Skip to main content

Posts

Showing posts from January 3, 2010

ஒரு தடுப்புச்சுவரிலிருந்து படரும் இருள்

1. அந்தக்கம்பத்தில் கால்வைத்தபோது அந்நிய பிரதேசத்தில் நுழைந்துவிட்டதுபோன்ற குற்றமனம் உறுத்தியது.. கம்பத்துக்குள் நுழைவது அதுதான் முதன்முறை என்பதனால்.. கரீம்தான் கண்டிப்பாய் வரவேண்டும் என்று கையைப்பிடித்து வலிய கேட்டுக்கொண்டான். எல்.சி.இக்கு நான்கு மாதமே இருக்க நானும் அவனும் மிக நெருக்கமாகிக்கொண்டிருந்தோம். என் மலாய் மொழியின் சந்தேகத்தை அவனிடமும், அவனின் கணிதப்பாட சந்தேகத்தை நானும் தீர்த்துக்கொண்டதில் உண்டான எங்கள் நட்பு, ஒரே தட்டில் சாப்பிடப் பழக்கமாகி, ஹரிராயாவுக்கு அவன் வீடுவரை என்னை இழுத்து வந்திருக்கிறது. அவன் வீடு இன்னதுதான் என்று அவன் கொடுத்த பத்தாவது மைல் கல், பள்ளிவாசல், இரு கிளைகள் ஓடிய தென்னை அச்சு அசலாய் அடையாளம் காட்ட, எங்களை வரச்சொன்ன அவனை வாசலில் காணமல் ஏமாற்றம் சின்னதாய் கோபத்தைக்கிளறியது. எனக்குப்பரிச்சியமான ஒரே முகம் கரீமுடையதுதான். நான் வீட்டு முன் உங்களுக்காகக் காத்திருப்பேன் என்று சொன்னவனைக் காணாததால் அந்த அந்நியம் எங்களுக்குள் நுழைந்திருக்கலாம். ஓங்கி வளர்ந்து நீண்டிருந்த தென்னை மரங்கள் அந்தக் கிராமத்தைத்தாங்கும் தூண்கள் போன்று நின்றிருந்தன. அப்போதுதான்

விளையாட்டுப்பருவத்தைக் கபளீகரம் செய்யும் கல்வித்திட்டம்

நேற்று என் பேரன் முதலாம் ஆண்டில் காலடி எடுத்துவைத்திருக்கிறான். பள்ளி ஆண்டு துவங்குவதற்கு முன்னாலிருந்தே அவனைப்பதிவதற்கான முன்னேற்பாடுகளின் போது அவன் காட்டிய ஆர்வமும் பரபரப்பும் அவன்பால் அதிகம் ஈர்க்கவைத்தது. அவனுக்காக வாங்கப்பட்ட புத்தகப்பையை என்னிடம் காட்டி அவன் ஆத்தா வாங்கிக்கொடுத்ததாக சொல்லி அதனைப் பயன்படுத்தும் முறையை என்னிடம் விளக்க ஆரம்பித்தான். புத்தகப்பையைத் தூரமாக எடுத்துச்செல்லும்போது அதனை இலகுவாக இழுத்துச்செல்லமுடியும் எனச்செய்து காட்டினான். அதனை முதுகிலும் சுமந்து செல்வதற்கான முறையையும் செய்து காட்டினான். தன் புதிய வெள்ளைக்காலணிகளையும் காலுறைகளையும் போட்டுக்காட்டி அவை பள்ளியில் சுத்தமாகப்பயன்படுத்த வேண்டும் என்றும் விளக்கினான். அவனுக்கு வாங்கித்தரப்பட்ட பென்சில் பெட்டியையும் காட்டி, அவற்றுக்குள் என்னென்ன இருக்கிறது அதன் பயன்பாடு என்ன என்பதையும் விளக்கிய வண்ணமிருந்தான். அப்போது அவன் முகத்திலிருந்தும் உடல் மொழியிலிருந்தும் வெளிப்பட்ட வெளிச்சம் பிரகாசமாய் இருந்தது. அவன் பெறப்போகும் புதிய அனுபவத்தின் படிமங்களை ரசித்தது சுகானுபவமாக இருந்தது. தனக்கான ஒரு கற்பனை உலகத்தை
அன்பு சகோதரருக்கு, நமஸ்காரம். நிங்ஙளின் வலைப்பதிவை படிக்கிறேன். விளிம்பு நிலை--க் கவிதை நன்றாக உள்ளது. கட்டுரைகளும் அப்பழுக்கில்லை. சுவாரஸ்யத்துடன் படிக்கத் தூண்டுபவையே, அதிலும் மலேசியாவின் இன்றைய நிலையை அழகாக படம் பிடித்துக்காட்டுகிறீர்கள்.. ஒரு சம்சயம். தமிழாசிரியர் என்பதால் கேட்கிறேன். நிங்ஙளின் முகப்புக்கட்டுரையில், கபலீகரம் என்று வருகிறதே? சரியா என்று தெரியவில்லையே? கபளீகரம் என்பதுதானே தூய தமிழ்ச்சொல். தட்டச்சின் அவசரத்தில் அப்படி வந்து விட்டதோ? அன்புடன் கமலாதேவி.சிங்கப்பூர்

விளிம்பு நிலையில் கடவுள்

அரசர் சாலமனிடம் இன்னொரு விசித்திரமான வழக்கு வந்தது ஒரே கடவுளை இரு மதங்கள் உரிமை கொண்டாடின சாலமன் ஆழச்சிந்தித்து ஒரு முடிவுக்கு வந்தான் கடவுளைச் சம பாதியாக துண்டுபோட்டு ஆளுகொன்றாய் கொடுத்துவிடு என்று உத்தரவிட்டான் கதி கலங்கிய இரண்டு மதங்களும் அழுது கதறிப்புலம்பின தன் வாழ்நாள் முழுதும் இரண்டு பக்கமும் இருந்துவந்த கடவுள் இப்போது யார் பக்கமும் போகாமல் இருந்துவிட்டார்.