Skip to main content

Posts

Showing posts from August 28, 2011

உடைந்து உருப்பெறும் சொற்களும் , அது தரும் சுகானுபவமும்.

                 இவன்தான் ஆக இளையவன் -சூர்யா           என் வீடு குழந்தைகள் நிறைந்த வீடு. என் மகள் என் மகன் வழிப்பிள்ளைகள் மொத்தம் ஐவர். 'நாம் அறுவரானோம்'  எனும் பிரகடனத்தோடு என் இளைய மகன் குழந்தை இந்த டிசம்பரில் இவ்வுலகம் காண வருகிறது. வருக வருகவென வரவேற்கக் காத்திருக்கிறோம் எல்லாரும். குழந்தைகள் இருக்கும் உலகம் குடும்பங்களுக்குப் புதிதல்ல என்றாலும் ஒவ்வொரு குடும்பத்திலும் குழந்தைகள் ப்ற்றிச் சொல்வதற்கு எண்ணிக்கையற்ற கதைகள் வற்றாத நதிபோல சம்பவங்களால் நிறைந்து  கொண்டேதான் இருக்கின்றது. அவை சுவையானவை- சுகமானவை . திகட்டத் திகட்ட  உண்ணச்சொல்லும் சொல் உணவு நிறைந்தவை. ஆகக் கடைசி பேரனுக்கு இப்போதுதான் இரண்டு வயதைத் தாண்டுகிறது. அவன் இரண்டு வயதுக்குள் சில சொற்களை சொல்ல ஆரம்பித்துவிட்டான்.குழந்தைகளற்ற வீட்டை விட , அவை இருக்கும் வீட்டில் பேச்சு சீக்கிரம் பிடிபட்டு விடும்  மழலைகளுக்கு. காதுகள்தான் சொற்களை உள்வாங்கி சேகரம் செய்து மூளை முதிர்ச்சி பெறும் தருவாயில் வாயில் உருப்புகளின் ஒருங்கிணைவில் சொற்கள் பிறந்துவிடுகினறன். அதனால் குழந்தைகளிடம் நாம் நேரம் இருக்கும்போதெல்லாம் பேச வேண்டும

விடுபட்ட நினைவுகள்-எஸ்ராவுடனான சந்திப்பில்

1. கோலாலம்பூரின் மஸ்ஜிட் இந்தியா பேரங்காடி ஒன்றில் இரண்டுமணி நேரத்துக்கு மேல் அலைந்து கொண்டிருந்தபோது களைப்பாய் இருந்தால் சொல்லுங்கள் ஓய்வெடுக்காலாம் என்றார். "நானும் ஒரு ஸ்போர்ட்ஸ் மேன்தான். இன்றைக்கும் மலை ஏறும் பயிற்சி செய்கிறேன்," என்றேன். பின்னர் தொடர்கிறது எங்கள் பேரங்காடித் தேடல். பல பொருட்களின் விலை இந்தியாவை விட இங்கே அதிகம் என்றார். சில பொருட்களின் விலை வேறுபாட்டை அவரால் சொல்ல முடிகிறது.  ஒரு காணொலி நாடா விற்கும் கடையில் நின்று காணொலி நாடாக்களை அலசினார். பின்னர் ஒன்றைத் தேர்ந்தெடுத்தார். அது யாஸ்மின் அஹமட்டின் செப்பிட் திரைப் படம். (யாஸ்மின் தன்னுடைய ஐம்பத்தோராவது வயதில் ஒருதிரைப்படம் குறித்து பேசிக்கொண்டிருந்தபோது மாரடைப்பால் மரணமுற்றார்). மாலேசியப் படங்களில் யாஸ்மினின் படங்கள் வித்தியாசமானவை என்றார். உலகத்திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆரவம் உள்ளவர் எஸ்ரா. நான் கடைசியாகப் படித்து முடித்த 'காற்றில் யாரோ நடக்கிறார்கள்" நூலில் உலகத்திரைப்படங்கள் குறித்து மிக விரிவாக பதிவு செய்துள்ளார். படிக்க வேண்டிய நூல். ஒரு நண்பர் யாசின் பற்றி என்னிடம் கூறியுள்ளார்.