Skip to main content

Posts

Showing posts from December 30, 2012

3.சீனப் பெருஞ்சுவர்

உள்ளபடியே நாங்கள் கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நகருக்குக் கிளம்பிய போது மாலை மணி 6.30. காலை மணி11.00 அல்ல. முன்னர் சொன்னது தவறு. பெய்ஜிங் மாநகரின் விமான நிலையத்தை வந்தடைந்தபோது நள்ளிரவைத்தாண்டி விட்டிருந்தது. இரவு மணி 1.00 இருக்கலாம். மலேசியாவுக்கும் சீனாவுக்கும் நேர வித்தியாசம் ஒரு 15 நிமிடங்கள்தான். அங்குள்ள கடிகார கணக்குப்படி. அது ஒன்றும் பெரிய வித்தியா.லேசியக் கடிகார நேரம்தான் அங்கேயும். விமானத்தில் இரவு உணவு கொடுத்தார்கள். முன்கட்டணம் வசூலித்த பணத்தில்தான். பரவாயில்லை பசிக்கு இறங்கும் சுவைதான். வந்திறங்கியதும் பசி வயிற்றைக் கிள்ளியது. எங்களின் சுற்றுப்பயண வழிகாட்டி தன்னை மைக்கல் என்று அறிமுகப் படுத்திக் கொண்டான். வெளியே இரண்டு மணி நேரம் காத்திருந்ததாகச் சொன்னார். சற்றும் தாமதிக்காமல் மெரியோட் 5 நட்சத்திர விடுதிக்கு ஒரு வேனில் அழைத்துச் சென்றார். விமான  நிலையத்திலிருந்து ஒன்றரை மணி நேர ஓட்டம். பெய்ஜிங் மாநகரம் ஒளி வெள்ளத்தில் பூத்திருந்தது. பனி கொட்டிக்கொண்டிருந்தது. விமானத் தளத்தின் வாசலிலிருந்து வேன் வந்து நின்ற இடத்துக்கு ஒரு மூன்று நிமிட நேர நடைதான். அந்த மூன்று நிமிட நே

2. சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

    20 டிசம்பர் வீட்டிலிருந்து கிளம்பி மூன்று கார்களில் கோலாலம்பூருக்குப் புறப்பட்டோம். 2 கார்களில் புறப்படலாம் என்ற எண்ணத்துக்கு  தடிமனான குளிராடைகள் குறுக்கே நின்றன. முதல் நாள் இரவில் உறவினர் வீட்டில் தங்கிவிட்டு மறுநாள காலை விமான ஏறுவதாகத் திட்டம். மூன்று கார்களையும் ஏழு நாட்களுக்கு விமான நிலையத்தில் பார்க்கிங் செய்வதற்கான கட்டணம் மிச்சம். உறவினர்களே விமான நிலையத்தில் விட்டுச்சென்று 27ம் நாள் வந்து ஏற்றிக்கொண்டனர். பாவம் சிரமம்தான்.வேலையிலிருந்து விடுப்பெடுத்து  முகம் கோணாமல் உதவியாக இருந்தனர்.                 விமானத்தில் ஏறி அமர்வதற்கு முன்னர் பூர்வாங்க வேலைகளையெல்லாம் முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. எங்கள் பயணப் பைகளின் சுமை 5 கிலோ கூடிவிட்டிருந்தது. அதற்கு ஒரு கிலோவுக்கு 50 ரிங்கிட் விதித்தார்கள். நான் சொன்னேன் கைப்பைகள் ஒவ்வொன்றும் 7 கிலோக்கள் இருக்காது. கூடுதல் சுமையை கைப்பைகளில் போட்டுக்கொள்ளலாமென்று. என் இரு மகன்களும்  "ச்சும்மா போங்கப்பா நாங்க பாத்துக்கிறோம், வந்துட்டாரு கஞ்சத்தனத்த காட்ட" என்று விரட்டினர். "தண்டத்துக்கு 250 ரிங்கிட் கட

சீனப் பெருஞ்சுவரை நோக்கி ஒரு பயணம்

    டிசம்பர் 21 - 27 வரையிலான சீனப் பயணம்                                                           சீனப்பெருஞ்சுவரில்                                            என் மகளும் மருமகனும் என் பேரப்பிள்ளைகளில் மூவர் “கடுமையான  குளிர் காலத்தில சீனாவுக்குப் போலாங்கிறியேஸ குளிர இந்த ஒடம்பு தாங்குமாஸ?” என்று சீனப் பயணத்துக்கான ஏற்பாடுகள் செய்த என் மூத்த மகனைக் கேட்டேன். “என்னாப்பா என்னமோ எவர்ஸ்ட் மலை உச்சிக்கு கொண்டு போற மாரி பேசுறீங்க! ச்சும்மா வர்ரீங்களா” என்றே கையைப் பிடித்து இழுத்துச் செல்லாத குறையாய் விட்டேத்தியாய் பேசுவான். “எங்களுக்கெல்லாம் வயசான ஒடம்புடா, சீக்கு செவாப்பெல்லாத்துயும் வா வா வந்து ஒட்டிக்கன்னு  வலிய போய் வரவேற்கிற ஒடம்பு ,” என்றேன். “எம்பது வயசுல இமய மலையெல்லாம் ஏர்றாங்க, அவங்கல்லாம் நல்லாத்தான் இருக்காங்கஸ. ஒங்களத்தான் அதிசயமா வந்து தாக்குதான்” என்று வாயை அடைத்தான். என் மேல் அவனுக்கென்னவோ பழைய கோபம் இருக்கலாம்!  அவன் எங்கேயாவது சுற்றுப்பயண ஏற்பாடு செய்தால் எனக்கு ஒரு அதிர்ச்சித் தகவலாகவே இருக்க வேண்டுமென்றே பொத்திப் பொத்தி வைத்து கடைசி நேரத்தில் க