Skip to main content

Posts

Showing posts from March 6, 2011

2.பனிப்பொழிவில் 10 நாட்கள்

சிம்லாவுக்குப் போகும் வழியிலும் சிம்லா விடுதியிலும், சிம்லா   மலையுச்சியிலும் 2.  மருமகன் முன்சீட்டில் இடம்பிடித்து அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். இந்த சாலையில் அவருக்கு தூக்கம் எப்படித்தான் வருகிறது என்று தெரியவில்லை. கொடுத்து வைத்த மனிதன். சாய்ந்தவுடன் தூக்கம் பிடித்துவிடுகிறது. என்னைச் சொல்லுங்கள் தூக்கத்து முன்னால் பயணத் துக்கம் முந்திக்கொள்கிறது. மருமகன் தூங்கட்டும் எழுந்ததும் காரை ஓட்டசொல்லலாம் என்று முடிவெடுத்திருந்தேன்.    தோமஸ் இறங்கி தேநீர் அருந்தச் சென்றார். சாலை ஒரக் கடை. கடை நிறைய பயணிகள் இருந்தனர். சூடான தேனீர், நான், சப்பாத்தி எனப் பலவகைப் பலகாரங்கள் இருந்தன. எனக்கு எதையும் சாப்பிடத் தோணவில்லை.    அதற்குள் மருமகன் தூக்கம் கலைந்து வெளியே வந்தார். தேநீர் சாப்பிடலாமென்றார். “நீங்கள் தேநீர் குடிச்சிட்டு வந்து கார ஒட்டுங்க. தோமஸால முடியாது. பயமா இருக்கு என்றேன்”     “ஓட்டலாமே அதுக்கென்ன? தோமஸ் ஒத்துக்கணுமே!” என்றார்.     தோமஸ் வந்ததும் கேட்டேன்.     “என் லைஸன்ஸ பிடிங்கிடுவாணுங்க,” என்றார்.     “இல்ல ஒங்களுக்குத் தூக்கம் பத்தாது. எங்களுக்கு பயாமா இருக்கு” என்றேன்.

பனிப்பொழிவில் 10 நாட்கள்

                  விமானத்திலிருந்து டில்லி, தாஜ் மஹால், மனைவி, மகள், மருமகன், நான்                               கோ.புண்ணியவான்                1.    டிசம்பர் 17ம் தேதி டில்லியில் போய் இறங்கியபோது குளிர் எங்களை வரவேற்றது. தமிழ் பேய்ப்படங்களில் உருண்டு திப்பித்திப்பியாய் வரும் மேகக்கூட்டங்கள் போல பனி மூட்டம் சுருண்டு எங்களைக்கடந்த வண்ணமிருந்தது. முன் எச்சரிக்கையாகக் குளிர் ஆடையைப் போர்த்தியிருந்ததால் குளிர் என்னை நெருங்கத் துணியவில்லை. விமானத்தளத்தில் வரவேற்பு வாசலில் புது டில்லியின் பிரசித்தி பெற்ற பனிக்கர் டிரவல்ஸை சேர்ந்த கார் ஓட்டுனர் தோமஸ் நான்கே பேர் கொண்ட எங்கள் குழுத் தலைவர் பெயர் பலகையை  ஏந்திய வண்ணம் எங்களை வரவேற்றபோது குளிரின் உக்கிரம் தெரியவில்லை. விமான நிலையத்தில் ஹீட்டர் (சூடூட்டி) பொருத்தப்பட்டிருக்கலாம். காருக்குள் ஏற வெளியே வந்தபோதுதான் குளிர் காற்று முகத்தில் வீசி எங்களுக்கு முதல் எச்சரிக்கையைப் பிறப்பித்தது. முகத்தில் முக்கால் பகுதியை மூடி கையில் தடித்த கம்பலி உரை போட்டிருந்ததால் குளிர் கருணையோடு என்னுடுடன் தோழமை பூண்டிருந்தது. கையில் உரை அணியாத மனைவியைப்பார்த்தே

நினைவெழுத்துகள்

இக்கட்டுரை மலேசிய நவீன இலக்கியத்தை முன்னெடுத்துச்சென்ற எம்.ஏ. இளஞ்செல்வனுடனான என் பகிர்வுகளாகும் க.இளமணி, கோ.புண்ணியவான்,அப்பாவிச் சோழன்,சை.பீர்,இளஞ்செல்வன் நினைவெழுத்துகள் 1.      என்னுடைய முதல் சிறுகதைத்தொகுப்பு வெளியாகிறது. நிஜம் என்று அதற்குத்தலைப்பிட்டதும் , தனித்தமிழில் ஆர்வலர்களிடமிருந்து கண்டனக்கடிதங்கள் வந்தன. உண்மை என்று தலைப்பிட வேண்டியதுதானே என்று நேரடியாகவும் முறையிட்டார்கள். இதைப்பற்றி  வேறொரு தருணத்தில் கதைக்கலாம். நிஜம் வெளியீடு கூலிம் தியான ஆஸ்ரமத்தில் சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி தலைமையில் நடந்தேறியது. எம். ஏ இளஞ்செல்வன் நூலாய்வு செய்தார்.  நிகழ்ச்சிக்கு நான் அழைக்காமலிருந்தாலும் சை. பீர்முகம்மதுவும், அப்பாவிச்சோழனும் , இன்னொரு நண்பருடன் நட்பின் காரணமாக கோலாலம்பூரிலிருந்து வந்திருந்தனர் . பாலு மணிமாறன்தான் அப்பாவிச்சோழனாக மலேசியாவில் இலக்கியமுகத்தில் வாழ்ந்துகொண்டிருந்தவர். நூலாய்வு செய்த இளஞ்செல்வன் , நான் எழுதிய பதினாறு கதைகளில் நான்குதான் தேறும் என்று சபையில் கூறினார். அதில் ஒரு கதை ‘குப்புச்சியும் கோழிகளும்’ உலகத்தரத்தில் இருப்பதாகச் சொன்னார். பதினாறு கதைக