Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்- முத்தம் 22

சாருக்கானையும் கஜோலையும் டிடல்டிஸ் மலை உச்சியில் பார்த்தோம்.

தில்த்திஸ் மலையின்  உயரம் 10,000 அடி. நான் கேபல் காரில் பயணம் செய்த அனுபத்தில் இதுதான் ஆக உயர்ந்த இடம். லங்காவித்தீவில் தொங்கும் பாலத்தில் நடப்பது விநோத அனுவம் என்றால், இந்த மலையுச்சியில் உறை பனிமலைகளைப் பார்ப்பது இன்னொரு அனுபவம்.

சுவிட்சர்லாந்தில் இந்த டில்ட்டிஸ் மலை மிகப் பிரபலமானது.  ஏஞ்ஜல்  பெர்ட் கேபில் கார் என்று இதனை அழைக்கிறார்கள். இதுதான் உலகத்திலேயே முதன் முதலாக  நிர்மானிக்கப்ப்பட்ட கேபில் கார் சுற்றுலாத்தளம். கோடை காலத்திலும் டில்டிஸ் மலை உச்சி  சைபர் டிகிரி செல்சியஸ் வரை இறங்கி இருக்கிறது. குளிர்காலத்தில அநேகமாக இங்கே யாரும் போக மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.



கேபில் கார் இரண்டு இடங்களில் நிற்கிறது. முதல் இடம் 6000 அடி உயரத்தில் நிற்கிறது. இங்கே இந்திய உணவு வகையான பிரியாணி உணவகம் பார்த்தோம். வெள்ளையர்கள் இன்றைக்கு பிரியாணி வகை உணவை விரும்பு உண்கிறார்கள் என்பது பல இடங்களில் பார்க்கமுடிகிறது. அடுத்த கேபில் கார் 10000 அடி உயரத்தில் நம்மை இறக்கிவிடுகிறது. 6000 அடி உயரத்தில் இறங்கிய போதே குளிர் ஆறாயிரம் ஊசிகள் கொண்டு செருகவதாக இருந்தது.10,000 அடி உயரத்தை அடையும்போது 10000 ஊசிகொண்டு தாக்குவதாக இருக்கும்.அல்லது அதற்கும் மேலும். சைபர் டிகிரி செல்செயஸ் என்பதே கடுங்குளிர்தான். நான் சீனாவில்  மைனஸ் 5 வரை குளிர் அனுபவித்தேன். அப்போது அங்கே குளிர்காலம். அதற்கும் கீழே போகும் போது பனி உறையத் தொடங்கும். சாலைகளைப் பனிமூடிவிடும். வெளியில் செல்வதே சிரமமாக இருக்கும்.

சுற்றுலா பயணிகளில் காபில் காரில் ஏறி இறங்க உதவ ஒரு பணிப்பெண்ணை சந்தித்துப்பேசினேன். அங்கே அவள்  கோடைகால விடுமுறையில் வேலை செய்ய ஜெர்மனியிலிருந்து வந்தவள். ஜெர்மனியில் அவள் படித்துக்கொண்டிருக்கிறாள். அவளின் ஒருநாள் வருமானம் 300 மலேசிய ரிங்கிட்.  தனுடைய ஒராண்டுக்கான கல்விச்செலவை ஒரு கோடை விடுமுறையில் சம்பாதித்து விடுவாளாம்.

கேபில் காரின் உள்ளே பணிப்பெண்
கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் மலை உச்சியை அடைந்தது கேபில் கார்.
இறங்கிய உடனே பனிமலைக்குப் போனோம். பனி பூப்போல கொட்டிக்கொண்டு இருந்தது. போகும் பாதையில்தான் சாருக்கானையும் கஜோலையும் பார்த்தோம். இருவரும் கட்டிப்பிடித்துக்கொண்டு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தார்கள். அட சாருக் கான். நாங்கள் அவரிடம் பேசவில்லை. பேசும் நிலையிலும் இல்லை. இருவருமே போஸ் கொடுப்பதில் ரொம்ப பிசியாக இருந்தார்கள். போவோர் வருவோர் எல்லாம் படம் பிடித்துக்கொண்டிருந்தால் பிசி என்றுதானேஅர்த்தம். யாரோடும் அவர் பேசாததற்குக் காரணம் அவரும் காஜோலும் கட்டவுட்டாக வைக்கப்பட்டிருந்ததே காரணம்!!

ஹி ஹி ஏமாந்துட்டீங்களா?

மலை முழுக்க வெண்பனி மூடிக்கிடக்கிறது. பெரியவர்கள் குழந்தைகள் பனிப்பூவை உருட்டி ஒருவர் மேல் ஒருவர் எறிகிறார்கள். சருக்கி விளையாடுகிறார்கள்.
அநத தளத்திலேயே ஐஸ்கட்டியின் மேல் நடக்கும் இடத்தையும், ஒரு குகையினுள் 50 மீட்டருக்கு  நடந்து செல்லும் வசதியையும் செய்து கொடுத்த்ருக்கிறார்கள். பயங்கரமாக வழுக்குகிறது. போகப் போக குளிர் சரம்மாறியாகாக் குத்துகிறது. ஒரு கட்டத்தில் திரும்பிவிடலாமே என்று நினைத்தேன்.  அது ஒரு வட்டம் தொடங்கிய இடத்தின் வேறு வாசலுக்கு வந்துவிடுகிறோம்.
குகையினுள் எல்லாபுறத்திலும்  ஐஸ்  கூடிக்கிடக்கிறது. நானும் என் மனைவியும்.
ஐஸ் குகைக்குப் போகுமுன்






















லுசேனோ நகர் வீதி

லுசேனோ ஏரிக்கறை



Add caption












வெளியே வருவதற்குமுன் குளிருலிருந்து தப்பித்தால்போதும் என்றாகி விடுகிறது.

மீண்டும் கீழே இறங்கி  30 நிமிட தூரத்திலுள்ள ரிஹியான போல்ஸ் (நீர்வீழ்ச்சிக்குக்) கிளம்பினோம்.

தொடரும்....

Comments

Anonymous said…
very nice artical
வணக்கம்
ஐயா.

அழகிய படங்கள் ஒவ்வொன்றையும் பற்றி சொல்லிய விதம் நன்றாக உள்ளது பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...