Skip to main content

Posts

Showing posts from May 26, 2013

காதலியின் காதே அதிக சுவையானது!

                                                               அண்டன் ஷெக்கவ் சமீபத்தில் சவூதியில் ரிசானா என்ற இலங்கைப் பணிப்பெண்ணுக்கு இஸ்லாம் சமயத்தின் ஷர்ரியா சட்ட அடிப்படையில் மரண தண்டனை வழங்கப் பட்டது என்னை உலுக்கியது. சவூதியில் ஷர்ரியா சட்டம் ரிசானாவுக்கு வழங்கிய மரண தண்டனை முறையை யார் வாசித்திருந்தாலும் எனக்கு நேர்ந்த அதே திகிலும் பீதியும் அவர்களுக்கும் ஏற்பட்டிருக்கும். இலங்கையைச் சேர்ந்த ரிசானா என்ற இளம் பணிப்பெண் சாவுதியில் வீட்டு வேலைக்காகப் போயிருக்கிறாள். அவள் பராமறிப்பில் இருந்த குழந்தை புட்டிப்பால் அருந்தும் தருணத்தில் பால் மூக்கிலேறி மூச்சுத்திணறி இறந்துவிட்டிருக்கிறது. ரிசானாதான் குழந்தையைக் கழுத்து நெரித்து கொன்றிருக்கிறாள் என்ற ஆதாரப் பூர்வமான சாட்சியங்களின் அடிப்படையில் சவூதி இஸ்லாம் ஷரியா சட்டம் அவளுக்கு மரண தண்டனை விதித்தது. அவள் குற்றச்சாட்டை மறுத்தாள். தனக்கு விதிக்கப்ட்ட தண்டனை பற்றியும் அறியாதவளாகவே இருந்திருக்கிறாள்.  ஷர்ரியா சட்டம் இன்னும் சில இஸ்லாம் நாடுகளில் நடப்பில் உள்ளது. ஏன் இது போன்ற தண்டனையை இஸ்லாம் நாடுகள் சில அமலில் வைத்திருக்கிறது என்று ஒர