Skip to main content

Posts

Showing posts from November 29, 2009

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும் கோ.புண்ணியவான் இறுதிப்பகுதி ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கு முன்பு தென் இந்தியர்கள் மலேசியாவுக்கு ஒப்பந்தக்கூலிகளாகக்கொண்டு வரப்பட்டார்கள் என்பது பழைய செய்தி. இன்றைக்கும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது வேறொரு தளத்தில். தொழில்துறையில் துரித மேம்பாடு கண்டு வரும் மலேசியாவுக்கு உடல் உழைப்புத்தொழிலாளர்கள் தேவைப்பட்டார்கள். இந்தத்தேவையை நிவர்த்தி செய்ய ஆசியாவிலிருந்து நிறைய பேர் இங்கு வந்தவண்ணம் இருக்கிறார்கள். தமிழ் நாட்டிலிருந்தும் தொழிலாளர்கள் முதலாளிகளால் இங்குக் கொண்டு வரப்படுகிறார்கள். அன்றைக்கு காலணித்துவ வாதிகள் அதனைச்செய்தார்கள். இன்றைக்கு சொந்த இனமே இவர்களைக்கொண்டு வந்து சுரண்டிக்கொண்டிருக்கிறது. ‘சொந்தச்சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி கிளியே’ என்று பாரதி பாடியது போலவே, மலேசியாவிலும் ஒரு கவிஞர் இந்த தமிழ் நாட்டுத்தோழர்கள் படும் வேதனையைய்பாடுகிறார். கடனுக்கும் லெவிக்கும் கட்டவே சதா எரியும் அடுப்பு நெருப்பருகில் உடல் நோக வெந்தும் உயிர் நோக நொந்தும் உழைத்ததெல்லாம் போகுமென்பது எனக்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும் கோ.புண்ணியவான் பகுதி 5 அந்த மழை பொழுதில்தானே தோட்டத்தின் முச்சந்தி மரம் கிளைகளை உதிர்த்திருக்கும்? மரத்தில் அமர்ந்திருந்த குருவிகள் பறந்தோடிய ஓசையை மழை சிதறலின் ஓசையைவிட உன்னிப்பாகக் கேட்க முடிந்ததே! (கே.பாலமுருகன்) தமிழ்க்கல்வியைத் துடைத்தொழிக்கும் கொள்கை மலேசியா தொழில் துறை நாடாக மாறிக்கொண்டிருப்பதாலும், தொழில் நுட்பத்துறை ஆங்கிலத்தில் இயங்கிக்கொண்டிருப்பதாலும் அறிவியல் கணிதம் போன்ற பாடங்கள் ஆங்கிலத்தில் போதிப்பது அவசியமென உணர்ந்த முன்னால் பிரதமர் மகாதிர், ஆரம்பக்கல்வித்தொடங்கி பலகலைக்கழகம் வரை அப்பாடங்கள் ஆங்கில கற்றல் கற்பித்தலுக்கு மாற்றப்பட வேண்டும் என மக்கள் கவனத்தைத்திருப்பினார். நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து ஆரம்பப்பள்ளிகளில்( அடிப்படைக்கல்வி முதல் ஆறு ஆண்டு வரை) மலாய், ஆங்கிலப் பாடங்களைத்தவிர்த்து பிற பாடங்கள் தாய்மொழியிலேயே போதிக்கப்பட்டு வந்தன. தாய்மொழியின் மீது பற்று கொண்டவர்கள் பிரதமரின் இத்திட்டம் தமிழ் சீனம், மலாய் போன்ற மொழிகள் பேசுவதும் எழுதுவதும் குறைந்துவிடும் எனவும

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். பகுதி 4 கருத்தரங்குகள் வழி புதுக்கவிதை படைபிலக்கியத்தை மீட்டெடுத்தல் முதல் புதுக்கவிதை கருத்தரங்குக்குப்பிறகு புதுக்கவிதை படைப்பிலக்கியம் ஒரு தேக்க நிலையை அடைந்தது. இதற்குச்சில காரணங்களை முன்வைக்கலாம்: 1. மலேசியாவில் தமிழ்க்கல்வி முதல் ஆறு ஆண்டுகள் வரைதான் போதிக்கப்படுகிறது.ஆசிரியர் பயிற்சிக்கல்லூரிகள் சிலவற்றிலும், மலாயாப்பல்கலைக்கழகத்துலும் தமிழ் போதிக்காப்பட்டாலும்,அங்கிருந்து இலக்கியப்படைப்பாளிகள் உருவாவது மிக அரிது. 2.புதுக்கவிதை எழுத வந்தவர்கள் அதன் நுணுக்கங்களைப்புரிந்து கொள்ளாமை. 3.புதுக்கவிதைகளை வளர்ப்பதாக எண்ணி தரம் பாராமல் வார மாத ஏடுகள் அவற்றைப்பிரசுரித்தது. 4.புதிதாக எழுத வருபவர்களின் ஆர்வக்கோளாறு. 5. விரிவான வாசிப்பு அனுபவம் இல்லாமை. ( நல்ல நூல்களை வாங்கிப்படிக்காமையும், தேடிப்பிடித்து படிக்காமையும்) எனப் பல காரணங்களை முன்வைக்கலாம். புதுக்கவிதை எதிர்நோக்கிய இந்தச்சரிவை நேர் செய்ய முதல் கருத்தரங்கையைக்கூட்டியவர்கள் மீண்டும் புத்தெழுச்சிபெற்று எழுந்தனர். கோ.முனியாண்டி,எம்.ஏ.இளஞ்செல்வன், கோ. புண்ணியவான், துரை.முனியாண்

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன
புதுக்கவிதை ஆழமான தடம் பதிக்க மிக முக்கியமான காலக்கட்டமாக இதனைக்கருதலாம். புதுக்கவிதையை முன்னெடுத்துச்செல்வதற்கும், பல புதுக்கவிஞர்களை உருவாக்குவதற்கும் இந்தச் சர்ச்சை வழி அமைத்துக்கொடுத்தது. அவர்களின் எதிர்ப்பே இந்த வடிவம் தழைப்பதற்கான பலத்தைக்கொடுத்துக்கொண்டிருந்தது. ஒரு நீண்ட,செறிவான இலக்கண இலக்கிய மரபு சார்ந்த தமிழுக்குப் புதுக்கவிதை என்ற இறக்குமதி வடிவம் தேவையில்லை என்று யாப்பில் கரைகண்டவர்கள் மிகுந்த கோபத்தோடு தங்களின் வசவுகளால் புதுக்கவிதையாளர்களைத் திட்டித்தீர்த்தனர். தாயுமின்றி தந்தையுமின்றித் தப்பால் பிறக்கும் ஒரு கவிதை தாளமுமின்றிக் கோலமுமின்றித் தவறால் பிறப்பது புதுக்கவிதை சாலை விதியை சமிக்ஞை விளக்கை சாராதோடும் புதுக்கவிதை நாலும் செறிந்த நமக்குள் வழக்கை நாசமாக்கட்டும் புதுக்கவிதை (தீப்பொறி) புதுக்கவிதை வடிவத்தை ஏற்றுக்கொள்ளாத வகையில் பற்பல கவிதைகளும் கட்டுரைகளும் அப்போது எழுதப்பட்டன. அன்றைய வாசகனுக்கும், யாப்பிலக்கணத்தைக்கற்றுத்தேர்ந்த பிறகுதான் கவிதை எழுத வரவேண்டும் என்ற பிடிக்குள் சிக்கிகொண்டு எழுத முடியாமல் தவிப்பவனுக்கும் புதுக்கவிதை புதிய படை
மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும் கோ.புண்ணியவான். பகுதி 1 மலேசிய படைப்பிலக்கியத்தின் வரலாறு 1876 லேயே தொடங்கிவிட்டதாக ஆய்வாளர்கள் தக்க சான்றுகளோடு முன்வைக்கிறார்கள். பினாங்கில் 1876 ல் தங்கை நேசன் என்ற தலைப்பில் மலேசியாவின் முதல் பத்திரிகை அச்சாகி வருகிறது.மலேசியாவில் புனையப்பட்ட முதல் இலக்கிய வடிவம் மரபுக்கவிதைதான்.ஆனால் முதல் புதுக்கவிதை பிறந்தது 1964 ஆம் ஆண்டுதான். மலேசியாவில் புதுக்கவிதை விதை நடப்பட்டு இன்றைக்கு கிட்டதட்ட அரை நூற்றாண்டை எட்டிப்பிடிக்கவிருக்கிறது. முதல் மரபு மீறிய கவிதை கள்ளப்பார்ட்டுகள் என்ற தலைப்பில் சி.கமலநாதனால் எழுதப்பட்டு தமிழ் முரசு ஞாயிறு பதிப்பில் வெளியானது.இது பிரசுரமான ஆண்டு 1964. மதியின்றிப் பிதற்றுவதும் இங்கு உள்ளதைத்தின்று, ஊதிப்பெருப்பதல்லால் உருப்படியாய் செய்வதென்ன? என்று அடியெடுத்துக்கொடுக்கிறார் சி. கமலநாதன். இவரே மலேசிப்புதுக்கவிதைகளின் முன்னோடி என்று தயங்காமல் குறிப்பிடலாம்.இவரைத் தொடர்ந்து பைரோஜி நாராயணன், எம்.துரைராஜ், அக்கினி, ராஜகுமாரன், ஆதிகுமணன், எம்.ஏ. இளஞ்செல்வன் என புதுக்கவிதைக்கான ம
இறுக்கமாக பூட்டப்பட்ட எல்லாகதவுகளின்\ எல்லாச்சாவியையும் அவனே வைத்துக்கொள்கிறான் துவாரத்தின் வழியே சிறியா கீற்றிலிருந்தாவது கவிதை கசிகிறதா என்ற நப்பாசையில் நம்பிக்கயான தருணத்தில் பூட்டுகள் தெறிக்கின்றன இன்பம் சுகித்தவாறு.