Skip to main content

Posts

Showing posts from November 1, 2009

தமிழ்ப்பெண்களின் ரத்தத்தை உறிஞ்சும் டிராக்குலாக்கள்

கடந்த மாதம் 3 நாள் விடுமுறையைக்கழிக்க மலேசிய திரங்கானு மாநிலக்கடற்கரைக்கு அப்பால் அமைந்துள்ள லாங் தெங்ஙா தீவுக்கு குடும்பதோடு சென்றிருந்தோம். முதல் நாள் நள்ளிரவு சுங்கைப்பட்டாணியிருந்து புறப்பட்டோம். நள்ளிரவு கார் பயணத்தில் எனக்கு மிகுந்த ஒவ்வாமை உண்டு. தூக்க நேரத்தில் விடிய விடிய கார் ஓட்டுவது எவ்வளவு ஆபத்தானது என்று நினைக்கும்போது ஒவ்வாமை கூடுதலாகிவிடும்.அதிலும் கைக்குழந்தைளோடு பயணத்தை மேற்கொள்வது மனதை கலங்கடித்துவிடும். என் ஊர் சுங்கைப்பட்டாணி, மலாயா தீபகற்பத்தின் மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.திரங்காணு நேரெதிர் முனையில் கிழக்குக்கடற்கரையில் அமைந்துள்ளது. குறுக்குவெட்டாக பயணிக்கத்தோதுவாக மலைத்தொடர்களை ஊடுறுத்துச்செல்லும் அழகிய சாலைகள் போடப்பட்டுள்ளன. ஏழு மணி நேரப்பயணம். நடுவே நீண்ட தூரத்துக்கு அடர்ந்த ரம்மியமான காடுகள். காடுகளை இருப்பிடமாகக்கொண்ட பலவகை மிருகங்களையும் பார்த்துக்கொண்டே பயணிக்கும் பீதி கலந்த இன்ப அதிர்ச்சிகளோடு பயணிக்கும் அனுபவத்தை சொல்லில் அடக்க முடியாது. ஒருமுறை ஊட்டியிலிருந்து பெங்களூருக்குப்பயணம் மேற்கொள்ளும்போதும் இதுபோன்ற அனுபவம் உ

பலிபீடம்

இந்த மனப் பேயை என்ன செய்யலாம் ஒரு எதிரியையாய் முரண்படுகிறது மனைவியாய் பிடுங்குகிறது வாலியாய் ஏழு ஆள் பலம்கொண்டு ஏதிர்க்கிறது ஆதிக்கச்சக்தியென அடிமைத்தளைகொண்டு கீழ்பணியச் செய்கிறது தழும்புகளை வருடியவாறே முயற்சியிலிருந்து சற்றும் மனம் தளராத விக்ரமாதித்தனாய் வேதாளத்தோடு மல்லுக்கு நிற்கிறது உண்மைகளை உள்ளிழுத்தவாறே உலக வங்கியென மலையாய் நிமிர்கிறது வட்டிக்காரனாய் சேகரமான பழைய பாக்கியை கேட்டுத்தொலைக்கிறது கடவுளாய் சாம்பலாய் பீனிக்ஸ் பறவையாய் காணாமற்போகாமல் குறுக்கே நடந்து நடந்து மிரட்டுகிறது கிள்ளி எரியலாமென்றால் குழந்தையாய் அலருகிறது புதைத்து கதையை முடித்துவிடலாமென்றல் கமுக்கமாய் இருந்து வேராய் கிளைபிடிக்கிறது உருவமென்றிருந்தால் கழுத்தை நெறித்து கொன்று தொலைக்கலாம் அருவமாய் அசரீரியாய் உயிர்பிடுங்கியாய் உடனிருந்தே கொன்றுகொண்டே இருக்க்கிறது. கோ.புண்ணியவான்.

கண்டடைதலின் குரூரங்களும் - கட்டுமான உடைப்புகளும்

கோ.புண்ணியவான் சமீபத்திய மலேசியக் கவிதைகளை முன்வைத்து தன்னிச்சையாய் முகப்பருக்களைப் தேடிப்போகும் கைவிரல்களைப்போல கவிதாமனங்களிலிருந்து வெளியேற வழி தேடிக்கொண்டே இருக்கிறது கவிதை. இது ஒரு இனிய நோய் காதலைப்போல. மௌனம் ஏழாவது இதழ் கைகளில் விழுந்து மனத்தை தாலாட்டியபோது அதன் பிரசவ வலியின் ரத்த வாடையிலிருந்து எளிதில் தப்பித்துவிட முடியவில்லை. என்ன தான் தேவா அதன் தாயாக இருந்தாலும், கவிதை தாய்மார்களுக்கும் அதன் வலி நீட்சிகாண்கிறது. இயல்பாகவே ஒரு சிற்றிதழ் பிறக்கிறதென்றால் அதன் ஆயுட்காலம் அப்போதே நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. பரந்த வாசக பரப்பைக்கொண்ட தமிழ் நாட்டிலேயே சிற்றிதழ்களின் வாழ்நாட்கள் குறை ஆயுளை எதிர்நோக்கும்போது, இங்கே சொல்லவே வேண்டியதில்லை. சொற்ப வாசகர்களிலும் சில அற்ப வாசகர்களிடம் எப்படித் தாக்குப்பிடிக்கும் என்பது மனதை நெருடியாவாறு இருக்கிறது. கவிதைகள் வாங்கும் சக்தி அருகிப்போய்க்கொண்டிருக்கும் நிலப்பகுதியில் -கவிதையென்றால் கசப்பானது என்று பதிவான பொதுப்புத்திக்கு இதனை பந்தி வைப்பது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் என்று மௌனம் கைகளில் வந்து விழுந்தோறும் கவலையில் மனம் தோய்ந்துவிடுகிறது. பணமோ