Skip to main content

Posts

Showing posts from September 7, 2014

முத்தங்களால் நிறைந்த தேசம் - முத்தம் 15

முத்தம் 15 அன்பு வாசக நண்பர்களே, என்னுடைய நாவலான 'செலாஞ்சார் அம்பாட்' தேசிய நில நிதி கூட்டுறவு சங்க கலை இலக்கிய அறவாரியத்தின் 2012/13 ஆம் ஆண்டுக்கான சிறந்த புத்தகப் பரிசை ரி.ம.10000.00 வென்றதிலிருந்து அதன்  வேலை நிமித்தமாக இந்தத் தொடரை சில நாட்கள் எழுதமுடியாமல் போயிற்று. இருந்தாலும் இன்றிலிருந்து அதனைத் தொடர்கிறேன். இந்த நூலை கோலாலம்பூரில் வெளியிடும்படி என் வாசக நண்பர்கள் கேட்டுக்கொண்டபடியால் எதிர்வரும் 14.9.14 ஞாயிறன்று, மாலை 4.00க்கு ,கோலாலம்பூர் தே.நி.நிதி கூட்டுறவு சங்கக் கட்டடத்தில் , தான் ஶ்ரீ சோமா  அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வுக்கு உங்களை அன்போடு அழைக்கிறேன். நூலின் விலை 15 ரிங்கிட் மட்டுமே. அந்தத் தொகையைக் கொடுத்து வாங்கினாலே நான் பெருமை அடைவேன். முத்தம் 15-  நீரின் சாரலில் வெனிஸ் நகரம் பின்னிரவு மணி 1.00க்கு வெய்ன்சா நகர ரயிவே ஸ்டேசனில் இறக்கிவிட்டது புல்லட் ரயில்.வெனிசைத்தான் வேய்ன்சா என்கிறார்கள். நீங்கள் வெனிஸ் என்று சொன்னால் உள்ளூர்க்காரர்களுக்குப் புரியாது. வெய்ண் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் எப்படிச்சொன்னாலும் அது அழகுதான்.