Skip to main content

Posts

Showing posts from February 12, 2012

தாமான் பெர்வீரா இடைநிலைப்பள்ளியில் சிறுகதைப் பயிலரங்கு

 துணை முதல்வர் திரு கோவிந்தசாமி  ஆசிரியர் முனிச்செல்வியுடன் நான் என் எழுத்துச் சகோதரி முனிச்செல்வி  ஏற்கனவே தான் போதித்த பள்ளிகளில் சிறுகதைப் பயிலரங்கு நடத்த என்னை அழைத்திருக்கிறார். அது ஒரு அலாதியான அனுபவம். தானும் ஒரு எழுத்தாளர் என்பதால் அவரிடம் படைப்பிலக்கியம் பற்றிய வற்றாத பற்று  ஊறிக்கொண்டே இருக்கிறது . இம்முறையும் மாணவர் பயனுற என்னை தற்போது அவர் பணியாற்றும் தாமான் பெர்வீரா இடைநிலைப் பள்ளியில் ஒரு பயிலரங்கை நடத்தச் சொல்லி கேட்டுக்கொண்டதிலிருந்து இலக்கியம் சார்ந்த அவரின் ஈர்ப்பு நன்கு புலனாகிறது.( ஏன் அவரையே அழைக்கிறீர்கள் ,எனக்கு ஒரு  வாய்ப்பு தரலாமல்லவா என்று யாராவது உங்களைக் கேட்டும் வரலாம் செல்வி) ஒரு மூன்றாண்டு காலம் தன்னுடைய முதுகலைப் படிப்பை வெற்றிகரமாய் முடித்துவிட்டு இந்தப் புதிய பள்ளிக்கு மாற்றலாகி வந்திருக்கிறார் அவர்.எங்கே போனாலும் மாணவர்களோடு அன்பான தொடர்பு வைத்திருப்பவர் இவர். அவர்களுக்கும் படைப்பிலக்கிய ஆற்றல் வளரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர். கடந்த வெள்ளிக்கிழமை 17.2.2012 ல் சரியாக 12.50 க்குப் பள்ளியை அடைந்ததும் என்னை வரவேற்றவர் அப்பள்ளியின

இரண்டாவது ஆன்மா

நான் முன்பிருந்த வீட்டுக்குப் போனபோதுதான் எனக்கு இரண்டு ஆன்மாக்கள் இருப்பதாக உணர்ந்தேன் வீட்டின் தூண் ஒன்றைக் கெட்டியாகப் பிடித்தவாறு இருந்தது அது வீட்டைக் காலி செய்துவிட்டு விலகியபோது அது அங்கேயே தங்கிவிட்டிருக்கக்கூடும் கடைசியாக ஒருமுறை திரும்பிப் பார்க்கவைத்ததும் அதுவாக ஏன் இருக்கமுடியாது வீட்டை விட்டுப் பிரியும் தருணத்தில் ஒரே பிஸ்கட்டை நாயொன்று கவ்வ்¢ச்சென்ற பசித்த குழந்தையின் சோகம் கனத்திருந்தது என் குரல்களின் அசரீரியை சேகரித்து வைத்து ஒலித்துக்காட்டியது என் பாதத்தடங்கள் படியாத இடமொன்றுண்டா என்று கேலி செய்தது என் படுக்கையறையிலிருந்து வரும் குரட்டையொலி சன்னமாகக் கசிந்தது கொய்யா மரத்தை அன்னாந்தவாறு வீட்டை மீண்டும் வாங்கிவிடலாமே என்று என் மகன் கேட்டான்  இரண்டாவது ஆன்மாவிடம் எப்படி விலை பேசுவது?