Skip to main content

Posts

Showing posts from January 24, 2010

மறக்கப்பட்ட ஆளுமை

கோ.புண்ணியவான். எம்.ஏ.இளஞ்செல்வன் நினைவாக மலேசிய சிறுகதை எழுத்தாளர் எம் ஏ இளஞ்செல்வன் மாரடைப்பால் திடீர் மரணமுற்ற தகவல் கிடைத்தபோது நான் மலாயா பல்கலைக்கழக துணைவேந்தர் மண்டப வாயிலின் எழுத்துலக நண்பர்களோடு பேசிக்கொண்டிருந்தேன்.டாக்டர் கிருஷ்ணன் மணியம்தான் அவர் இறந்து போன செய்தியை என்னிடம் சொன்னார். அவரின் வசிப்பிடத்துக்கு அருகாமையிலேயே வசிக்கும் எனக்கு கோலாலம்பூருக்குப்போன பிறகுதான் செய்திகிடைத்தது ஒரு துர்ரதிர்ஸ்டம். மனம் பல்கலலைக்கழக மண்டபத்திலிருந்து அப்போதே விடைபெற்றுக்கொண்டிருந்தது. ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த எனக்கு ஒரு இலக்கியப்பேராண்மையின் மரணம் என்னைப்பெரிதும் பாதிக்கத்துவங்கியிருந்தது. ஏனெனில் எம் ஏ இளஞ்செல்வனை ஒரு நண்பராக பார்த்ததைவிடவும், ஒரு சக எழுத்தாளனாக அவதானித்ததைவிடவும், சக தலைமை ஆசிரிய நண்பனாகப் பழகியதைவிடவும், ஒரு இலக்கிய மேலாண்மையை பிரம்மிப்போடு அன்னாந்து பார்க்கும் மன நிலைக்கு நான் தள்ளப்பட்டிருந்தேன். அவருடைய சிறுகதைகளை வாசித்த பிறகு அவரை அமானுடமாக பார்ப்பதை ஒரு தரிசனமாகவே மேற்கொண்டேன். அவருடைய சிறுகதைகள் முற்றிலும் வேறொரு தளத்தில் இயங்கி இ
வணக்கம் சார்.  தங்களின் ‘கோபாலும் அவனைச்சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளும்’ படித்தேன். கோபாலின் நோயைவிட கோபாலைச் சுற்றிப் பின்னப்பட்டுள்ள வலைகளே அவனுடைய வாழ்க்கையில் கொடியதாக அமைந்துள்ளது. பல சமயங்கள் தற்கொலைக்கு முயல்பவனைக் கோழை என்றும் பயமுறுத்தல் என்றும் வகை படுத்த முடியவில்லை. கோபாலின் நோயினால் மற்றவர்களிடமிருந்து எஞ்சியது அனுதாபமும் வெறுப்பும் மட்டுமே. அன்பை இழந்த வெறுமை வாழ்க்கையே அவனைத் தற்கொலைக்குத் தள்ளிவிடுகின்றது. கோபாலின் மனநிலையை உணர முடிகின்றது. அனுதாபமும் வெறுப்பும் வழியும் வாழ்க்கைப்பகுதிகளை அன்பு நிரப்பியிருப்பின் கோபாலின் நோயை எதிர்க்கும் சக்தி மருந்தைத் தோற்கடித்திருக்கும் என சிந்திக்க வைக்கின்றது. அருமையான கதை சார். பாராட்டுகள்.. அன்புடன், க.ராஜம்ரஞ்சனி