Skip to main content

Posts

Showing posts from 2016

ரெ.காவின் சளைக்காத அறுபது ஆண்டுகள்- அஞ்சலி

                                                            1980  களின் இறுதியில் என்று நினைக்கிறேன். பினாங்கு அறிவியல்  பல்கலைக் கழகத்தின் ஏதோ ஒரு விழாவுக்குக் சென்றிருந்தேன். அங்கே சில நூல்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் டாக்டர் ரெ.கார்த்திகேசுவின் ‘வானத்து வேலிகள்’ நாவலும் இருந்தது. ரெ. கா பெயரைப் பார்த்தவுடன் அந்நாவலை வாங்கிக்கொண்டேன். விலை மூன்று ரிங்கிட். அதனை இரண்டு நாளில் படித்து முடித்துவிட்டு அவருக்கு ஒரு கடிதம் போட்டேன். முகவரி நூலில் இருந்தது. ஒரு புல்ஸ்கேப் தாளில் எழுதப்பட்ட என் பார்வையின் பதிவு அது. அதற்கு முன்னும் அதற்குச் சில ஆண்டுகள் கழித்தும் அவரைச் சந்த்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘வானத்து வேலிகள்’  நாவல் என்னை அக எழுச்சி பெறச்செய்த நூல். பிற நாவல்கள் வாசிப்புக்கான  நுழைவாயிலைத் திறந்து வைத்திருந்தது . என் முதிராப் பருவத்தில் என்னை வாசிப்பு இன்பத்தில் ஆழ்த்திய நூல். அந்நூலின் நிலக்காட்சிகளில் என் வாழ்க்கைப் பின்புலந்த்தை துல்லியமாய்ப் பார்த்தேன். அதில்  இருபது ஆண்டுகளாக நான் எதிர்கொண்ட கதை மாந்தர்கள்  உயிர்ப்போடு இருந்தார்கள

அக்கினிக் குஞ்சு- சிறுகதை

                                                          அக்கினிக் குஞ்சு                                                                (சிறுகதை)                      இரும்புக் கம்பிக் கதவுக்குள்ளே தள்ளப்பட்டதும் கதிர் வெடவெடத்துப் போனான். பீதி மெல்ல மேல்ல ஊடுறுத்து மனம் முழுவதும் விஷச் செடிபோல பரவித் தைத்தது. அவர்கள் அடுத்து தன்னை என்னவோ செய்யப் போகிறார்கள் என்பதை நினைக்கும்போதே உடலுக்குள் பீதி இழை இழையாய்ச் சரிந்து இறங்கியது.  உடலின் நடுக்கம் குரல்வலையை அடைத்து வார்த்தைகளை பிசிறச் செய்தன. பல சமயங்களில் அவன் சொல்ல நினைப்பவை சிதறி  உதிர்ந்தன. சிலுவாரையும் சட்டையையும் கழட்டச் சொல்லிக் கட்டளை பிறப்பித்தான் ஒரு போலிஸ். முதலில் சிலுவாரைக் கழட்ட பின்வாங்கினான். ஒரு புஜம் திரண்ட போலிஸ்  ‘”புக்கா” என்று அதிகாரத்தில் மிரட்டியதும் அவன் நடுங்கி சிலுவார் பட்டனை அவிழ்த்து  ஜிப்பை கூச்சத்தோடு  இறக்கினான். சிலுவார் அகன்று கொடுத்ததும் தொளதொளத்து கீழிறங்கியது. அவன் வெளிறிய தொடைகளை அவனுக்கே பார்க்கக் கூசியது.  முன்பின் முகமறியா ஆடவர் முன்னால் சிலுவாரைக் கழட்டுவது பெண்கள் பார்க்க உடை அவிழ்ப்

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே

                        சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே                                                     சிறுகதை நான் வீட்டுக்கு வெளியே இருந்தேன். கொஞ்ச நாளாய் குளியலறை நீர் வடிந்து ஓடித் தெரு சாக்கடையில் விழாமல் எரிச்சலை உண்டு பண்ணியது. குளிலயறையிலேயே குளம் கட்டி  புரொஸ்டேட் நோயாளியின் சிறுநீர் போல மெல்ல மெல்லத்தான் வெளியானது. அது முற்றிலும் வடிந்த பின்னரும் அடித்தரையில் மெல்லிய  வழுக்குப் பாசி. சிறுநீர் வீச்சம் இலவச இணைப்பாக. தினமும் தேய்த்து கழுவேண்டியதாயிற்று. கழுவிய நீர் கறைந்தோட பலமணி நேரப்   பிடிவாதம். கணுக்கால் வரை அழுக்கேறித் தேங்கிய குளத்தில் நின்று குளிக்கும் நிலையைத் தவிர்க்கவியலாத போராட்டம். நான் அடைத்த சாக்கடையை  ஹோஸ் பைப்பால்  குத்தி தற்காலிக வடிகால் உண்டாக்கும் முயற்சிகள் பலனளிக்கவில்லை. குழாய் பொறுத்துனரை அழைத்தும் அவன் ‘தோ வரேன், நாளக்கி வரேன்’ என்று என் குளியளறை தரை போல வழுக்கிக்கொண்டிருந்தான். பள்ளி முடிந்து வீடு வந்து சேர்ந்திருந்தது மகளின் கார். சதீஸ் வாடிய முகத்தோடு இறங்கினான். அதற்கு நேர் முரணாக மகளின் முகத்தில் மாகாளி குடியேறியிருந்தாள். “ஏன் ஒரு மா

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- இறுதிப் பகுதி

  தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- இறுதிப் பகுதி .                                            இரண்டு இரவுகள் தங்கியிருந்த விடுதி சொங்க்லாக் கடற்கரையோரம் உள்ள ஒரூ தாய் எழுத்தாள்ரின் சிலை. மலேசிய கிராமப்புற சாலையோரங்களில் நீரா நீப்பா ( பனங்கள்) விற்பதைப் போல தாய்லாந்து கிராமங்களிலும் ஒருவகை இயற்கை பனை மர மதுவை விற்கிறார்கள். சாலை இரு மருங்கிலும் இப்படி நிறைய அங்காடிகள் இருந்தன. பானு ஒரு புட்டி வாங்கி வந்தார். 10 பாட்தான். அதனை உடனே திறந்து ஒர் மிடறு ஊற்றினார்.திறந்த கணத்தில் அதன் கெட்டிய வாடை குப்பென்று காரை நிறைத்தது. கள்வாடைதான். ஆனால் அது பலநாட்கள்  உறை போட்டதுபோல கனத்த நெடி. கிட்டதட்ட வாந்தியை வெளித்தள்ளும் நெடி. அவர் உடனே புட்டியை மூடிவிட்டார்.அலாவுதினின் 'ஜீனி' மீண்டும் அடைபட்டது. ஆனால் காருக்குள் அடைபட்ட வாடை ஒவ்வாமையை உண்டுபண்ணியது. சிறிது நேரம் வாடை வெளியேற காண்ணாடிகளைத் திறந்துவிட வேண்டியதாயிற்று. புலித்த சுவை என்றார் பானு. ஒரு மிடறு ஊற்றிவிட்டவர் ஒரு திணறு திணறினார். அவர் தலை புலித்த சுவையைத் தாங்க முடியாமல் குலுங்கி நின்றது.கேஸ்டிரிக் உ

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5

அன்று இரவு நிறைவான தூக்கம் கிடைத்தது. அதிகக் களைப்புதான் காரணம். தூக்கம் வராதவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன. என் பங்குக்கு நானும் சொல்லிவைக்கிறேன். சாயங்கால நேரத்தில் உடல் களைக்க பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள். உடல் வலிக்க வலிக்க. அல்லது குனிந்து நிமிர்ந்து தோட்ட வேலை செய்யுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள் பயிற்சி முடிந்து. இனிப்பு நீர் உள்ளவரகள் குறைந்த கேலரி உணவை அதிகம் சாப்பிடலாம். தினமும் சரியான நேரத்தில்உறங்கப் போவது மிக முக்கியம். உறங்கப்போகும் கால வரையறையைச் தள்ளிப்போடாதீர்கள். நாளாக நாளாக  11 மணி என்பது  பின்னரவு இரண்டு மூன்றுக்குத்தான் தூக்கம் வரும். உலகமே தூங்கிவிடும் நாம் மட்டுமே படுக்கையில் புரண்டுகொண்டிருப்போம். அதற்காக தூங்கும் உலகத்தைப் பார்த்து பொறாமை படாதீர்கள். தூக்கம் துக்கமாகிவிடும். நம்முடைய தூக்கம் கெடுவது கால அட்டவணையைக் கறாராகப்  பின்பற்றாததுதான் காரணம். இரண்டாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். கண்கள் தூக்கத்தை வேண்டி மல்லுக்கு நிற்கும் வரை நீயா நானா என்று சவாலுக்கு நில்லுங்கள். படுக்கை விளக்கு கைக்கெட்டிய தூரத்தில்தான் இருக்க வ

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்...பகுதி 4

4..தாய்லாந்தில் இரண்டு நாட்கள் தாய்லாந்தின்  இப்போதைய மன்னர். விடுதி அறை ஏழாவது மாடியில் இருந்தது. அறை கண்ணாடிக் கதவு வழியாக கடல் அலைகள்  எங்ளை அழைத்து அணைத்துக் கொள்ளத் துடித்துக் கொண்டே இருந்தது. காணக் காணக் கடல் சலிப்பதில்லையே ஏன்?  நீர் இலயல்பாகவே தண்மையானது. மனதைச் சமன் செய்யும் தன்மை மிக்கது.  கொஞ்ச நேரம் கடலைப் பார்த்தால் எல்லாத் துயரும் அலையில் அடித்துச் சென்று விடும். உலகில் அதிகம் பயணிகள் செல்லுமிடம் நீர் நிலைகளாகத்தான் இருக்க முடியும். தண்ணீர் என்று அதற்குப் பெயெரிட்டதே நம் சான்றோரின் அறிவுடமையைக் காட்டுகிறது. குளித்தாலும் குடித்தாலும் பார்த்தாலும் அது தரும் பரவசம் அலாதியானது. ஐரோப்பியன் கண்டு பிடித்த மது வஸ்த்களைக்கூட நாம் லாவகமாகத் 'தண்ணி' என்று பெயரிட்டு அதிலும் 'தண்மையை' அடைந்து சமன் செய்துகொள்கிறோம். நான்தான் முதலில் அறைக்குச் சென்றேன். களைப்பில் சற்று நேரம் கண்ணயர்ந்துவிட்டு பின்னர் வெளியே போகலாம்..  முதலில் கடலோரம் நடைப் பயிற்சி செய்யலாம் என்றே முடிவெடுத்திருந்தோம். ஆனால் சுங்கச்சாவடியில் சாவடியாகக் காத்திருந்ததும், வெயிலில் பசியோடு பயணித்

3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

3. தாய்லாந்தில் இரண்டு நாட்கள் ஹாட் யாய் நகரத்தை அடைய பசியும் பற்றிக்கொண்டது.                இது பினாங்கில் உள்ளதைவிடப் பத்து மடங்கு பெரிய சயன புத்தர் சிலை ரோபின்சன்' பேரங்காடிக்குப் போனால் அங்கே மலேசியாவில் கிடைப்பது போல சிக்கன் ரைஸ் கிடைக்குமென்றார். ஆனால் வழியை மறந்துவிட்டிருந்தார். ரேய்லவே ஸ்டேசன் ரோடு வழியாகச் சென்றால் ரோபின்சனைப் பிடித்துவிடலாம் என்றார். நகரம் நெரிசலில் திணறியது. நாளை மறுநாள் ஹரிராயா கொண்டாட்டப் பெருநாள். ஹாட்யாயும் சொங்க்லாவும், பட்டாணியும் பெரும்பாலும் இஸ்லாமியர்கள் நிரம்பிய ஊர். எனவே நகரம் திணறிக்கொண்டிருந்தது. அலைந்து அலைந்து ரேய்ல்வேய் ஸ்டேசன் சாலையைக் கண்டுபிடித்து ரோபின்சனை அடைந்தோம். மதியம் மணி 3.00. தாய்லாந்துக்கும் மலேசியாவுக்கும் ஒரு மணிநேர வித்தியாசம். ரோபின்சனின் கார் நிறுத்துமிடத்தில் இலவசமாகக் காரை நிறுத்த்லாம். மற்ற இடங்களில் கட்டணச் சிட்டை இல்லாமல் நிறுத்தினால் கிளேம்பிங்தான். இரண்டு முறை அலைந்து ஒரு கார் வெளியானது இடம் கிடைத்தது. ரோபின்சன் கீழ்த் தளத்தில் உணவு சிற்றங்காடிகள் இருந்தன. கட்டணம் கட்டி டோக்கன் வாங்கிக்கொண்டு உணவை வாங

2.தாய்லாந்தில் இரண்டு நாட்கள்

2. தாய்லாந்தில் இரண்டு நாட்கள். டானோக்கில் பானுவுக்காக காத்திருந்த வேளையில் கழிப்பிடம் தேடி அலைந்தேன். பொதுக் கழிப்பறையைக் காணவில்லை. அப்படியே இருந்தாலும் அது அழையா விருந்தாளியாய் நம்மை விரட்டும். ஒரு விடுதி இருந்தது . உள்ளே நுழைந்து பாத்ரோம்' என்றேன் . அவள் வலது பக்கம் கையை காட்டினாள். படியேறியதும் சீருடை அணிந்த பெண்கள் பலர் லோபியின் சோபாவில் அமர்ந்தும் படுத்தும் கிடந்தனர். என்னைப் பார்த்ததும் எழுந்து " கம் கம்" என்று அன்பொழுக அழைத்தார்கள். நான் அங்கிருந்து உடனே வெளியேறிவிட்டேன். இளம் வயதில் என் நண்பனை கொனோரியா நோயில் பார்த்த அச்சம் என்னை  விரட்டியபடியே இருக்கிறது) "ஏன் கழிப்பறை போகவில்லை?" பானு கேட்டார். அங்கே பெண்கள் சீருடையில் அமர்ந்து என்னை அழைத்தார்கள் என்றேன். எனக்கு ஒவ்வவில்லை திரும்பிவிட்டேன் என்றேன். தாய்லாந்தில் இதெல்லாம் சகஜம்யா? அவளுங்க அவளுங்க வேலைய செய்றாளுங்க, நீங்க உங்க வேலைய முடிச்சிட்டு வரவேண்டியதுதானே என்றார். "என்னால் அப்படி முடியாது," என்றேன். அவளுங்க ஏன் சீருடை போட்டிருக்காளுங்க? சீருடை அணிவது ஒழுங்கின் குற