Skip to main content

Posts

Showing posts from March 30, 2014

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்-கன்னி முயற்சி

குழப்பம் 3 தயாஜி முதல் நாள் நள்ளிரவு 12 மணிக்கு என் மின்னஞ்சலைத் திறந்து பார்க்கும்போது ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஜெ எனக்கொரு அஞ்சல் அனுப்பியிருந்தார். புண்ணியவான் தயாஜி எங்களை டேக்சியில் ஏற்றி ஒரு ஒட்டலில் விடச்சொன்னார். அது வேறொரு விடுதியாக இருக்கிறது. என்ன செய்வதென்று தெரியவில்லை என்று எழுதியிருந்தது. அவரிடம் மலேசிய தொலைபேசி எண் இல்லாததால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. அப்போது கைக்குக் கிடைத்தது மின்னஞ்சல் மட்டுமே. அவருடைய தொலைபேசி எண்ணை எனக்கு அன்று மணி 4 வாக்கில் அனுப்பியிருந்தார் யுவா. நான் அவர் மின்னஞ்சல் அனுப்பிய நேரத்தைப் பார்க்கவில்லையாதலால்., சற்று முன் அனுப்பிய மின்னஞ்சலாக இருக்கும் என்றே நினைத்திருந்தேன். நான் அவரோடு உடனடியாகத் தொடர்பு கொண்டேன். இந்த நள்ளிரவில் என்ன அலைக்கழியப் போகிறார்களோ என்ற கவலை எனக்கு. "ஜெ என்ன எங்கே இருக்கிறீகள்.. மின்னஞ்சலைப் பார்த்தேன்," என்றேன் படபடப்போடு. "அதை இன்று காலையில் அனுப்பினேன். என்னையும் கிருஷ்ணனையும் ஒரு டேக்சியில் ஏற்றி அனுப்பி விட்டு. பின்னால் தயாஜியும் ராஜமாணிக்கமும் வந்தார்கள். டெக்சி எங்களை வேறு

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம்- கன்னி முயற்சி

குழப்பம் 2 ஜெயமோகனிடம் மலேசிய தொடர்பு எண் இருக்காது. பாலமுருகனுடன் தொடர்பு கொண்டு அவரிடம் தொலைபேசியைத் தரச்சொன்னேன். அவர் ஜெயமோகனோடு வந்த ராஜமாணிக்கத்திடம் கொடுத்துவிட்டார். ஜெயமோகனிடம்தான் பேசுகிறேன் என்று நினைத்துக்கொண்டு முகமன் விசாரிக்கத் தொடங்கினேன். குரல் வேறமாதிரி இருக்கிறதே என்ற் பிரக்ஞைகூட எழவில்லை. என்ன பதில் சொல்வது என்ற பதற்றத்தில் குரலை அடையாளம் காண மறுத்தது. சற்று சுதாரித்த பின்னரே இது ஜெமோ குரலில்லையே என்றே அடையாளங்கண்டு , " நீங்கள்..." என்றேன். "சார் நான் ராஜமாணிக்கம் ... ஒரு நிமிஷம்," என்றுவிட்டு ஜெமோவிடம் கொடுத்தார். "புண்ணியவான் பேசுறேன், நலமா வந்து சேந்தீங்களா ஜெ?" என்றேன். " எல்லாம் நல்லாருந்தது.." என்றே துவங்கைனார். வார்த்தைகளில் கோபம் ஏதும் தென்படவில்லை. எப்போதும்போலவே மென்மையாகவே பேசினார். தொலைபேசியில் அவரோடு உரையாடும் போது நமக்கு உற்சாகம் வராது. நேரில் பேச ஆரம்பித்தால் நமக்குள் ஒரு துடிப்பையும் ஆர்வத்தையும் கிளர்த்திவிடுவார். நான் இருமுறை அவருடைய ஊட்டி இலக்கிய முகாமில் பேசி மகிழ்ந்திருக்கிறேன். என் பதற்றம் நொ

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் கன்னி முயற்சி

ஜெயமோகனுடன் மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் கன்னி முயற்சி 1. முதற் குழப்பம்     2010  லேயே ஜெயமோகன் மலேசியா வந்திருந்தார். எங்கள் நவீன இலக்கியக் களம் அவரை வரவழைத்திருந்தது. குறிப்பாக சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி நவீன இலக்கியக் களத்தை முன்னெடுப்பவர். அவர்தான் அதில் மும்முரமாக இருந்தார். சுவாமி இலக்கியத்திலிருந்துதான் ஆன்மிகத்துக்குப் போனார். பின்னர் இலகியத்தையும் ஆன்மீகத்தையும் சமமாகவே அவதானிக்கத் தொடங்கினார். அவர் படிக்கும் காலத்தில் அவரை இலக்கியத்துக்கு இழுத்தது மு.வ தான். மு.வதான் அவரை மெல்ல ஆன்மீகத்துக்கு கொண்டு சென்றார். ஆன்மீகத்தை எந்த அளவுக்கு நேசிக்கிறாரோ அந்த அளவுக்கு இலக்கியத்தையும் நேசிக்கிறார் இப்போது. இரண்டும் வெவ்வேறல்ல . இரண்டுமே தத்துவ நோக்கோடுதான் வாழ்க்கையைப் பார்க்கின்றன என்ற நிதர்சனத்தை முன்வைப்பவர்.  ஜெயமோகனின் எழுத்துகளை அவருக்கு அறிமுகப்படுத்தியது நான்தான். ஜொமோவின் அகப்பக்கத்தை திறந்து கொடுத்த நாள் முதல் இன்றைய தேதிவரை ஜொமோவை விடாமல் விரட்டிக் கொண்டு வாசிக்கிறார். அவரை உள்வாங்கிய பின்னர்தான் அவரின் ஆளுமையின் முழு தரிசனம் கிடைக்கப் பெற்றார். பின்னர