Skip to main content

Posts

Showing posts from March 20, 2011

ஆணாதிக்கம் பெண்ணடிமை என்ற மாயை

                                 ஜெயமோகனோடு சுவாமி பிரம்மானந்தா அவர்கள் (அச்சில் இருக்கும் என் சிறுகதைத் தொகுப்புக்கு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வழங்கிய முன்னுரை இது.) உலகில் இருவர் சேர்ந்திருப்பது மிகச்சிரமமான காரியம். ஏனெனில் அடிப்பபடையில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். உலகிலேயே சுதந்திர இச்சையுடன் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் மட்டுமே. அவன் மற்றவர்களோடு பொருந்தி வாழ முடியாததற்கு காரணமே அவன் பகுத்தறிவு உள்ளவன் என்பதாலேயே. என்னதான் இயற்கையான உடற் தேவை காரணமாக அவன் கூடி வாழ விரும்பினாலும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளே இருந்து அவனை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தன் உணர்ச்சியின் உச்ச நிலையைப் பகிர்ந்துகொள்ள உறவுகள் தேவைப்பட்டாலும் அந்த உறவுகளால் ஏற்படும் உரசல்களால் மீண்டும் மீண்டும் அந்நியபட்டே போகிறான். கொந்தளிப்புக்களையும் மனவலியையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்கள் தேவைபட்டாலும் அவர்கள் மேல் உள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை மீண்டும் மீண்டும் அவனை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அவன் தன்னிலை தவிர்த்து வேறெதிலும் பாதுகாப்பை உணராத நிதர்சனம்தான். அதனால்தான் மனிதர்கள

தொடர் 6. பனிப்பொழிவில் 10 நாட்கள்

        சண்டிகார் ஜாஹிர் ஹுசின் ரோஜா நந்தவனத்தில்  6.       மறுநாள் காலையில் சண்டிகாரில் பிரசித்திபெற்ற ரோஜா நந்தவனத்துக்கு அழைத்துச்சென்றார். அது ஒரு உல்லாசப் பூங்கா. முன்னால் இந்திய அதிபர் சாஹிர் உசேன் நினைவாக எழுப்பப்பட்ட பூந்தோட்டம் அது. மலர்களில் ரோஜாவுக்கு எப்போதுமே மாறாத மௌசு உண்டு. ரோஜாத்தோட்டம் தானே என்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட எனக்கு ஒரு பிரமிப்பு காத்திருந்தது. ஏறத்தாழ நாற்பத்திரண்டு ஏக்கர் நிலத்தில் வெறும் ரோஜா வகைகளே நடப்பட்டிருந்தன. 1700 வகை ரோஜாப்பூக்கள் என்று விளக்கப்பலகையில் எழுதியிருந்தது. 1700 வகையில் நான் ஒரு மூன்று வகை ரோஜாவைக்கூட என் வாழ்நாளில்  பார்த்திருக்கமாட்டேன். பல வண்ணங்களில் பூத்துக்கிடந்தன. சிவப்பில் , இளஞ்சிவப்பில், ரத்தச்சிவப்பில். ஊதாவில் மஞ்சளில் வெள்ளையில், பழுப்பில் என் சொல்லி விளக்க முடியாத பல வண்ணத்தில் பல வடிவத்திலும் நம்மை ஈர்த்தன. சில நம் இரண்டு கைகளையும் விரித்தால் வரும் அளவில் பூக்கள் விரிந்து சிரித்தன. அதனைக் காவல்காக்க பராமறிக்க சில பணியாட்கள் என்னேரமும் கடமையில் இருந்தார்கள். காலை நடை பிரியர்கள் ரோஜாவை ரசித்துக்கொ

தொடர் 5. பனிப்பொழிவில் 10 நாட்கள்

     in Chandigar hotel, and in simla 5.     இங்குள்ள இயற்கை வளத்துக்காகவும், கனி வளத்துக்காகவும்தான் , இந்தியாவை வளைத்துப்போட அரசு நிர்மாணித்து மக்களை அடிமைப் படுத்தினான். எவ்வளவு போராட்டம். ? எத்தனை மரணம்? எவ்வளவு துப்பாக்கிப் பிரயோகம்? நாட்டை ஒரே ரத்தக்களரியாக்கிவிட்டுத்தான் சென்றான். வெள்ளைக்காரனுக்கு அஞ்சாமல் நிமிர்ந்து திமிறோடு சண்டை யிட்ட பஞ்சாப் பகத் சிங்கை மறக்கமுடியுமா? அவர் பிறந்த மாநிலத்தில் அப்போது நான் இருக்கிறேன் என்பதே உடல், உள்ளம் சிலிர்க்கும் தருணம். அவர் போரிட்ட இடங்களை என் கால்களும் மிதிக்கப் போகிறது என்பதில்  என் நீண்ட நாள் கனவு. அவர் வெள்ளையர்களால் தூக்கிலடப்படுவதைப் பற்றி காந்தி வாய்த்திறக்கவில்லை, என்ற செய்தியை நான் ஜெயமோகனின் ‘இன்றைய காந்தி’ யைப்படித்த போது சற்று கோபம் வந்தது. காந்தி பிரிட்டிசாருக்கு எதிராக ரத்தம் சிந்தாத அகிம்சை வழியை பின்பற்றி யிருந்தவர். தன் கொள்கைக்குச் சவால் வரும்போதெல்லாம் சத்யாகிரகத்தைக் கடைபிடித்து   மக்களை தன் வழிக்குக்கொண்டு வந்தார். ஆனால் பகத் சிங்குக்கு அதில் விருப்பமில்லை. தன் 12 வயதில் தம் மக்களை பிரிட்டிசார் துப்பாக்கி முனை