எதிர்க் கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் இன்று ‘வரலாற்றுப் புகழ்மிக்க ஒரு ஒப்பந்தம்’ கையெழுத்திடப் பட்டிருக்கிறது. 2007 ஆண்டு லட்சகனக்கான இந்தியர்கள அணி திரட்டி, ஓரங்கட்டப்பட்ட தென்னிந்தியருக்காக நீதி கேட்டுப் வீதிப் போராட்டம் நடத்திய ஹிண்ட் ராப், ஆறு ஆண்டுகளாகப் போராடிய பிறகு தன் கோரிக்கைகளை ஆளுங்கட்சியை ஏற்றுக்கொள்ள வைத்திருக்கிறது. எதிர்கட்சி நாளுக்கு நாள் வலுபெற்று ஆளுங்கட்சியை வீழ்த்தும் நம்பிக்கையில் முனைப்போடு இருக்கும் இத்தருணத்தில் பிரதமர் நஜிப் ‘உங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வாருங்கள் ஒன்றிணைவோம்’ என்று ‘கரிசனக் கரம்’ நீட்டியிருப்பதானது தன் ஆட்சி நிலை குலைந்திருப்பதைப் படம் போட்டுக் காட்டியிருக்கிறது. இதில் என்ன பெரிய முரண்நகை என்றால் கடந்த ஐம்பத்தைந்து ஆண்டுகாலம் இனவாத அரசாக கோலோச்சி வந்து, இந்தியர்கள் நலனைப் புறக்கணித்த அதே ஆளுங் கட்சி , இன்றைக்கு திடீரெனத் தடம் புரண்டு ‘உங்கள் நலனை நாங்கள் பாதுகாப்போம்’ என்று இன்முகம் காட்டி அரவணைத்திருக்கிறது. இதன் உண்
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)