Skip to main content

Posts

Showing posts from 2017

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2

மாடுகள் மலைகள் ஏரிகள் ~2 கோல்ட் கோஸ்டில் என்ன மணி என்று தெரியவில்லை.  நேரம் தெரியாமல் இருப்பதுதான் கொண்டாட்ட மனநிலையை உண்டாக்குகிறது. ஆம் நாங்கள் உல்லாசமாக இருக்கத்தானே புதிய ஊரைத் தேர்ந்தெடுத்தோம்.  நியூசிலாந்து நேரத்துக்கு மணியை மாற்றியும் வைக்கவில்லை . அவர்களுக்கும் நமக்கும் ஐந்து மணி நேர வித்தியாசம்.  நமக்கு இங்கே காலை ஆறு என்றால் அங்கே பதினொன்று. அது ஒன்றரை மணி நேர நிறுத்தம். கோல்ட் கோஸ்ட்டில் இறங்குபவர்களுக்காக மட்டுமல்ல . பெட்றோல் நிரப்பவும்தான். அங்கே எல்லாப் பயணிகளும் சுங்கப் பரிசோதனைக்கு ஆளாக்கப் படுகிறார்கள. போதைப்பொருள் , ஆயுதக் கடத்தல் நடக்காமல் இருக்க இந்தப் பரிசோதனை. போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான தண்டனை என்று  எச்சரிக்கிறார்கள். கோல்ட் கோஸ்ட்டில் சுங்கச் சாவடியில்  பொருள் வாங்கலாம், காப்பி அருந்தலாம் ஆனால் அமெரிக்கன் டாலர் கேட்கிறார்கள். நியூசிலாந்து பணத்தை வாங்க மறுக்கிறார்கள். ஆங்கிலமும் டாலரும் உலகத்தை அடிமையாக்கி விட்டிருக்கிறது. மீண்டும் விமானத்துக்குள் நுழைந்தால் புதிய பணிப்பெண்கள் மலர்ந்த பூக்களாய் நின்று

மாடுகள் மலைகள் ஏரிகள்

மாடுகள் மலைகள் ஏரிகள்~ 1   நியூ  சிலாந்து செல்வதற்கான முன்னேற்பாடுகள் ஆறு மாதங்களுக்கு முன்னாலேயே தொடங்கிவிட்டது. டிசம்பர் 12 தொடங்கி 24 வரையிலான சுற்றுலா. ஆனால் இரண்டு நாட்கள் பயணத்திலேயே கழிந்துவிடும். விமானப் பயணம் பதினொரு மணிநேரம். கெடாவிலிருந்து காரில் கே.எல் .ஐ ஏ விமான நிலையம் செல்வதற்கு ஐந்து மணிநேரம் , விமான நிலையத்தில் சுங்கச் சாவடிக்காக காத்து நின்று எல்லா பரிசோதனையும் முடிய மூன்று மணி நேரம் ,  விமானப் பயணம் பதினோரு மணி நேரம் , ஆக்லாந்து விமான நிலையத்தில் குறைந்தது முக்கால் மணி நேரம் என களைத்துப்போய் விடுதி கட்டிலில் சாய  கிட்டதட்ட  ஒருநாளை விழுங்கிவிடும். ஆனால் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செல்லும் போது இந்தியா தென்கிழக்காசிய நாடுகளுக்கும் பயணம் மேற்கொள்ளொம்போது உண்டாகும் பதற்றம் ஏற்படுவதில்லை. இந்தியாவில் திருச்சி , டில்லி , சென்னை விமான நிலையங்களில் சுங்கச் சாவடி பரிசோதனைகள் நம்மை சாகடித்துவிடும். அதனால்தான் அதற்குப் பெயெர் சாவடி. திருச்சி விமான நிலையத்துக்குள் நுழைவாயிலில் நீங்கள் முதலில் வரிசை பிடித்து நிற்க வேண்டும். கோடை காலக்  கொடுமைமைகள

கோணங்கியின் மாந்திரீக உலகத்தினுள்

                                          17.9.2017 வல்லினம் நிகழ்ச்சி முடிந்த மறுநாள் பாண்டியன் கோணங்கியை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.          பாண்டியன் காரிலிருந்து இறங்குவதற்கு முன்னர்  கோணங்கி நட்பு மிகுந்த புன்னகையோடு என்னைப் பார்த்தார். நான் இரு கைகளைக் கூப்பி வணங்கினேன் . அவரும் கைகளைக் கூப்பினார். அதிலிருந்தே  மனிதர்களை முதல் பார்வையில் நேசிக்கும் அப்பழுக்கற்ற தகவல் அனுப்பப் பட்டிருந்தது எனக்கு. காரில் இருந்து இறங்கியதும் கட்டிப் பிடித்துக் கொண்டார். அவருக்காக நான் தயார் செய்த தேநீரை கொண்டு வந்து மேசையில் வைத்தேன். கொஞ்சம் கூட சுணங்காமல் ‘தேநீரா?’ என்று மகிழ்ச்சி நிறைந்த மொழியோடு, அருந்த ஆரம்பித்தார். நான் தமிழகத்தில் தயார்  செய்யும் தேநீரின் சுவை குன்றாமல் செய்யப் பழகியவன். எனவே தேநீரே என் வரவேற்பு பானம்.         என் வீட்டின் முன்புறத்தில் போடப்பட்டிருந்த பிரம்பு நாற்காலி சிறிய வட்ட மேசையைப் பார்த்து எழுதுவதற்கான மூட்  கிடைப்பதற்கு எழுத்தாளர் செய்த இந்த ஏற்பாடு பொருந்தும் என்று சொல்லி இருக்கிறார் பாண்டியனிடம். நான் பெரும்பாலும் அதில் அமர்ந்துதான் வாசிப்பேன். வெள

குப்புச்சியும் கோழிகளும்- சிறுகதை

குப்புச்சியும் கோழிகளும்- சிறுகதை தோட்டங்களின் எல்லை என்றும் சொல்ல முடியாமல், காட்டின் அடிவாரம் என்றும் சொல்ல முடியாத மனித நடமாட்டமே அற்றுப் போன அல்லது தபால் இலாகாவின் முகவரிப் பதிவேட்டில் துருவித் துருவித் தேடினாலும் காணப்படாத பகுதியில்தான் குப்புச்சி வசித்து வருகிறாள். அவள் கணவன் உயிராய் இருக்கும் போதே இந்த இடத்தை அவளுக்கு அறிமுகம் செய்து வைத்துவிட்டு செத்துப் போய் விட்டான். அவன் செத்துப் போன செய்தி கூட இவளை முழுசாய் வந்து சேரவில்லை. வேலையை ஒழுங்காகச் செய்ய முடியாத காரணத்தால், இடம் விட்டு இடம் பெயரும் இவள் கணவன், ஒரு நாள் ஆள் அரவமில்லாத ஓர் இடத்தில் ஏதோ இடித்து உதவிக்கு ஆள் இல்லாமல் நிர்க்கதியாய் உயிர் விட்டிருப்பான் என்ற ஆரூடம், சாவு வீட்டில் பேசப்பட்டிருந்தது. நாலு பேர் கூடிவிட்ட இறப்பு வீட்டில் சாங்கியத்துக்காக அழலாம் என்றாலும், அந்தப் பாழாய்ப் போன கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கூட உதிர்க்க முடியாமல் போனது அவளுக்கு மட்டும் அதிசயமாய்ப் படவில்லை. வேலைதேடி தனியே விட்டுப்போனப்பிறகு  குப்புச்சிக்கு என்ன நடந்தது? அவள் எப்படி இருந்தாள்? என்ன ஆனாள்? அவளை விட்டுப் போன

எழுத்தாளராய் இருப்பதில்......

எழுத்தாளராய் இருப்பதில்...... பலருக்கு அறிமுகமான எழுத்தாளராய் இருப்பதில் வில்லங்கமும் பல வடிவத்தில் வந்து சேரும். கலை சார்ந்து இயங்கக்கூடியவர்களில் எழுத்தியக்கத்தில் இயங்குபவர்களுக்குத்தான் ஆகக் குறைந்த ரசிகர்கள் இருப்பார்கள். இவர்களுள் பலர் நம் எழுத்தைப் படித்திருக்கமாட்டார்கள் ஆனால் ஊடக விளம்பரங்கள் மூலம் நாம் அவர்களுக்கு அறிமுகமாகி இருப்போம். “சார் நேத்து ஒங்கள டிவில பாத்தேன்,  பேப்பர்ல போட்டோ பாத்தேன், ரேடியோவில பேர் சொன்னாங்க,” என்றெல்லாம் முகமன் பேசுவார்கள். வில்லங்கம் இவர்களிடமிருந்தே பெரும்பாலும் வந்து சேரும். இரண்டு வாரங்களுக்கு முன் என் மகள் எனக்கு குறுந்தகவல் அனுப்பி ஒருவருடைய தொடர்பு எண்ணையும் கொடுத்து “அவர் உங்களிடம் பேசணுமாம்” என்றார். அடடே இன்னொரு வாசகர் கிடைத்துவிட்டார் என்று நான் தொடர்பு கொண்டேன். “ஐயோ சார்.. நான் உங்கள அவசியமா சந்திக்கணுமே?” என்று தொடங்கினார். “சந்திக்கலாமே,” என்றேன். எனக்கும் பெருமிதம் உச்சியைத் தொட்டது. “ரொம்ப நன்றிங்க சார், ரொம்ப நாளா உங்கள் சந்திக்கணும்னு காத்துக்கிட்டிருக்கேன் சார், எப்போ சந்திக்கலாம் சார்...? வாசகரைச் சந்திக்க நேரங்க

ஜெயமோகனும் நாஞ்சில் நாடனும் முன்னெடுத்த கூலிம் இலக்கிய முகாமும், கலையின் மகத்துவமும்

          ஜெயமோகனைச் சந்திக்கும் தருணம் வாய்க்கும் போதெல்லாம் மெல்லிய பதற்றம்  ஏறி விடுகிறது எனக்கு. அவர் எழுத்து உருவாக்கிய பிரம்மாணடம் அவர் உரையாடலில் பொங்கி  எழும் அறிவார்த்தம், இடைவிடாது அசுரத்தனமாக் எழுதும் ஆற்றல்,. நான் ரொம்ப பின்னால் இருக்கிறேன் என்ற தாழ்மை உணர்வு காரணமாக இருக்கலாம். இம்முறை மலேசியாவில் நான்காவது முறையாக சந்திக்கிறேன். அவரிடம் எப்படி உரையாடலைத் துவக்குவது என்ற முன்யோசனையோடு நான் என் ஊரான சுங்கைப் பட்டாணியிலிருந்து , கூலிம் தியான ஆஸ்ரமத்துக்குச் செல்கிறேன். கோலாலம்பூர் வல்லினம் நடத்திய குறுநாவல் சிறுகதைப் பயிலரங்கை முடித்துக்கொண்டு , ஜூலை 2 ம் தேதி சுங்கை கோப் பிரம்ம வித்யாரணயத்தில் நடைபெறும் இலக்கிய முகாமுக்கு, இன்னொரு இலக்கியப் பயிலரஙக்கை நடத்த வந்திருந்தார்  ஜெ. வல்லின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நான் பதிவு செய்திருந்தேன். ஆனால் எங்கள் வீடமைப்புப் பகுதியில் கடுமையாக பரவி வந்த சிக்குன்குன்யா காய்ச்சலுக்கு நானும் பலியாவேன் என்று எதிர்பார்க்கவில்லை. சக மனிதர்களுக்கே நான் படைப்பாளன் என்று அறிமுகமாகாதபோது வெள்ளந்தி மனம் கொண்ட கொசுக்களுக்கு மட்டும் எப்படித் தெரி

கமிட்டட்

கமிட்டட். இன்று என் 16 வயது பேத்தியை அவள் பள்ளிக்குப் போய் ஏற்றிவரச் சென்றிருந்தேன். சற்று தாமதமாகி விட்டது. அரை மணி நேரம். நிறுத்தத்தில் அவளோடு அதே வயது கொண்ட  பையன் காத்திருந்தான். இருவர் மட்டுமே அங்கே. என் கார் வருவதைப்        பார்த்துக்    கொண்டிருந்தவள்  சுணக்கமின்றி  வந்து ஏறிக்கொண்டாள். அந்தப் பையன் யாரென்று கேட்டேன். என் பேத்தி கொஞ்சம் துடுக்குக்காரி. “அவனுக்குக் கேல் பிரண்டு இருக்கு,” என்றாள். "அந்தப் பையன் யாருன்னுதான கேட்டேன்?: என்றேன். “எல்லாரும் சந்தேகக்  கண்ணோடையே பாக்குறீங்க,” என்றாள். “உன் வயது அப்படி!” என்றேன். “அவனுக்கு ஒரு கேல் பிரண்டு இருக்கு, எனக்காக  எப்போதும் காத்திருந்து அனுபிட்டுத்தான் அவன் வீட்டுக்குப் போவான், அவங்கிட்ட மோட்டார் சைக்கில் இருக்கு,” என்றாள். “எனக்கு அந்த எண்ணமெல்லாம் இல்ல. நான் படிக்கணும்,” என்றாள். அவள் வார்த்தையில் பொய்யில்லை. படிவத்திலேயே முதல் மதிப்பெண் எடுக்கக் கூடியவள். சதா படிப்புதான். தொடர்ந்து  4 மணி நேரம் அசையாமல் படிக்கக் கூடியவள். அதனால் எனக்கு  அவள் மீது காதல் சந்தேகம் ஏதுமில்லை. “எனக்குச் சந்தேகம் இல்லை!  நான

விசில் - சிறுகதை

                                               விசில்                             கூர்மையான விசில் சப்தம் மீண்டும் என் காதுகளை மோதியது.  அதிர்ந்து விழிக்கச் செய்த ஒலி. காதி ஜவ்வை    ஊசியில் குத்தப்பட்டது போல துடித்து எழுந்தேன்.  அண்டை வீட்டு படுக்கையறை வெளிச்சம் கண்ணாடி சன்னலையும் , திரையின் சிறிய திறப்பையும் தேடி ஊடுருவி உள்ளே நுழைந்திருந்தது.  கண்கள் மீண்டும் மூடித், துயிலுக்குள்  ஒன்றிணைவதென்பது சிரமமான காரியம்.  தூக்கத்தைக் கலைத்து, மூளையின் இயக்கத்தை முடுக்கிவிட்ட சப்தம், இமைகளை மூட வெகு நேரத்தை எடுத்துக்கொள்ளும். அண்டை வீட்டின் நிலை சரியாகும் வரை வெளியே காற்றாட நடக்கலாமா என்று மனம் அழைத்தது. பின்னிரவைத் தாண்டிய பொழுதில் காற்று சிலு சிலுவென வீசும். காற்றின் ஈரச் சில்லிடல் உவகையை உண்டு பண்ணும். நடந்துவிட்டு  வந்து படுத்தால் தேவலாமெனத் தோணியது. இரவின் சலனமற்ற வெளி மேலும் பெரிதாக விரிந்து பரந்து இருக்கலாம். கால்கள் அதற்க ஒப்பவில்லை. கட்டில் சுகம். படுத்துறங்கிய சுகம் எஞ்சியிருந்தது உடலில். விட்டத்தை நோக்கிக் கண்களை மூடியபடி கால் கைகளை பரத்தி நீட்டி, பிராணயாமம் செய்தால் துக்கம் வ