Skip to main content

Posts

Showing posts from January 19, 2014

19. காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

கங்கை அழைப்பைக் தடுக்கும் வனிகச் சாமியார்கள் அரிதுவார் மனதை ஒருநிலைப் படுத்தும் இயற்கை அழகு நிறைந்த இடம். காசிபோலல்லாமல் கொஞ்சம் சுத்தமாகத்தான் இருகிறது. கிளை நதிகள் சங்கமித்து சலசலத்தோடும் நதிநீர் நம்மை தண்மையாகவே வைத்திருக்கிறது. தண்ணீரின் இறைத் தன்மை அது. கங்கை மாதா தாய்மையின் தண்மை அது. நீர்  கடவுளாகவும், தாயாகவும், அன்பைச் சொரியும் கன்னியாகவும் பல அவதாரங்களில் நம்மை தடுத்தாட்கொள்கிறது. இறை நம்பிக்கை இல்லாதவரையும் இந்த நதியென்னும் இயற்கை அன்னை ஆரத் தழுவி தன் தண்மையை சொரிந்து விடுவதில் இயற்கைதான் இறைவன் என்ற வேதாந்த கற்பிதத்தை போதிக்கிறது. மீண்டும் ரிசிகேசின் தபோவனம் விடுதிக்குத் திரும்புகிறோம். பரிமாறிய உணவு வகைகளையே திரும்பத் திரும்ப பரிமாறுகிறார்கள். பசியோடு போனால் ஏதோ சாப்பிடலாம். பசியற்றவர்கள் தட்டைத் தள்ளி வைத்து விடுகிறார்கள் . பயண ஏற்பாட்டுத் தலைவர் 'சாப்பாடு நல்லாதான் இல்ல' என்று நம்மோடு ஒத்திசைத்து ஆறுதல் படுத்தும் மனோவியல் தெரிந்து வைத்திருந்தார். ஆனால் சற்றே வராண்டா பக்கம் பார்த்தால் மலையைத் தழுவி மலர்ந்திருக்கும் பனிக்கூட்டமும்,பச்சைப் போர்வையில் முக

18. காசிக்குப் போவது பாவம்தீர்க்கவா?

ஒரு சாபமா?        காசிக்கு அடுத்து ரிசிகேஸ் கிளம்பவேண்டும். பேருந்தில்தான் மீண்டும் டில்லிக்குப் போய் அங்கிருந்து ரிசிகேசுக்குப் போகவேண்டும். டில்லியை அடைந்தவுடன் படுத்துறங்கி பயணத்தைத்தொடர்கிறோம். எட்டு மணி நேரத்துக்கு மேலாகிறது ரிசிகேஸை அடைய. மலை உச்சியில் தபோவனம் விடுதிதான் நாங்கள் இரு இரவுகள் கழிக்கவேண்டும். ஊருக்குத் தகுந்த பேர்.பாதையைத் தவற விட்ட ஓட்டுனர் தொலைபேசியில் விசாரித்து விசாரித்து, சுற்றி அலைந்து மலை அடிவாரத்தை அடைந்தார். இரவு சாய்ந்து கொண்டிருந்தது. மலை அடிவாரத்தை நெருங்கியதும் மழை தூறல் போட்டு  பூமியை ஈராமாக்கி இருந்தது. அடர்ந்த காடு. இன்னும் எத்தனை மணி நேரமாகும் என்று வயிறு கேட்டுக் கொண்டே இருந்தது. குறைந்தது ஒன்றரை மணி நேரமாகும் என்று சொன்னார்கள். மழையின் காரணத்தால் இன்னும் தாமதமாகலாம். சாலை வலைந்து நெலிந்து போய்க்கொண்டிருந்தது. தூரம் என்று கருதிய படியால்தான் சாலைமேல் பழியைப் போட்டு 'சாலை போய்க்கொண்டிருந்தது ' என்று சலித்துக்கொள்கிறோம்.  மலை உச்சியை அடைய அடைய  குளிரும் உச்சியை அடைகிறது. இரண்டொரு விடுதியைக் கடந்து போகிறோம். 'இந்த விடுதியா' எ