Skip to main content

Posts

Showing posts from August 14, 2011

ஒரு சிறுகதை எப்படித் துவங்கப்படவேண்டும்?

             என்னைப் பொறுத்தவரை சிறுகதை எழுதுவது மிகச் சவால்மிக்கதாகவே இருந்து வருகிறது. முப்பது ஆண்டுகளுக்கு மேல் சிறுகதை வடிப்பதில் தீவிர  ஈடுபாடு கொண்டிருந்தாலும் அதன் சூட்சம முடிச்சை அவிழ்ப்பதில் சிக்கல் இருந்துகொண்டே இருக்கிறது. சூட்சமம் என்பது சிறுகதை வடிப்பதின் எல்லாத் திக்கிலிருந்தும் தாக்கும் பண்பாகும். வடிவ நேர்த்தியை முதலில் மனதில் அமைத்துக்கொண்டாலும் இதனை எழுதலாமா வேண்டாமா என்ற புதிர் தடைக்கல்லாகவே குறுக்கே நிற்கிறது. இக்கதையை எழுதினால் வெற்றி பெறுமா என்ற கேள்வியின் உக்கிரத்தில் பல கதைகள் பிறந்தும், பிறவாமலேயே கதை முடிந்துவிட்டது. ஜெயமோகன் ஒருமுறை மலேசியா வந்தபோது கதைகள் பல அரைகுறையாய் நின்று போகிறது. இதற்கு என்ன செய்யலாம் என்று கேட்டேன். அதனைத்தூக்கிப் போட்டு விட்டு புதிய கதையில் கவனம் செலுத்துங்கள் என்று கூறினார். அரைகுறையாய் ஸ்தம்பித்துப்போன கதைகளின் எண்ணிக்கை எத்தனை இருக்கும் எல்லா மொழிகளிலும்? அவற்றுள் சிறந்த கதைகள் எத்தனை  முடிவு பெறாமலேயே சீரழிந்து போயிருக்கும்? எதுதான் வீணாகவில்லை. எல்லாமே பயன்படாமல் புதையுண்டு போனதுண்டுதான் . புதைந்து போனதுபற்றி கவலைப்பட்டால் புத