Skip to main content

Posts

Showing posts from April 13, 2014

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

 8.குழப்பம் என்று தலைப்பிடல் சரியாக , அதனால் தெளிவு என்ற புதுத் தலைப்பு  மணிமொழி, பூங்குழலி. விஜயா                                          காலை 9.00 மணிக்கு பினாங்கு பொட்டேனிக்கல் பூங்காவிலிருந்து கொடிமலைக்குச் செல்வதற்கு நானும் பாலமுருகனும் முதலில் போய்ச் சேர்ந்தோம்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு மழைநீர் பூமியை நனைத்திருந்தது .முதுமை தட்டிய அகன்று விரிந்து மரங்கலிருந்து பூக்கள் காற்றில் உதிர்ந்து கொண்டிருந்தது. விஜயா கொடிமலை மலேசியாவின் மிக முக்கியமான சுற்றுலாத்தளம். முன்னர் சிலமுறை வந்திருக்கிறேன். மலை உச்சியை அடைவதற்கும் மின்சார ரயிலில் மலைப் பயணம் செய்ய வேண்டும். மலை உச்சியை நோக்கிச் செங்குத்தாக ஏறும். ரயில் அப்படியே மல்லாக்க கவிழ்ந்துவிடுமோ என்ற அச்சமேற்படும். கிட்டதட்ட மண்ணின் மீது பயணிக்கும் கேபல் கார் போல.ரயில் பாதி தொலைவில் நின்று இன்னொன்றில் ஏறித்தான் பயணத்தைத் தொடரவேண்டும். மின்சார ரயில் ஒரே ரயிலில் உச்சிக்குப் போகலாமே ஏன் இடையில் ரயிலை மாற்றவேண்டும்? என்று கேட்டு ஒரு வெள்ளைக்காரப் பயணி என் அறிவைச் சோதித்துப் பார்த்தான். இரண்டாவது  ரயில் மலை உச்

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 7 ஜெயமோகனின் அடுத்த நிகழ்ச்சி பினாங்கு மாநிலத்தில்  மற்றுமொரு ஆசிரியர் பயிற்சிக்கல்லூரி நடப்பதாய் இருந்து அவர் கேட்டுக்கொண்டதன் பேரிலேயே  அது ரத்தாக்கப் பட்டிருந்தது. எனவே அன்றைய தினம் அவர்கள் மூவரையும் மலேசியக் காடு ஒன்றுக்குள் நுழைந்து இயற்கை தரும் சுகத்தில் அனுபவிக்க வைக்கலாம் என்ற எண்ணம் துளிர்ந்தது. காட்டைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை மூவருக்குள்ளும் எழுந்ததுகூட வியப்படையச் செய்யும் ஒன்றல்ல. நாங்கள் ஊட்டி, ஏற்காடு இலக்கிய முகாமில் கலந்துகொண்டபோது  மாலை காலை வேளைகளில் ஊட்டி காட்டுக்குள் அவர்களோடு காலாற நடந்த இனிய நினைவுகளின் நீட்சியாகவே இதனைக் கருதினேன். மலேசியா அசுர மேம்பாட்டு வேகத்தில் காட்டு நிலங்களை அழித்து ஆயிரக் கணக்கில் வீடுகளையும், சில புதுப்பட்டணங்களையும், விமான நிலையங்களையும் நிறுவிய படியே இருக்கிறது. புத்ரா ஜாயா என்ற புதிய அரசாங்க இலாகாக்களின் பட்டணமாக எழுந்து நிற்கும் இடம் முன்னர் ரப்பர் தோட்டமும் காடும் நிறைந்த இடமாகும். கோடிக்கணக்கான பணம் கொட்டி நிறுவப்பட்ட ஊர். அது இன்றைக்கு தமிழ் இந்தி மலையாளம் தெலுங்கு சினிமாவுக்குக் பின்புலக் காட்சிக்கு கைகொடுத்துக்

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

குழப்பம் 6 (அப்படின்னு ஒன்னு தேடவேண்டி இருக்கு. தலைப்பை வச்சிட்டு தலைய பிச்சுக்க வேண்டி கெடக்குடா சாமி ) கல்லூரியின் நிகழ்ச்சி 6.30 மணிக்கு துவங்கிவிட்டிருந்தது. "ஏற்பாடெல்லாம் பெரிசா செய்யமுடில சார்..ஓய்வில்லாத வேலை. அதோடு கல்லூரி நிர்வாகம் மிகக் கறாரானது. சிலமுறை தமிழ் நிகழ்ச்சி நடத்தப்போக, உள்நாட்டில் ஒரு சிலருக்கு முக்கியத்துவம் தராமல் தமிழ் நாட்டிலிருந்து அறிஞர்களைக் கொண்டு வருகிறார்கள் என எங்கள் மீது... கல்லூரிக்கு அவதூறு பெட்டிசன் ( அநாமதேயக் கடிதம்) அனுப்பப் படுகிறது. பிறகு ஏற்பாட்டாளர்தான் சிக்கலில் மாட்டவேண்டி வருகிறது..ரொம்ப யோசிக்க வேண்டியிருக்கு சார்...." என்று சொல்லிக்கொண்டே இருப்பார் விரிவுரையாளர் தமிழ் மாறன். கனிந்த மரம் மீதுதானே பெட்டிசன் விழும். அப்படியாவது வாழ்ந்து விட்டுப்போகட்டும்..விடுங்கள். ஜெமொ கல்லூரியில் நிகழ்ச்சியெல்லாம் வேண்டாம் என்று சொன்னவிடன் நான் தமிழ்மாறனிடம்தான் சொன்னேன். முதலில் அவர்," பரவால சார்..... மாணவெரெல்லாம் விடுமுறை மூடல  இருக்காங்க... கொறைவான பேர்தான் வருவாங்க போல இருக்கு.. என் கல்லூரிய எடுத்திடுங்க சார்.." என