Skip to main content

Posts

Showing posts from June 2, 2013

ஆணாதிக்கக் குரலும், பெண்ணிய சிந்தனையும்

                             கடந்த ஞாயிற்றுக்கிழமை என் நண்பர் எனக்குச்சொன்ன ஒரு அபலைப் பெண்ணின் கதையை உங்களுக்கும் சொல்கிறேன். இந்த ஒரு வாரமாய் என்னை நிலைகொள்ளாமலாக்கிய கதை. நம் வாழ்வில் அடிக்கடி சந்திக்கும் சம்பவங்களில் ஒன்று இது என்றாலும், இது பெண்களின் கதையென்பதால்தான் சோகம் ஒவ்வொரு முறையும் பழையதை வென்று புதிய துயரத்தைப் பெயர்த்து கொண்டுவந்து அலைக்கழிக்க வைத்துவிடுகிறது.     அவள் வீட்டை விட்டு ஓடி வந்தவள். அதற்குப் பெரும்பாலும் காதலன்றி, வேறு காரணமாக இருக்க முடியாது. தன் காதலின் பிடிப்பால் அம்மாவின் அறிவுரையை தூக்கியெறிந்தவள். அண்ணன் அடியையும் வாங்கிக்கொண்டு காதலே பெரிதென தாங்கிக்கொண்டவள். குறுக்கே நின்றை அத்தனைத் தடைகளையும் உடைத்து நொறுக்கிவிட்டு சுவரேறிக் குதித்தவள்.    ஓடிவந்தவள் அந்தப் பட்டணத்தில் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்ந்தாள். ஆரம்பத்தில் எல்லாம் நன்றாக நகர்ந்து கொண்டிருப்தாய்த்தான் பட்டது. வானத்தில் எப்போதுமே முழு நிலா நிலைப்பதில்லை. ஓடைகள் நீர் நிறைந்து சலசலப்பதுமில்லை!    மலேசியாவுக்கு வருகை தந்த ஜெயமோகனோடு எங்கள் இலக்கிய நண்பர்கள்    அநேகமாக எல்லா ஓடிவ

காதல் போயின், காதல் போயின் சாதல்

                                                                 ஓ ஹென்ரி         அவள் எனக்கு முகநூலில் அறிமுகமான பெண் என்றே முதலில் நினைத்தேன். ஆனால் என்னிடம் படித்த மாணவி என்பதை அப்பெண் தன்னை அறிமுகப் படுத்திய பின்னர்தான் தான் தெரியும். மொட்டுக்களாகவே இருந்துவிடுவதில்லை பெண்கள், சீக்கிரம் மலர்ந்துவிடுகிறார்கள். பின்னர் முற்றிலும் வேறான தனி அடையாளம் வந்துவிடுகிறது  அவர்களுக்கு. ஆண்களைவிட பெண்கள் சீக்கிரம் வயதுக்கு வந்துவிடுவதால் அவர்களின் அறிவு வளர்ச்சியும் ஆண்களை மிஞ்சியதாகவே இருக்கிறது. இதை அனுபவப்பூர்வமாகப் பார்க்கவேண்டும். அவர்களின் அகம் சார்ந்த முதிர்ச்சியும் புலனாகும்.  அறிவு வளர்ச்சியின் உண்மை நிலை மனதில் ஏறும். இப்பெண்ணின் கதை இதற்கு நல்ல சான்றாக அமைகிறது. என்னிடம் அவள் முகநூலின் இன்பொக்சில் உரையாடத் தொடங்கியது தன்னை எனக்கு நினைவு படுத்தத்தான். அப்போது அவள் ஒரு பையனை காதலித்துக் கொண்டிருந்திருக்காலாம். ஏனெனில் அவள் ஒரு ஆண்டுக்குப் பிறகு உரையாட வந்தபோது அவளிடம் காதல் புயலடித்துச் சிதலமான வார்த்தைகள் எஞ்சி இருந்தன. ஒரு நாள் “ உங்களிடம் ஒன்னு கேக்கணும்” என்றே துவங்கினாள