Skip to main content

Posts

Showing posts from July 22, 2012

பேயச்சம்

கழுத்தைக்கடித்து குருதியுறுஞ்சும் பேயாகவே மாரியம்மன் கோயிலேறும் சடக்கில் தலைகோதி நின்ற புளிய மரம் அச்சுறுத்திய காலம் ஒன்றுண்டு அம்மாதான் சொல்வாள் ரத்தக் காட்டேறி மரமென்று  பழம் பறிக்க பள்ளி முடிந்து கழியெறியும் போதெல்லாம் அதன் குச்சியொடித்து விலாசும்போதே தோலுறித்த ரத்தத் தடையங்கள் உறுதிப் படுத்தியது உண்மைதானென்று வெயில் விரட்டும் அதன் குளிர் நிழலில் வியர்வை நனைய விளையாடும் போதில் பேய் நினைவு மெல்ல ஒதுங்கத் தொடங்கியது நோய் நொடி விரட்டும் அதன் இலை மருத்தவம் பார்த்துப் பழகி நன்பகல் நிழலாய் கறையத்தொடங்கியது கொஞ்சம் மாநுட நலம் காக்கும் கரிசனை நோக்கம் மரத்தை நேசிக்க நேர்ந்தது கருவாட்டுக் குழம்புக்கும் ஆத்துமீன் கறிக்கும் புளிப்பு  சுவை கூட்டியபோதும் பயம் பறந்தோடி பாசம் மருவியது காய்ந்து சுல்லிகள் நின்றெரியும் தீயில் தோளில் ஒட்டா புளியம் பழமாய் அச்சம் ஒட்டாது ஓடியது கிளையேறி ஒளிந்து விளையாடும் விறுவிறுப்பில் கிலி அருதியாய்  அழிந்தொழிந்தது கல்லெறிந்து கல்லெறிந்தே காட்டேரியை விரட்டி அடித்தோமோ என்னவோ கித்தா மரங்கள் இலையுதிரில் எலும்