Skip to main content

Posts

Showing posts with the label ஜெயமோகனுடனான இலக்கிய முகாம் பல்வேறு தலைப்புகளில் தீவிரமா உரையாடியது.

ஜெயமோகனோடு மலேசியாவில் ஒரு இலக்கிய முகாம் (கன்னி முயற்சி)

முகாமின் முகங்கள் இலக்கிய முகாம் முழுக்க ஜெயமோகனைத்தான் பேச வைக்க வேண்டும் என்று பூர்வாங்க ஏற்பாடு செய்திருந்தோம். அவர் பேசிய பின்னர் அது தொடர்பான உரையாடலை மேற்கொள்ளலாம். அதுவே உசிதம் என்றே முடிவெடுத்திருந்தோம். ஆனால் பிற்பாடு, பேசியபின்னர்  அவர் களைத்துவிடுவார். அதனால் மலேசிய இலக்கியம் தொட்டும் கொஞ்சம் விவாதிக்கலாம் என்று மறு முடிவு செய்தோம். நான் மலேசிய சிறுகதை ஒன்றைத் தொட்டு உரையாடலை ஆரம்பிக்கும்படி முடிவெடுக்கப்பட்டது. நவீன், மலேசிய நாவல்கள் பற்றி பேசவைக்கலாம் என்றும், யுவராஜன் மலேசிய நவீன கவிதை தொடர்பான விவாதத்தை முன்வைத்து பேசவேண்டும் என்றும் முடிவு செய்தோம். ஜெயமோகனோடு இரு நண்பர்கள் வருகிறார்கள் அவர்களையும் ஏதாவது தலைப்பைக் கொடுத்து கலந்துகொள்ள வைத்தால் முகாம் சிறப்புறும் என்பதற்காக ராஜமாணிக்கத்தைத் தொடர்புகொண்டு அவர் கொடுத்த மூன்று தலைப்புகளில் 'விதி சமைப்பவர்கள்' தலைப்பில் பேசவைக்கலாம் என்று தோணியது. ஜெமோ எழுதிய ஒரு கட்டுரை அது. உரையாடலை விவாதமாக்கக் கூடிய மிக உற்சாகமான தலைப்பு அது. அவர் உடன்பட்டார். இப்போது ஜேமோ பேசப்போகும் ...