Skip to main content

Posts

Showing posts from April 24, 2016

படைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்

சிறுகதை படைப்பாளன் எதிர்கொள்ளும் பத்துக்கு மேற்பட்ட அவமானங்கள்                                                                                          1 கவிஞர் சோழவேந்தனின் ‘கரும்புத்தோட்டம்’ நூல் வெளியீட்டு அழைப்பிதழ் சேர்ந்த சில மணி நேரத்திலேயே அவரிடமிருந்து தொலைபேசி அழைப்பும் வந்தது. தபால் மூலம் வந்து சேரும் நேரத்தை ஜோசியரிடம் கணித்திருப்பார் போலும்! அழைப்பிதழ் கிடைத்திருக்கும் என்றும் நிகழ்ச்சிக்கு வந்து ஆதரவு வழங்கும்படியும் பின்னூட்டத் தகவலுக்காக போன் செய்தேன் என்றார். அவர் நூல்வெளியீட்டை சற்றுத் தடபுடலாகவே செய்யவிருப்பதாகச் சொன்னபோது எனக்குக் கொசுறாக கல்யாண மேளம் நாதஸ்வர ஓசை கேட்டது. உற்றார் உறவினரையும் நண்பர்களையும் எழுத்தாளர்களையயும், தான் வாடிக்கையாளனாக இருக்கும் மீன்காரன், மளிகைக் கடைக் காரர் தன்னைச் சிகை அலங்காரம் செய்பவர், தினசரி கடந்து போகும்போது புன்னகை சொரிபவன், திரும்பாத மொய் கடனாளி,(ஆயிரம் அழைப்பு அடித்ததே அதனை கொடுத்த முடிக்கவேண்டும் என்ற கட்டாயத்தில்தான்) என ஒருவர் விடாமல் அழைப்பு கொடுத்திருப்பதால் அனைவரும் கண்டிப்பாக வரக்கூடிய வாய்ப்பு இருப்பதாகச் சொன்னார்.