Skip to main content

Posts

Showing posts from December 20, 2009

சினிமாக்காரனுக்கு ஏன் இந்தச் சின்ன புத்தி?

இரண்டு தினங்களுக்கு முன்னர் இதனை எழுத நினைத்து நான்கு ஐந்து வரிகள் எழுதி பின்னர் அழித்துவிட்டேன். எனக்கு எழுதப்பிடிக்கவில்ல. ஆனால் நேற்று ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைப் பார்த்த பின்னர் அதன் பாதிப்பால் மீண்டும் எழுதத்தூண்டியது. வேண்டாம் என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், ஏதோ ஒன்று எழுதிவிடுவதற்கான நெருப்பை மூட்டிக்கொண்டே இருக்கிறது. இந்தச்சகதியெல்லாம் எழுதி நேரத்தை ஏன் வீணாக்கவேண்டும் என்று முடிவெடுத்து ஒதுங்கினாலும், குறுக்கே வந்து எழுதித் தொலைப்பதற்கான ஆதங்கத்தை மேலோங்கச்செய்தது. இப்போதும் சொல்கிறேன் நான் எழுதவில்லை, எனக்குள் புகுந்த ஒன்று தீய சக்தியைப்பற்றி எழுத வைக்கிறது. மலத்தை 24 மணிநேரத்துக்குமேல் உடல் வைத்திருக்க விரும்புவதில்லை. இல்லையா? ஒரு வாரத்துக்கு முன்னால் நடிகர், சூப்பர் ஸ்டார், இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் ரஜினியின் பிறந்த நாள். தமிழை எப்படி உச்சரிக்கவேண்டும் என்று சிவாஜி கணேசன் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். எப்படி இடுப்பை ஆட்டிக்கொண்டு கைகளை மூன்னும் பின்னுமாக (கொசு விரட்டும் மாட்டின் வாலைப்போல) வீசி வீசி வசனத்தை நாக்கில் படாமல் பேசுவது என்ற வித்தையை தமிழ

தமிழ் மொழியைத்தாரை வார்க்க மலேசியத்தமிழன் தயாராயில்லை

தமிழ் மொழியைத்தாரை வார்க்க மலேசியத்தமிழன் தயாராயில்லை கடந்த 18.12.09 ல் அரக்கப்பரக்க ஆரம்பித்ததுதான் சுங்கைப்பட்டாணியில் spm தமிழ் மொழி, தமிழ் இலக்கியப்பாடம் சார்ந்த கவன ஈர்ப்புக்கூட்ட்டம். இரண்டே நாட்கள் அவகாசத்தில் எப்படி மக்களைத்திரட்டுவது என்ற மலைப்பே என்னை இயங்க வைத்தது. 2010 ல் நடப்புக்கு வரப்போகும் புதிய 10 பாட அமலாக்கத்துக்கு முன் விரைந்து செயல்படவேண்டிய கட்டாயம். நடப்புக்கு வந்துவிட்டால் மாற்றுவதற்கு மேலும் சிரமத்தை எதிர் நோக்கவேண்டி இருக்கும். நமக்கு இருக்கவே இருக்கிறது நூதன தொடர்புத் தொழில் நுட்பம். குறுந்தகவல், தகவல் தெரிவிக்க பத்திரிகை வழி சுற்றறிக்கையைத்திணித்து அனுப்புவது, விரைவாகப் பதாகைகளைத்தயார் செய்து சுங்கைப்பட்டாணியின் நாலு திசைகளிலும் ஒட்டி பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்க என அனைத்து வகையான பணியிலும் ஈடுபட்டேன். யாரையும் துணைக்கு அழைக்கலாம் என்றால் என்னைப்போல பணி ஓய்வு பெற்றிருந்தால் பரவாயில்லை. எல்லாருமே வேலை செய்பவர்கள். அதிலும் மொழி மீது பற்று இருத்தல் அவசியம். சும்மா இழுத்துக்கொண்டுபோனால் நிழல்போலத்தான் கூடவே இருப்பார்கள். நம்முடன் இருக்கும் தருணங்களில் அ