Skip to main content

Posts

Showing posts from August 3, 2014

கால எறும்பு அரிக்கமுடியாத சீனி

மாபெரும் ஆளுமைக்கு என் அஞ்சலி அமரர் கவிஞர் சீனி நைனா முகம்மது மலேசிய அறிவுலகம் எளிதில் மறக்கமுடியாத ஆளுமை கவிஞர் சீனி நைனா அவர்கள். அரை நூற்றாண்டுக்கும் மேலாக தன்  வாழ்க்கையை  இலக்கியத்துகே அர்ப்பணித்தவர். தன் இலக்கிய ஆற்றலை தொடர் வாசிப்பின்மூலம் வளர்த்துக்கொண்டே இருந்தார். அவருக்கு இங்கே வேறொருவர்  ஈடில்லாத மேதைமையை அவரின் எழுத்தும் பேச்சும் பறைசாற்றிய வண்ணம் இருந்தது. அவரின் அறிவார்ந்த இயக்கத்தை அந்நாந்து பார்த்து வியந்தோதிய பேராசிரியர்களையும், கல்விமான்களையும், படைப்பாளிகளையும் என் இலக்கிய வாழ்வில் அவதானித்தே வந்திருக்கிறேன். கவிஞர் பல தருணங்களில் அவர்களின் மரபிலக்கிய சந்தேகங்களையும் வினாக்களுக்கம் ஐயமின்றி தீர்த்து வைத்திலிருந்தே  அவரின் ஆளுமை எவ்வளவு பெரியது என்ற எண்ணவைத்தது. நாம் சிந்தித்து வைத்திருப்பதற்கும் மிக மேலாகவே அவரின் ஆளுமை பரிமளித்திருக்கிறது. அவருக்கும் எனக்குமான ஒரு பிணக்கிலிருந்தே எங்களின் தொடர்பும் நட்பும் துவங்கியதுதான் ஒரு முரண்நகை. என் முதல் சிறுகதைத் தொகுதி வெளியான தருணம். சுங்கைப்பட்டாணியில் நூலை வெளியிட்ட பிறகு, பினாங்கு தமிழ் எழுத்தாளர் சங்கம் நூல

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 3

 முத்தம் 3 அபு டாபி விமான நிலையத்தை அடைந்தபோது உடல் சோர்ந்திருந்தது. என்னதான் விழித்து விழித்து கண்ணயர்ந்தாலும்  மூன்று மணி நேரத்துக்கு மேல் தூங்கியிருக்கமாட்டேன். ஒரு பெக் விஸ்கி அரைமணி நேரம் கூட உடன் இருப்பதில்லை. மெல்லிய போதை உண்டாகும் நேரம் தூக்கம் பிடிக்கத் தொடங்குகிறது. போதை உடலை விட்டு விலகியவுடன்  தூக்கம் கலைந்துவிடுகிறது. இரண்டு பெக் போட்டால் தூக்கம் நன்றாக வரும் என்பதையெல்லாம் நம்ப முடியவில்லை. அது வெறும் முயக்கம். அதனைத் தூக்கமென்றா நினைத்துக்கொள்வது? உடல் வலுவற்றிருந்தது. சோர்வு நீங்குவதற்கு நீண்ட தூக்கம் போடவேண்டும். அபு டாபி விமான நிலையத்தில் அதற்கு வழியே இல்லை. உடலைச் சாய்த்து உட்காரும் அளவுக்குக் கூட இருக்கைகள் வசதியாக இல்லை. பயணிகள் ஆயிரக்கணக்கில் தொடர்புப் பயணத்துக்குக் காத்திருந்தனர். அபுடாபி அரபு நாட்டின் மிக முக்கிய நகரம். அசுர வேகத்தில் மெட்ரோபோலிட்டன் நகரமாக வளர்ந்து செழித்துக் கொழுத்த நகரம். பெட்ரோல் வற்றாமல் ஊறிக்கொண்டே இருக்கிறது. பெருத்த ஒட்டக வயிற்றைப் போலவே ஷேக்குகள் கொழுத்து இருக்கிறார்கள். அரபு நாட்டின் நகர மேம்பாட்டு கட்டுமானத்துக்கும், வீ

முத்தங்களால் நிறைந்த தேசம் . முத்தம் 2

முத்தம் 2 ஜூலை 22 இரவு 6.30க்கு கே ஏல் ஐ ஏ  '2 விமானத் தளத்தில் இருக்கவேண்டும். எத்திஹாட் விமானம் மூலம் 8.30 க்கு பயணம் தொடங்கும். கிள்ளானில் தெலுக் பங்லிமா காராங்கிலுள்ள என் மைத்துனர்  எங்களை விமானத் தளத்தில் விடவேண்டும். நாங்கள் வீட்டிலிருந்து  கிளம்பும்போது மணி 11.30. இடையில் எங்கும் நிற்கக்கூடாது என்பதற்காக உணவைச்சமைத்து பொட்டலம் செய்து எடுத்துக்கொண்டு காரிலிலேயே சாப்பிட்டாக வேண்டும். நெடுஞ்சாலை பயணம் என்றாலும் எங்கேயும் பயண இடையூறு நேர்ந்தால் குறிப்பிட்ட நேரத்தில் போய்ச்சேர முடியாது. குறைந்தது மூன்று மணி நேரத்துக்கு முன்னரே விமானத் தளத்தில் இருக்கவேண்டும் என்று தீர்மானித்திருந்தோம். 110 கிலோ மீட்டர் வேகக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கவும் வேண்டும். ஏற்கனவே ஆளாலுக்கு நான்கைந்து வேகம் மீறல் தண்டங்களை அரசாங்கத்துக்கு பாக்கி வைத்திருந்தோம். என் மருமகன் அரசாங்கம் செழிப்பாக இருக்கவேன்டும் என்பதில் அளவுக்கு மீறிய அக்கறையுள்ளவர். அவர் ஒரு கட்டு சமன்கள் வைத்திருப்பார். அபுடாபி விமான நிலையம் குடிமக்களிடமிருந்து  வரியை எப்படிப் பறிப்பது என்று மலேசியாவிலிருந்து பிற நாடுகள் கற்றுக

முத்தங்களால் நிறைந்த தேசம்

முத்தம் 1. என் மருமகனும் மகளும் ஐரோப்பிய பயணம் தொடர்பாக எங்களுக்கு எந்த முன் திட்டமும் இல்லை. விமான டிக்கெட்டுகளை மட்டும் முன் பதிவு செய்திருந்தார் என் மருமகனார்.(ஐரோப்பிய பயணத்தை நேர்த்தியாக செய்து முடித்திருந்ததால் இநத 'னார்'.) மற்றபடி அங்கே போனதும்தான் மற்ற ஏற்பாடுகள் எல்லாம். ஆண்டு தொடக்கத்தில் பஹாருடின் பயண நிறுவனத்தோடு போகலாம் என்றே குடும்பத்தில் அறுவர் முன்பணம் செலுத்தியிருந்தோம். என் மகன், மருமகள், என் மகள், என் மருமகனார், என் தர்ம பத்தினி, நான் ஆகியோர் அந்த அறுவர். பஹாருடின் பயண நிறுவனம், பயணிகள் போதாமையால் அந்தப் பயணத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்து விட்டார்கள். ஆனாலும் என் மகள் விடுவதாயில்லை. பயணம் செய்யலாம் என்ற மனநிலையிலேயே நிலைத்துவிட்டிருந்தாள். நாம் சொந்தமாக ஏற்பாடு செய்யலாம் என்றே வலியுறுத்து வந்தார். எனக்கு அவ்வளவு விருப்பமில்லை. பஹாருதின் விதித்த அதே தொகையில் போய்வர ஏற்பாடு செய்கிறேன் என்றார். ஐரோப்பாவில் எல்லாமே நேரப்படி நடந்தேறும். தொல்லைகள் இல்லாத நாடு, அங்கே பொதுப் போக்குவரத்து குறையில்லாமல் நடக்கும்., என்றெல்லாம் என்னைக்  கவரப் பார்த்தார்கள்.