேசியா Ko.punniavan@gmail.com

புலவர் வேந்தர்கோனின் வரலாற்றிலிருந்து பிரிக்க இயலாத சில பக்கங்கள்

கோ.புண்ணியவான் கூலிம் பட்டணத்திலிருந்து புலவர் வேந்தர்கோன் ஜொகூர் பாசிர் கூடாங் ஊருக்குக் குடிபெயர்ந்போது அவர் சுப்பிரமணியத்திற்கு தர வேண்டிய கடன் தொகை மலேசிய ரிங்கிட் 1240. மலிகைக்கடைக்கு 230. வாடகை வீட்டுக்கு மூன்று மாத பாக்கி. ஒரு மாதத்துக்கு முன்னூறென்றால் மூன்று மாதத்துக்கும் சேர்த்து 900 ஆயிற்று. அவரின் ஆதர்ஸ வாசகர் ஒருவருக்கு 80 வெள்ளி. அவர் வீட்டைக்காலி செய்து ஒரு வாரம் கழித்தே சுப்பிரமணியத்துக்கும் மற்றெல்லா கடன்காரனுக்கும் வெளிச்சமானது. அவர் குடி பெயர்ந்தது தெரிய வந்து அதிர்ச்சியடைந்துபோனார்களே ஒழிய எங்கே போனார் என்று தெரியாமல் போனது வேதனையளித்தது.. அவ்வப்போது அவரைப்பற்றி வரும் பத்திரிகை செய்திகளைப் பார்த்தால்தான் ஆயிற்று. மற்றவர்களுக்கு இன்னும் தெரியாது. கடன்காரர்கள் எல்லாருமே இளிச்சவாயன்கள் அல்ல. கடன் கட்டிமுடிக்கும் வரை விட்டேனா பார் என்று விரட்டிப்பிடித்தவனும் உண்டு. ஒரு முறை குடியிருந்த ஊரைக் காலி செய்துவிட்டு வேற்றூருக்கும் போனபோது விபரமான கடன்காரன் ஒருவனுக்கு ஒரு செய்தியைப் பத்திரிகையில் பார்க்கிறான். பத்திரிகை செய்தி பின் வருமாறு. கடந்த ஆண்டு மறைந்த பெரும்பு