Skip to main content

Posts

Showing posts from December 4, 2022

ஹோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.

6. ஜோர்ஜ்டவுன் ஆனைத்துல இலக்கிய விழாவும் கரிகாற்சோழன் விருதும்.     நான் நீண்ட படைப்பிலக்கியம் எழுதுவதில் விருப்பம் இல்லாதவன். என் விருப்பம் அதுவாக இருந்தாலும், நான் ஒன்றைக் கூர்ந்து கவனிக்கிறேன் தொடங்கிவிட்டால் படைப்பு நம்மைத் தொடர்ந்து எழுத அறைகூவல் விடுத்துக்கொண்டே இருக்கும். அதுதான் கலையின் மகத்துவம்.தொடங்கியவுடனே நம் சிந்தனை முன்னோக்கிப் பாய்ந்துகொண்டே இருக்கிறது.இவ்வளவு அனுபவங்களா என்றே நாம் பிரமிக்கிறோம். நாம் கடந்துவந்த உப்புக்குதவாத செய்லகள்கூட அழகியலால் கவித்துவத்தால் அவை வாசிக்கத் தகுந்த சுவாரஸ்யத்தை தனக்குள்ளே புதைத்துவைத்துக்கொண்டு எழுதும்போது இன்னும் சீற்றத்தோடு வெளிப்பட்டுவிடுகின்றன. இயல்பாகவே கடிவாளம் இழுக்கப்பட்டவுடன் முன்னோக்கிப் பாயும் மனித சிந்தனை, படைப்பாற்றலின் வெளிப்பாடு, அதற்கு ஈடாக இயங்கும் மொழி நீண்ட படைப்புக்கு வழி வகுத்துவிடுகிறது. எனக்கு நாவல் எழுத வராது என்று என் நண்பர் சொன்னவுடன் நான் இதைத்தான் சொன்னேன். முதல் அத்தியாயத்தை எழுதிவிடுங்கள் பின்னர் அதுவாகவே இழுத்துவைத்துக்கொண்டு முன்னோக்கி செல்ல உந்தும் என்று. கலை மனிதனுக்குக் கொடுப்பது பரவசம் மட்டுமல்ல தன்ன

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.

5.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும். சுங்கை கோப் பிரம்ம வித்யாரண்யத்திலிருந்து  காரை ஓட்டிக்கொண்டு மலையிலிருந்து கீழிறங்குவது ஓர் இனிமையான அனுபவம்.  பச்சை பூத்து மலர்ந்து நிலைத்த நிலம். வானத்தில் நீலத்தை மறைத்து தன் நிறத்தையே முன்னிலைப்படுத்துக்கொள்ளும் சுயநலம். செம்பனைக் காட்டின் நடுவே கடல் நாகம்போல வளைந்து  நெளிந்து கீழிறங்கும் தார் சாலை. முன்னர் மண்சாலை.வழி நெடுக்க சாலையைத் தொட்டு வழியனுப்பும் செம்பனை இலைத் தோரணம். செம்பனைப் பழங்கள் ரத்தச் சிவப்பில் குலையாய்  குலையாய் தாய்மை பொங்கி நிற்கும். அடி மண்ணிலிருந்து கிளம்பி மட்டைகளுக்கிடையே குடிபெயர்ந்துவிட்ட கரிய வைரக்கல் என பழுக்கக் காத்திருக்கும் செம்பனை குலைகள்.  செம்பனைக் காட்டுக்குள் நுழைந்தாலே குளிர்மை அப்பும். நான் செம்பனை எஸ்டேட்டில் வேலை செய்தவன், எனவே பார்த்தாலே பசுமை நிறைந்துவிடும். இந்தப் பசுமைப் பயணம் மேலும் சற்று நேரம் நீடிக்கக்கூடாதா என்று மனம் ஏங்கும். நான் நேராக ஜோர்ஜ்டௌன் விக்டோரியா கார்டன் விடுதியை அடைந்தேன்.  பினாங்கு அனைத்துலக இலக்கிய அமைப்பு கொடுத்த வசதியை அந்த விடுதியில் நவம்பர் 23/24/25/26/

ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.

 4.ஜோர்ஜ்டௌன் அனைத்துலக இலக்கியவிழாவும் கரிகாற்சோழன் விருதும்.      நான் கலந்துகொள்ளும் உரையாடல் நிகழ்ச்சி மாலை 5.00 மணிக்கு பினாங்கில் நடக்கவிருந்தது. இது எனக்கு முதல் அனைத்துலக மேடை என்பதால் சற்றே பதட்டமாகத்தான் இருந்தது. மேடை ஏறுபவர் பெரும்பாலானவர்க்கு பதட்ட உணர்வு தவிர்க்க முடியாதது. எத்தனையோ மேடையைக் கண்டாயிற்று ஆனால் இந்தப் பதட்ட உணர்வுமட்டும் கழட்டிக்கொள்வதில்லை. மேடை ஏறியவுடன் அது தானாகவே கழண்டு கொள்கிறது. அறிவுப்பூர்வமான நிகழ்ச்சி என்பதாலும் அறிவார்ந்து பேசவேண்டும் என்பதாலும், அதுவும் அறிவார்ந்த சூழலில் பேசவேண்டும் என்பதால்  உண்டாகும் உள்ளுணர்வு அது. அந்தப் படபடப்பு ஜெயமோகன் போன்ற இமையங்களுக்கே உண்டாகிறதென்றால் நான்  எம்மாத்திரம்? உள்ளபடியே நிஜ வாழ்க்கையில்  அனுபவிப்பதைவிட கற்பனையில்தான் நிறைய உணர்ச்சிக்கொந்தளிப்பை அனுபவிக்கிறோம்..  இந்நிகழ்ச்சியில் சிங்கையின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர் கனகலாதாவும் மலேசியாவின் நண்பர் அ. பாண்டியனும் பேசவிருக்கிறார்கள்.மலேசிய தீவிர இலக்கிய உலகின் தன்னை அழுத்தமாக நிறுவிக்கொள்ளும் வகையில் படைப்புகளைத் தந்துகொண்டிருக்கும் அர்வின் குமார் நிகழ்ச்சிய

ஜோர்ஜ் டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும், கரிகாற்சோழன் விருதும்.

 3. ஜோர்ஜ் டௌன் அனைத்துலக இலக்கிய விழாவும், கரிகாற்சோழன் விருதும்.   ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழாவில் இரவு விருந்து முடிந்து நான் விக்டோரியா இன் ஓட்டலில் தங்கிவிட்டேன். நல்ல வசதிகள் கொண்ட அறை.குறைந்தது 4 நட்சத்திர தகுதிகொண்ட விடுதி அது. விருந்தின்போது என்னிடம் இரண்டு  உரைகள் கொடுக்கப்பட்டன. திறந்துபார்த்தால் இரண்டிலும் பண நோட்டுகள். நான் கலந்துகொள்ளப்போகும் இலக்கிய உரையாடலுக்கு வழங்கப்பட்ட சன்மானம்.  தொகை சற்றே அதிகமானது. எழுத்தாளர்கள் கூடி இருந்ததால் அந்தப்புராதன வளாகம் வனப்பு கூடி இருந்ததாக இரவு உணவின் போது உணர்ந்தேன்.இப்போது அதன் அழகு‌மேலும் ஒருபடி கூடி இருப்பதாக உணரவைக்கிறது. 24.11.22 இரவு விருந்தில் ஜோர்ஜ்டௌன் இலக்கிய விழாத் தலைவர் போலினோடு  மணி 12 வாக்கில் ஜெயமோகனையும் அருண்மகிழ்நனையும் )என்ன அழகான பெயர்) ஏற்றிக்கொண்டு பிரம்ம வித்யாரண்யம் பயணமானேன்.  பாண்டியன் அருண்மொழியையும், லதாவையும், லோஷினியையும் ஏற்றிக்கொண்டார், மதிய உணவை பட்டர்வர்த்தில் சாப்பிடலாம் என்றே திட்டம் (எப்போதுமே உணவு விஷயத்தில் மட்டும் முன்திட்டம் போடுவதில் கவனமாகத்தான் இருக்கிறோம்).மதிய உணவு 12.00 க்குள் சாப்பிடுவது