Skip to main content

Posts

Showing posts from August 24, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 13

சாய்ந்த கோபுரத்தை நிமிர்த்திக் காட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு-முத்தம் 13.  மிகச்சரியாக கணிக்காமல் செய்யப்பட்ட பிழை ஒன்று, இன்று உலக அதிசயமாக உருவெடுத்துள்ளது. இத்தாலியிலுள்ள பைசா நகர் மக்கள், தங்களது யுத்த வெற்றி ஒன்றைக் கொண்டாட, நிர்மாணித்த கோபுரம் நேராக நிற்காமல் ஒரு பக்கமாக சாயத்தொடங்கியதால் இன்று எல்லோரது கவனத்தையும் ஈர்த்துக்கொண்டிருக்கிறது.         பிசா நகர் அல்லது பைசா நகர் என்று பலவாறு உச்சரிக்கப்படும் ஊர் 1000 வருடங்களுக்கு முன் மிகச்சிறிய கிராமமே. இத்தாலியிலுள்ள மத்தியத் தரைக்கடல் பகுதியில், டஸ்கன் பிரதேசத்தில் ஃபுளோரிடா என்கிற பிரபலமான வணிக நகரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் பைசா நகரம் அமைந்துள்ளது.          கி.பி. 1068 ஆம் ஆண்டு பிசியன்கள் எனப்படும் இத்தாலிய இனக்குழு ஒன்று சிசிலித்தீவின் பாலெர்மோ நகரைத்தாக்கி அங்கிருந்த விலை உயர்ந்த செல்வங்களையும், ஆபரணங்கள், ஆயுதங்கள் ஆகியவற்றை கவர்ந்து வந்தனர். இந்த மாபெரும் வெற்றியைக்கொண்டாடவும், தங்களைப்பற்றி சரித்திரத்தில் ஒரு நிலையான இடத்தை குறிப்பிடும் விதமாகவும் ஒரு கோபுரத்தை கட்ட முடிவெடுத்தனர். அ

முத்தங்களால் நிறைந்த தேசம். முத்தம் 12

 புல்லட்  டிரேய்னில் பிரியாணி உணவு-  முத்தம் 12 காலையில் மாஸ்ல்லா விடுதியைக் காலி செய்துவிட்டு ரோமின் செண்டரல் நிலையத்துக்கு வருகிறோம். அதற்கு முன்னால் நாங்கள் முன்தினம் உணவுக்கடையில் சாப்பிட்ட பிரியாணி வாங்கிப் பொட்டலம் கட்டிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம். மருமகன் இன்னும் கொஞ்சம் தள்ளி இன்னொரு பிரியாணி கடையிருப்பதாகச் சொல்லி அங்கே போய் நான்கு பொட்டலத்தைக் கட்டிக்கொண்டு வந்துவிட்டார். ரயிலிலேயே சாப்பிடுவதாகத் திட்டம். சாதாரண ரயில் அதிவேக புல்லட் ரயில் எப்போதும் போலவே கூட்டம் அலைமோதுகிறது. அதிவிரைவு ரயிலான புல்லட் டிரேய்ன படமெடுக்காமல் மண்ணில் முகம் சாய்த்து படுத்து க் கிடக்கும் பெரு நாகம்போல் காட்சி யளிக்கறது. அதில்தான் ஏறிப்' பியெரண்ஸ்' போகப்போகிறோம் என்று தெரிந்தும் அதன் முன்னால் நின்று படம் எடுத்துக்கொண்டோம். பயணிகளை சந்திக்க காத்திருக்கும் களவாணிப் பெண் காவல்துறையால் அழைத்துச்செல்லப்படும் களவாணி அந்த நிலையத்தில் பயணிகளுக்கு உதவுவதற்கென்றே சில பெண்கள் அங்குமிங்கும் அலைந்து பயணிகளிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர். எல்லாம் அழகிய இளம் பெண்கள

முத்தங்களால் நிறைந்த தேசம் --முத்தம் 11

முத்தம் 11- அனுபவித்தறியாத அந்தக் கால சக்ரவர்த்திகள். மூன்று நாட்களாக இந்தப் பயணம் பற்றி எழுத நேரமில்லை. தொலைகாட்சிப் பேட்டி, வானொலிப் பேட்டி என் அலைந்ததால் எழுத நேரம் கிடைக்கவில்லை.(பிசியாயிட்டம்ல) எங்கள் ஊரிலிருந்து கோலாலம்பூர் போய்வர முழுதாய் இரண்டு நாட்களை விழுங்கிவிடும். இப்போது தொடர்ந்து வாசிக்கலாம். நதிக்கரையோரம் நடந்தே உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றான, கொலிசியம் வந்து சேர்ந்தோம்.  சுற்றிப்பார்க்கும் நேரங்களில் நடந்தே காட்சியைப் பார்த்து வருவது இனிமையான அனுபவம். நாங்கள் அலைந்து திரியவில்லையென்றால் இந்த நதியைப் பார்த்து லயித்திருக்க முடியாது. மக்கள் கூடுமிடம் (கொலிசியத்தைச் சுற்றியுள்ள புராதன இடங்கள்.) ஐரோப்பிய நாடுகளில் ,குறிப்பாக நாங்கள் பார்த்த இந்த தேசங்களில் நீரின் தூய்மை பற்றிச்சொன்னேன். பயணிகளுக்கு அல்லது மக்கள் தாகத்துக்கு குடிக்க ஆங்காங்கே குழாய்கள் அமைத்திருக்கிறார்கள். இந்தக் குழாய் நீர் நேராக நதிகளிலிருந்தே  வருகிறது. நதி நீர் மலையிலிருந்து உற்பத்தியாவதால் இதன் தூய்மை பற்றி சந்தேகிக்க வேண்டியதில்லை என்கிறார்கள். நாங்கள் வாங்கி வைத்திருந்த தண்ணீர்ப் புட்டி கால