Skip to main content

Posts

Showing posts from April 10, 2011

11. பனிப்பொழிவில் 10 நாட்கள்

ஆக்ராவிலிருந்து ஜெய்ப்பூருக்கு போகும் நெடுஞ்சாலையில் ஓர் உணவுக்கடை, சாப்பாட்டுக்கு முன் உண்ணும் டிசெர்ட் வகை, ஹாட்டலில்,ஜெய்ப்பூர் சாலை.  ஜெய்ப்பூர் அரண்மனை, ஆக்ரா  செங்கோட்டை, ஜெய்ப்பூர் கோட்டை   கோட்டைகளும் ராஜ வம்சமும்    ஜெய்ப்பூரிலிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் குஜார் சாதிப்பிரிவினர் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பதாக செய்தி கிடைத்தது. தங்கள் இனத்துக்கு அரசாங்கம் ஒதுக்கிய பொருளாதார வேலை வாய்ப்பு விகிதம் மிகக்குறைவு என்று அது கூட்டப்பட வேண்டுமென்ற நோக்கத்தொடு நடக்கும் போராட்டம் தான் அது. இந்தியாவில் கணக்கற்ற சாதி பிரிவினைகள் உண்டு. ஒரு குறிட்ட சாதிக்குள்ளே நூற்றுக்கணக்கான உட்பிரிவுகள் வேறு. சில இடங்கள் குறிப்பிட்ட உட்பிரிவினருக்குள்ளேதான் மணம் புரிந்து கொள்கிறார்கள். உறவு முறை கொண்டாடுகிறார்கள். அவர்கள் குலதெய்வம் , சிறுதெய்வம் கூட வேறுபடும். இந்து சமயத்தில் மக்கள் புரிதலுக்கேற்ப பல்லாயிரம் சித்தாங்கள் உருவாகின. அவர்கள் வாழ்வு  முறைக்கேற்ப, கலாச்சாரத்திற்கேற்ப, கடவுள்கள, சிறுதெய்னங்கள், குலதெய்வங்கள், கோயில்கள், பல்லாயிரம் ஆண்டுகளாக கூடியும் குறைந்தும், காணாமற்போயும்

10.பனிப்பொழிவில் 10 நாட்கள்

கைகளால் செதுக்கப்பட்ட மார்பல் ஓவியம். தாஜ்மஹாலில் பதிக்கப்பட்ட எல்லா கற்களும் மனிதக் கைகளாலேயே செதுக்கபட்டது. (விடியோ கிளிப்பை டிலீட் செய்ய முடியல)   மிகப் பிரமாண்டமான செங்கோட்டையை விட்டு தாஜ் மஹாலுக்குப் புறப்பட்டோம்.    நாங்கள் போன நேரம் யாரோ வெளிநாட்டு அமைச்சர் தாஜ் மஹாலைக் காண வந்திருப்பதாகச் செய்தி வந்தது. பயணிகள் வெளியே காத்திருந்தனர். மூன்று மணி நேரத்துக்குப் பிறகுதான் பார்க்க முடியும் என்ற தகவல் கிடைத்தது. அது தெரிந்தும் எங்களை தாஜ் மஹாலுக்கு அழைத்துச்சென்ற ஒரு டேக்சி ஓட்டுனர் பணத்தை வாங்கிக்கொண்டு தெரியாததுபோல இருந்துவிட்டார். தாஜ் மஹால் வளாகத்துக்குள் இந்த டேக்சிகள் பயன்படுத்தப் படுகின்றன.  2002ல் வந்த போது ஒட்டக வண்டியில்தான் போனோம். இந்த முறை ஒரு சில ஒட்டகங்களே இருந்தன. பாரம்பரிய முறையில் போக நினைப்பவர்கள் ஒட்டக வண்டியிலும் , குதிரை வண்டியிலும் ஏறிப் போகலாம்.    முன்று மணி நேரம் காத்திருக்க முடியாததால் மீண்டும் பட்டணத்துக்குப் போய் மதிய உணவுக் கடையை தேடிக்கொண்டிருந்தோம். வெளி நாட்டுப் பிரமுகர் வருகையால் அக்ரா ஸ்தம்பித்துப் போயிருந்தது. சாலையில் வண