Skip to main content

Posts

Showing posts from February 20, 2011

மைனா-மிகை உணர்ச்சிச் சித்திரம்

கோ.புண்ணியவான். நான் சினிமாப் படம் பார்ப்பது மிகக்குறைவு. சினிமா விமர்சனங்களைப் படித்தும் , பார்த்தவர்கள் கருத்து சொல்லும்போது கேட்டும் படங்களைத் தேர்ந்தெடுப்பேன். அப்படிக் கவனமாகத் தேர்வு செய்தும் , தியேட்டரில் அமர்ந்து பொறுமிக்கொண்டு பொழுதைக் கொன்ற தருணங்கள் இம்சையானவை (குடும்பத்தோடு போனதால் வெளியே தப்பித்து ஓட முடியவில்லை). தமிழ் சினிமாவை நான் வெறுக்க ஆரம்பித்தது எம் ஜி ஆரின் மிகை ஒப்பனையைப் பார்த்த பிறகு. தன் போலி பிம்பத்தை முன் வைத்து அரசியல் லாபத்துக்கு அவர் தன்னை முன்னெடுத்த போது என் எதிர்ப்புணர்வு துவங்கியது. அவர் ஒப்பனை முகத்தைச் சுரண்டிப் பார்த்தால் கால் அங்குல ஆழத்துக்காவது முகப்பூச்சை சுரண்டி எடுக்கலாம். அதிலும் தன்னுடைய தள்ளாத வயதில் பதின்ம வயது நடிகைகளுடன் ஜோடி போட்டது என்னைபோன்ற ரசிகர்கள் செய்த பெரும்பாவம். இன்றைக்கு மலேசியாவில் ஆளும் கட்சிக்கு ஆதரவாய்ச் செயல்பட்டு ‘சத்து மலேசிய’ சுலோகத்தைத் ‘தூக்கிப் பிடித்து’ நம் மக்களை ஏமாற்றும் அரசு சார்ந்த ஊடகத்தைப் போலவே தமிழ் நாட்டிலும் , நடிகர்களை வளர்த்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. அதன் கோள

ஒரு பூங்காற்று திரும்புமா?

மலேசிய வாசுதேவனின் மரணச் செய்தி செவிப்பறைக்குள் தீப்பிழம்பாய் பாய்ந்ததிருந்தது. அதனை எழுதும்போது மனசும் வலிக்கிறது. நாம் நீண்ட நாள் பாதுகாத்து வைத்திருந்த , விலை மதிக்கமுடியாத பொருளொன்று கைத்தவறிப்போய் இனி கிடைக்கவே வாய்ப்பில்லை என்றாகிவிட்டது. அந்த நிதர்சனத்தை நினைக்கும்போது , ஒரு வெறுமை தன்னை நிலைகொள்ளச் செய்து கொள்கிறது. மலேசியா என்ற சொல்லை முதன் மொழியாக்கி தன் பெயரை வரும் மொழியாக்கி தன்னை ஒரு தேச பக்தனாக அடையாளத்தை நிறுவிய வாசு இன்றில்லை. ஒவ்வொரு முறையும் அவர் பாடல் ஒலிக்கும்போது வாசுதேவன் என்று வாய்த்தவறி கூட சொல்லியிருக்க மாட்டார்கள் ஒலிபரப்பாளர்கள். மாறாக மலேசிய வாசுதேவன் என்றே சொல்ல வைத்து தன் தேசத்தை முன்னிறுத்தியவர் வாசு. எண்ணிக்கையிலடங்காத அளவுக்கு மலேசியா என்ற சொல்லை திரும்பத் திரும்ப சொல்லவைத்தவர் வாசு. இனியும் ஊடகங்களைச் சொல்ல வைப்பார். மலேசியா என்ற சொல்லை உலக அளவுக்குப் பரப்பிய இன்னொரு நபரை நினைவுகூர முடியவில்லை. ஷாருக்கானுக்கு டத்தோ பட்டத்தை முன்மொழிந்த மலாக்கா முதல்வர் நம் தலைவர்களைவிட எவ்வளவோ மேல். மலேசிய என்ற சொல்லை விடவா டத்தோ உயரியது என்று எண்ணியிருப்பார்கள