Skip to main content

Posts

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந
Recent posts

3. சை. பீர் முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

  சை. பீர் முகம்மதுவை நான் முதன் முதலில் சந்தித்தது கூலிம் தியான ஆஸ்ரமத்தில்.  என் நிஜம் என்ற முதல் சிறுகதைத் தொகுப்பு அங்கே வெளியிட ஏற்பாடாகியிருந்தது. 1999 வெளியான அந்நூலின்  பின்னட்டையில் என்னை அறிமுகம் செய்து எழுதியிருந்தார்.  என் நூல் வெளியீட்டுக்கு அவரை அழைக்கவில்லை. மனிதன் தொலைதூரத்திலிருந்து வரவேண்டுமே என்ற காரணத்தால் அவருக்குச் தகவலை மட்டுமே அனுப்பியிருந்தேன். ஆனால் நிகழ்ச்சி துவங்க ஐந்து நிமிடத்துக்கு முன்னால் அவருடைய பழைய மெர்சடிஸ் ஆஸ்ரம வளாகத்துக்குள் நுழைந்தது. அதில்தான் அவருடைய வேரும் வாழ்வும் பெருந்தொகுப்பை அறிமுகம் செய்ய ஜெயகாந்தனை மலேசிய முழுதும் ஏற்றி வலம் வந்தார். சிரித்துக்கொண்டே காரிலிருந்து இறங்கியவரை ஓடிப்போய் வரவேற்றேன். "என்னையா இது வரேன்னு ஒரு வார்த்தை சொல்லலியே" என்றேன். அவருடன் சிங்கப்பூர் மணிமாறன், கவிஞர் க. இளமணி ஆகியோர் உடன் வந்திருந்தனர்.  அப்போதெல்லாம் கைப்பேசி  கிடையாது. எல்லாம் கடிதப் போக்குவரத்துதான். கடிதம் பற்றிச் சொல்லும்போது அவர் கையெழுத்தின் கலையழகு நினைவைத் தட்டுகிறது. கையெழுத்து முத்து முத்தாய் எல்லாம் இருக்காது. ஒரே சீராய் இருக்கும்

2.சை.பீர்முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

2.  சை.பீர் அவர்களுக்கு உடல் நலம் குன்றி வருவதை அவரோடு உரையாடுவதிலிருந்து தெரிந்து கொண்டேன். மிகுந்த சோர்வாக இருந்தார். குரல் உற்சாகம் குன்றி ஒலித்தது. நான் ஒரு கட்டுரை எழுதியுள்ளேன். உங்கள் புலனத்துக்கு அனுப்பிவைக்கிறேன் என்றார். கட்டுரை இலக்கிய அரசியல் தொடர்பானது. சற்று காரசாரமாக இருந்தது. கைப்பேசியிலேயே தட்டச்சு செய்திருக்கிறார். நான் சொன்னேன் கட்டுரை நல்லா வந்திருக்கு. அதனை விடாமல் தொடருங்கள் என்றேன். அவர் குரலில் இப்போது உற்சாகம் தொணித்தது.கலை வாழ்க்கையில் உள்ளவர்களுக்கு அவர்கள் ஈடுபட்ட கலையைப் பற்றிப் பேசும்போது அவர்கள் பரவசமடைவதைப் பார்த்திருக்கிறேன். பிறவற்றைப் பற்றி உரையாடும்போது இல்லாத  மகிழ்ச்சி அவர்கள் சார்ந்த கலை இயக்கத்தைத் தொட்டுப் பேசும்போது முகிழ்ந்துவிடும். இது கலை நமக்குத் தருகின்ற பிரத்தியேக உற்சாக உணர்வு. நான் சை பீரிடம் நீங்கள் விடாமல் எதையாவது எழுதிக் கொண்டே இருங்கள். அந்தப் படைப்பை எழுதி முடிக்கும்போதும் பிறர் வாசிப்புக்குப் போகும்போது, அது பற்றிப் பேசப்படும் போதும் நீங்கள் உங்களை மீட்டுக்கொள்ள முடியும் என்றேன். அவர் நான் இந்தக் கட்டுரையை முடித்து நூலாக்கப் போகி

சை.பீர் முகம்மது எனும் இலக்கிய வம்பாளி

 சை. பீர் முகம்மது என்னும் இலக்கிய வம்பாளி. சை.பீர்முகம்மது வெள்ளைச் சட்டையில் .,எம் ஏ இளஞ்செல்வன் இல்லத்தில் ஒருமுறை சந்தித்துக் கொண்டபோது.  நான் சை, பீர் முகம்மதுவை ஆறு மாதங்களுக்கு முன்னர்தான் சந்தித்தேன். நீரிழிவு நோயின் காரணமாக அவருடைய  ஒரு கால் நீக்கப்பட்டிருந்தது அவர் சொல்லியே தெரிய வந்தது. உடலுறுப்பின் முக்கியமான ஒரு உறுப்பை இழக்கும்போது உண்டான கவலை அவரை எந்த அளவுக்குப் பாதித்திருக்கும் என்று என்னால் உணரமுடிந்தது.  அவருக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு அவர் இல்லத்துக்கே தேடிப் போனேன். அவர் காலை இழந்து சில மாதங்கள் கழிந்திருந்ததால் அவர் இயல்பாகத்தான் இருந்தார்.அதனால் நானும் என் சோகத்தை அவரிடம் கொட்டும் எண்ணத்தைக் கைவிட்டேன்.  எப்போதும் போலவே  நடந்துகொண்டேன். அந்த இழப்பை தன் மனதளவில் மூடிக்கொண்டதைப் போல இருந்தது அவர் அந்தக் காலை கைலியால் மூடியிருந்தந்து, நோய்மையில் உள்ளவர்களிடம் அந்தக் குறிப்பிட்ட நோய் பற்றி பேச்சை வளர்ப்பது அந்த நோயின் எண்ணத்தைக் கடுமையாக்குவதற்கு ஒப்பானதாகும். இந்த ஞானம் நாம் கடுமையான நோயை எதிர்கொள்ளும்போது மட்டுமே தன்னிச்சையாகவே  உண்டாகிவிடும். அவரின் பேச்சு இலக்க

.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற் சோழன் விருதும்

7.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக  இலக்கிய விழாவும் கரிகாற் சோழன் விருதும் கரிகாற் சோழன் சிறந்த நூலுக்கான விருது விழா மாலை 5.00 மணிக்குத் தொடங்கவிருந்தது. என் நூலுக்கு நான் விருது பெறப்போகிறேன் என்ற திகைப்போ பதட்டமோ நான் உணராமல் இருந்தது எனக்கே  வியப்பாக இருந்தது. நான் என சிறுகதைகளுக்கும் நாவலுக்கும், கவிதைகளுக்கும் நிறைய பரிசுகளும் பெற்றிருக்கிறேன். அப்போதெல்லாம் உண்டான மகிழ்ச்சி இந்த விருதுக்கு ஏற்படவில்லை. அதற்கு ஒரு காரணம் இருந்ததை பின்னர் நான் உணர்ந்தேன். நான் எழுதிய கையறு நாவல் மலேசியாவிலும்  சிங்கப்பூரிலும் தமிழகத்திலும் பரவலாகவே வாசிக்கப்பட்டு மதிப்புரைகளும் விமர்சனங்களும் பல்வேறு மின்னிதழ்களில் வந்த வண்ணம் இருந்தன.  ஒரு நூலுக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் அவை. அதுவே படைப்பாளனுக்குக் கிடைத்த மதிப்புமிக்க விருதுகள். அதன்பொருட்டே அதீத மகிழ்ச்சி உண்டாகவில்லை. நூலுக்கான வாசகர்/ விமர்சகர் மதிப்பை முன்னமேயே பெற்றுவிட்டதால் நான் என்னை இயல்பாக எதிர்கொண்டதாகத்தான் உணர்ந்தேன். என் முகநூலில் Punniavan Govindasamy அவற்றைப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.  கரிகாற்சோழன் விருதுக்கு நான் முதலில் ந

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்

  அன்பழகன்,சைமன், முனைவர் குறிஞ்சி வேந்தன், கோ.புண்ணியவான் 7. ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்   நவம்பர்   28 காலை ரம்யாஸ் விடுதியின் ஐந்தாவது மாடியில் காலை உணவு வகைகள் 100க்கு மேல் இருந்தன. You name it என்று  சொல்வதற்கொப்ப எண்ணற்ற வகைகள். ஆனால் என் வயிறு ஒரு இட்லிக்கு மட்டுமே திறந்து மூடிக்கொள்ளும். ஒரு கப் காப்பி அவ்வளவே. மணி 11.00 காலையில் வாடகைக் கார் வரும் கல்லணை பார்க்கலாம் என்று சொன்னார் சைமன்.நான் கல்லணையை ஏற்கனவே இருமுறை பார்த்துவிட்டேன். என்னைக் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு எடுக்கப்பட்டுவிட்டிருந்தது.கடந்த மாதம் மனைவியோடு போனபோதுகூட பார்த்துவிட்டுத்தான் வந்தேன். எனக்கு விருப்பமில்லை என்றாலும் நண்பர்கள் சேர்ந்து எடுத்த முடிவு.கலந்து கொண்டேன். திரண்டுவந்து  மோதிச் சீறும் ஆற்றைப்பார்ப்பது எப்போதுமே மனம் களிப்புறும். பஞ்சுப்பொதிகளாய் விம்மிப் புடைத்து உடையும் குமிழிகள் நிலையில்லாத மானுட வாழ்வைப் பிரதிபலிப்பவை.பரந்து விரிந்து காட்சிதரும் நதியை கண்கள் தரிசிப்பது ஒரு வகை சுகானுபவம். குளிர்மை உள்ளுடல் முழுதும் நிலத்திலிருந்து ஊறும் ஊற்றெனப் பரவும். தொலைபேச

ஹோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.

6. ஜோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.     நான் நீண்ட படைப்பிலக்கியம் எழுதுவதில் விருப்பம் இல்லாதவன். என் விருப்பம் அதுவாக இருந்தாலும், நான் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கிறேன் தொடங்கிவிட்டால் படைப்பு நம்மைத் தொடர்ந்து எழுத அறைகூவல் விடுத்துக்கொண்டே இருக்கும். அதுதான் கலையின் மகத்துவம்.தொடங்கியவுடனே நம் சிந்தனை முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது.இவ்வளவு அனுபவங்களா என்றே நாம் பிரமிக்கிறோம். நாம் கடந்துவந்த உப்புக்குதவாத செய்லகள்கூட அழகியலால் கவித்துவத்தால் அவை வாசிக்கத் தகுந்த சுவாரஸ்யத்தை தனக்குள்ளே புதைத்துவைத்துக்கொண்டு எழுதும்போது இன்னும் சீற்றத்தோடு வெளிப்பட்டுவிடுகின்றன. இயல்பாகவே கடிவாளம் இழுக்கப்பட்டவுடன் முன்னோக்கிப் பாயும் மனித சிந்தனை, படைப்பாற்றலின் வெளிப்பாடு, அதற்கு ஈடாக இயங்கும் மொழி நீண்ட படைப்புக்கு வழி வகுத்துவிடுகிறது. எனக்கு நாவல் எழுத வராது என்று என் நண்பர் சொன்னவுடன் நான் இதைத்தான் சொன்னேன். முதல் அத்தியாயத்தை எழுதிவிடுங்கள் பின்னர் அதுவாகவே இழுத்துவைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல உந்தும் என்று. கலை மனிதனுக்குக் கொடுப்பது பரவசம் மட்டுமல்ல தன்ன