Skip to main content

Posts

Showing posts from April 7, 2013

தெய்வம் தாய்க்கு ஈடாகுமா?

இலக்கிய நண்பர்கள் ஆறேழு பேர் கூலிம் தியான ஆசிரமத்தில மாதமொருமுறை கூடி இலக்கியம் சார்ந்த உரையாடல்களை  நடத்தி வருகிறோம். இரவு 7.30 மணிக்கு உரையாட ஆரம்பித்தால் நள்ளிரவு நெருங்கும் வரை தொடரும். அது எங்கள் வாழ்நாளில் பதிவாகும் இனிமையான அனுபவப் பொழுதுகள். நன்கைந்து மணி நேரம் அப்படி என்னதான் பேசுகிறீர்கள் என்று நக்கலோடு பிற நண்பர்கள் கேட்கும்போது  இலக்கியத்திலிருந்து அந்நியமானவர்களின் கேட்கின்ற நியாமான கேள்வியென்றே எடுத்துக் கொள்வோம்.  இலக்கிய நூல்கள் பக்கம் வராதவர்களிடம் சொல்லி விளக்குவதில் பயனில்லை . எங்களை வழி மாறிப்போன ஆடுகள் என்று அவர்கள் கருதுகிறார்கள் பாவம். ஆனால் அவர்கள்தான் வழி தவறிப் போனவர்கள் என்று கருதவேண்டியுள்ளது. உரையாடல்கள் மூலமே படைப்பின் ஆழ அகலத்தை உழ முடியும் என அறிந்திருந்தோம். படைப்பாளருக்குக் கிட்டாத ஆழம் பலசமயங்களில் எங்களின் உரையாடல்கள் மூலம் தட்டுப்பட்டிருக்கிறது! எனவே இதுபோன்ற  எங்கள் சந்திப்புகள் ஆத்மார்த்தமானது ; காதலைப் போல. காதலிப்பவர்கள் தங்களை மறந்து வெகு நேரம் பேசிக்கொண்டிருப்பார்கள். ஏன் விடிய விடியக் கூட உரையாடிக் கொண்டிருப்பார்கள். அப்படி என்னதான் பேசினீர்