8. அக்டோபஸ் கவிதைகளும் அடர்ந்த கவித்துவமும் பேரப்பிள்ளைகளில் சுபாவங்களை உற்று நோக்கி கவனிக்க வேண்டுமென்பதற்காகவே நமக்கெல்லாம் ஓய்வு கொடுக்கிறார்கள் போலும். குழந்தைகளின் நடவடிக்கையை மிக அருகாமையிலிருந்து பார்ப்பது மிகுந்த உளச் சுகம் தரக்கூடியது. வேலை நாட்களில் வாழ்வின் நெரிசலில் இதுபோன்ற அவதானிப்புக்கு இடமற்றுப் போகிறது. அதனால் உணாடாகும் ரசனையை நம்மால் சுவைக்கமுடிவதில்லை. என் பேரனுக்கு இப்போது ஒன்றரை வயதாகிறது. அவன் செய்கைகள் படிப்பினையை கொடுக்கக்கூடியதாக் இருப்பது இந்த வயதிலும் சின்னக் குழந்தைகளிடம் கற்றுக்கொள்ளவே செய்கிறோம். கற்பது என்பது சாகும் வரை நடக்கும் ஒரு தொடர்செயல் என்பது எவ்வள்வு உண்மை? குழந்தைகளின் மிக நுணுக்கமான செய்கைகள் அவர்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்ககூடியவை. என் பேரன் படுக்கப்போவதற்கு முன்னர் அவன் தாயின் புடவையொன்றை இழுத்துவைத்துக்கொள்வான். தன் பால்புட்டியோடு புடவையையும் சேர்த்தே சதா அணைத்தபடியே இருப்பான். அதனை இழுத்துக்கொண்டு நடக்கும்போது பலமுறை சிக்கியும் விழுந்திருக்கிறான். அவனிடமிருந்து அந்தப்புடவையை வாங்கும் எங்கள் முயற்சிகள் , அவன் அதனைத் தனதாகிக்கொள்
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)