Skip to main content

Posts

Showing posts from October 18, 2009

மௌன வதம்

நான் வாங்கிய கடனிலிருந்தும் அவன் கொடுத்த கடனிலிருந்தும் நட்பை முறிக்க முனையாத காரணங்களால் வெற்று வார்த்தைகளின் கோலமாகிறது இருவர் சந்திப்பும் சொற்களின் இடைவெளியே விரிகிற மௌனம் அதனைப்பற்றியே சிந்தித்தவாறு

சாமி கண்ண குத்திடுச்சு

போன ஞாயிற்றுக்கிழமை கோயில் கூட்டத்தின் போது சலசலப்பு கூடியிருந்ததது. பதினெட்டாம் கட்டை கோய்ந்தசாமியைக் இந்தமுறை கரகப்பூசாரியாய் கூப்பிடலாமென்று தலைவர் சொன்னார். சேரா எஸ்டேட் மாரியம்மன் கோயில் தீமிதியை நல்லபடியா நடத்திக்கொடுத்தார்.பேசிய தொகைக்கு மேல அஞ்சி காசுகூட வாங்கலன்னு சேரா கோயில் தலைவர் சொன்னதாக தலைவர் சிபாரிசு செய்தார். “கரைக்டா டயத்துக்கு வந்திடுவார்,கொற வக்காம செஞ்சி முடிச்சிட்ட பிறகுதான் தொகையைக்கேப்பார்,” என்று மேலும் சொன்னார் தலைவர். “ வருஷா வருஷம் பாரிட் புந்தார்லேர்ந்து சாமிக்கண்ணு கரகப்பூசாரியத்தான கூப்பிடுவோம்.அவருக்கிட்ட என்னா கொறைய கண்டாரு தலைவரு? சொல்லட்டும்.ஏன் திடீர் பல்டி தலைவரே”.பக்கத்தில் அமர்ந்திருந்த காளிமுத்து அதற்கு ஆமோதிப்பதைப்போல் தலையை ஆட்டினார். “ மொத நாளு ஒபயம்,எல்லக்கட்டு,தீமிதி அன்னிக்குள்ள சாங்கியம் ,மறுநா சாமி ஊர்வலம், அப்புறம் மூனாநாளு இடும்பன் பூச எல்லாத்துக்கும் சேத்து அவரு பேசன தொக முன்னூத்து அம்பது வெள்ளி.அட்வான்ஸ் நூறு வெள்ளிய பேசி முடிக்கும்போது கண்டிசனா அதுக்கு மேக்கொண்டு காசு கொடுக்க முடியாது, கமிட்டியில முடிவெடுத்தாச்சின்னு சொல்லிட்டு

உதிரும் வண்ணம்

நான் வாங்கி வந்த சேலை தாமன்னா கட்டிய சேலையில் கசங்கிப்போனது செய்திக்கு 7.30க்கு வரும் பெண்களோடு ஒப்பீடு கண்டு நைந்துபோனது விளம்பர இடைவேளையில் வண்ண வண்ணமாய் வீசி ஒய்யாரம் காட்டும் பெண்களிடம் கிழிந்து தார் தாரானது. இப்படியெல்லாம் பார்த்து வாங்க தெரவிசு இல்லையே என்று சொன்னபோது கோ.புண்ணியவான் ko.punniavan@gmail.com

நெரிசலின் இடுக்கில் நட்பு

எதிர்ப்படல் ஒன்றில் பரிட்சையமான முகம் கண்களில் மின்ன திரும்பிப்பார்க்கிறேன் அவரைபோலவே நானும் பால்யங்களிலோ பள்ளியிலோ பணியிடத்திலோ வேரெங்கேயோ வேரெப்போதோ பழகியதாய்... அவசர வாழ்வின் நெருக்கடியில் தூசி தட்டாமலும் புன்னகைக்கக்கூட அவகாசமின்றியும் புறப்பட்டுவிடுகிறேன் பழையபடி....