Skip to main content

உணர்வுக் கொந்தளிப்பால் உடையும் கலைஞன் - காவியத் தலைவன்

 

உணர்வுக் கொந்தளிப்பால் உடையும் கலைஞன் - காவியத் தலைவன்





கலையில் தன்னை ஈடுபடுத்திக்கொள்பர்கள் பல தருணங்களில் உன்மத்தத் தருணங்களைக் கொண்டாடினாலும், போட்டிகளும் பொறாமைகளும் கலைஞர்களுக்குள் பிரிவினையைக் கொண்டுவந்துவிடும் என்பது நடைமுறை யதார்த்தம். இந்த இரண்டு வகை உணர்களும் தவிர்க்க முடியாத நிலையையே கலைஞர்களின் வாழ்வில் இரணடரக் கலந்துவிட்டவை. கலைஞர்கள் வாழ்வை ஆராயும்போது காழ்ப்பு அவர்களின் மேலான வாழ்வை கறை படியச் செய்துவிடுகிறது . ஆனால் கலையில் இதெல்லாம் சகஜம் என்று நினைத்து கடந்து வந்து விடுகிறோம்.

வசந்தபாலனின் காவியத் தலைவன் இந்த உணர்வு நிலையையே மையமிடுகிறது.

பால்ய பருவத்தில் சித்தார்த்தை(காளியப்ப பாகவதர்) சகோதரத்துவத்துடனும், நட்புடனும் அணுக்கமாகும் பிரிதிவி ராஜ்(கோமதி நாயகம்), அவர்கள் வளர வளர அவனின் திறமையின்மேல் காழ்ப்புணர்வையும் வன்மத்தையும் வளர்த்துக்கொள்கிறான். அல்லது  நாடக  உலகம் காழ்ப்புணர்வை அவன் மீது தூவிக்கொண்டே இருந்து, கடைசியில் துருக்குவியலாக அவன் உள்ளுணர்வுக்குள் குவிந்து விடுகிறது. ராஜாபாட் வேடம் தரித்து நடிப்பதே தன் குறிக்கோள் என்ற கனவை வளர்த்துக்கொண்டு வரும் வேளையில்  அதற்கான வாய்ப்பு ஒன்று உருவாகிறது. ராஜபார்ட்டாக நடித்த பொன்வண்ணன் நாசர் தன்னை அங்கீகரிக்காத காரணத்தால் நாடக சபாவை விட்டு வெளியேறுகிறார்.  ராஜபார்ட் நடிகர்களுக்கே உள்ள அகங்காரம் ஒரு கலைஞனின் அழிவுக்குக் காரணமாகிறது. சபா நாடக  உலகின் ராஜபாட் உயர்ந்த பீடம் காலியாக, பிரிதிவி ராஜின் கனவு பலிக்கும் தருணம் உருவாவாதை மிகுந்த நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்திருக்கிருந்த வேளையில்  , அந்த வாய்ப்பை சித்தார்த்திடம் பறிகொடுக்கவேண்டிவருகிறது. கோமதி நாயகம் காளியப்ப பாகவதர்மேல் பொறாமை கொள்ளும் தொடக்கப் புள்ளியாகவும் இக்காட்சி அமைகிறது.

மேடையில் தோன்றி நடிக்கும் தோறும் அதிக கைத்தட்டலைப் பெறும் காளியப்பான் மேல், மேலும் போறாமை கொள்கிறான் கோமதி நாயகம். காளியப்பன் கைத்தட்டலைப் பெறும்போது தன் பொறுமலை கோமதி கடக்கும் கட்டம் அவனின் வன்ம மனம் வெளிப்படுகிறது. பிரிதிவி ராஜ் தன் பாத்திரத்துக்கு எங்கேயும் பங்கம் விளவிக்கவில்லை.

 நாடக சபாவுக்குள் வேதிகாவைச் ( வடிவாம்பாள்) சேர்த்துக்கொண்ட பிறகு கோமதியின் வன்மம் மனம் மேலும் கொந்தளிக்கிறது. வடிவாம்பாள்(வேதிகா) மீதான தன் காதல் ஜெயிக்காமல் போகும் தருணத்தில் காழ்ப்பு தீயாக எரிகிறது கோமதிக்கு. காளியப்பனை அழித்தாலொழிய தன் விருப்பங்கள் நிறைவேறாது என்று திட்டமிட்டு காயை மெல்ல நகர்த்த ஆரம்பித்து தானும் அழியும் நிலையை காவியயத்தலவன் அழகாகவே காட்டுகிறது.காளி இளவரசியோடு காதல் வயப்பட்டதை  நேரடியாக பார்த்துவிட்டபிறகு தன் கனவுப் இருக்கையான ராஜபாட் பீடம் கையெட்டும் தூரத்தில்தான் இருக்கிறது என்று மேலும் தன் வன்மத்தைக் கைகையாள்கிறான் கோமதி. சாமியிடம் காளியின் காதல் பற்றி பற்ற வைக்க   நாடக சபாவின் வீழ்ச்சி தொடங்குகிறது.
கோமதி பின்னர் ராஜபாட் ஆகி காளியை இல்லாமல் செய்யும் சதிகள் காழ்ப்பு மனதின் உச்சமாகக் காண்கிறோம்.
1940 வாக்கில் நாடக உலகமே  ரசிக உள்ளங்களை ஆட்சி புரிந்திருக்கிறது (அது ஒன்று மட்டுமே) என்பதை வசந்தபாலனின் காட்சி அமைப்பு  நிரூபிக்கிறது.


வேதிகா ஆண்களே ஆக்ரமித்த நாடக சபாவுக்குள் தன்னை நுழைத்துக்கொள்ள  ஆடிப்பாடி தன் திறமையை வெளிப்படுத்தும் காட்சி தொடங்கி   இறுதிவரை  தன் ஆளுமையை நிலைக்கச் செய்கிறார். ஆனால் இளவரசியாக வரும் நடிகை அந்த பிம்பத்துக்கான உணர்ச்சியை வெளிப்படுத்த தவறிவிட்டார் என்றே நினைக்கிறேன்

இடைவேளைக்குப் பின்னர் சுதந்திர போராட்ட காலத்தில உண்டாகும் நாடக உலகின்  மாற்றம்  கதையை மையச் சரடு சிதைவுறாமல் நகர உதவியிருக்கிறது. தான் நிர்வாகியாக இருக்கும் நாடக  சபாவுக்குள்  மீண்டும்  இணையும் காளியப்பா பாகவதரின் மீது பழைய வன்மம் மீண்டும் துளிர்க்கிறது கோமதிக்கும். என்னதான் கால ஓட்டத்தில் நலிந்து போனாலும் காளியப்ப பாகவதர் பழைய நடிப்புத் திறன் முத்திரைப் பதிக்கும் இடங்களில் கோமதி கொதித்துத் துன்புறுகிறார். அதற்குத் தீமூட்டும் சம்பவங்களாக  வேதிகா கோமதியின் காதலை மறுப்பதும் அவள் மனம் காளியப்ப பாகவதரை நோக்கியே நகர்வதும் கோமதி நாயகத்தின் வீழ்ச்சிக்கு அடித்தளமிடுகிறது.
காளியப்ப பாகவதர் குடித்து தன்னை சீரழித்துக் கொள்கிறார் என்ற கதையின் அபிப்பாராயம் உக்கிரமான சுதேசியாக காட்ட்டப்படும்போது, சற்று முரண் நகையை உண்டுபண்ணுகிறது. காளியின் குடிப்பழக்கம் எங்கே போனது? ஆனால் நாடக உலகின் மிகப்பெரிய ஆளுமையாக காளியப்ப பாகவதர் நீடிக்கும்போது அந்த முரண் ரசிகனைப் பெரிதாகப் பாதிக்கவில்லை.

சாமியாக வரும் நாசர் தன் தலைமையேற்கும் சபாவின் அதிகார மையமாக  திகழ்கிறார். தன் இரும்புப் பிடியை நழுவ விடாது சபாவின் வீழ்ச்சிக்கு மேலுமொரு காரணமாவது நாடக உலகின் வளர்ச்சிக்குக் காரணமாக இருந்தவர்களே தன் பிடிவாதப் போக்கால் அதன் வீழ்ச்சிக்கு காரணியாவதை காட்டுவது யாதார்த்தமே. பழங்காலத்திலும் நடப்பில் இருந்த கலைஞனின் மன் உணர்வுகள்தான் இவை.
உணர்ச்சியைக் கட்டுப்படுத்தாமல் அது சார்ந்தே தன்னை இயக்கிக்கொள்ளும் மானுடப் பண்பு சுய வீழ்ச்சிக்கு  காரணமாக இருந்திருக்கிறது என அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது காவிய தலைவன்.


ஜெயமோகனின் இலக்கிய ஆளுமைக்கு இந்த படம் பெரும் சவாலாக அமையவில்லை. ஆனாலும் உணர்ச்சிக் கொதிப்பைபைக் காட்ட பாத்திரங்களுக்கு அவரின் வசனம் பெருந் துணையாக இருந்திருக்கிறது.
ஏ.ஆர் ரஹ்மான் நம்மை கிட்டதட்ட முக்கால் நூற்றாண்டுக்கு முன்னரான காலக் கட்டத்துக்குப் பயணிக்கச்செய்திருக்கிறார்.' ஏ மிஸ்டர்  மைனர் என்ன  பாக்குற பாடல் இருவர் படப் பாடலொன்றை நினைவுறுத்துகிறது.
அங்காடித்தெருவுக்குப் பிறகு மீண்டும் ரசிகனை நவரசங்களோடு திளைக்கச் செய்திருக்கிறார் வசந்தபாலன். முற்றிலும் ஒரு கலைப் படமாகத் தருவதற்கு சில இயக்குனர்களுக்கு தீவிரத்தனம் இருந்தாலும், வணிகம் சார்ந்து தன் பிடிவாதத்தைக் கொஞ்சம் தளர்த்தத்தான் வேண்டியிருக்கிறது. நினைவில் நிற்கும் இன்னும் பல காலத்துக்கு இந்தக் காவியத் தலைவன்.

 வழக்கம்போலவே வசந்தபாலன் மீண்டும் ஜெயித்திருக்கிறார்.

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை படைப்பிலக்கியத்துக்குப் புதிய தோற்றம் த