Skip to main content

முத்தங்களால் நிறைந்த தேசம்..முத்தம் 23

 பனிவிழும் மலர் வனம்- ரிஹானா நீர்வீழ்ச்சி




டில்டிஸ் மலியுச்சியின் குளிர் கோடைகாலத்திலும் மைனஸ் பாகைக்குப் போகிறது. மலையுச்சியில் ஒரு சுரங்கம். மைனஸ் பாகை செல்சியஸ் எப்படியிருக்கும் என்பதைச் சுற்றுப்பயணிகளுக்கு உணர்த்த உண்டாக்கப்பட்ட சுரங்கம். இதனை மெல்லதான் நடந்து கடந்து வரமுடியும், தரையுயிலும் ஐஸ்கட்டிதான். சுற்றிலும் ஐஸ் கெட்டிதட்டிப்போய்க்கிடக்கிறது. 15 நிமிடம் ஆகிறது 150 மீட்டர் தூரத்தைக்கடக்க. உள்ளே புகுந்துவிட்டால் எப்போது வெளியே வருவோம் என்று பீதியடைந்துவிடுகிறோம்.. கடுங்குளிர். பலமுறை வழுக்கி விழுந்தவர்களைக் காணமுடிகிறது. நானும் கிடதட்ட விழுந்து விட்டேன். சமாளித்துக் கொண்டேன். பாதுகாப்பானதுதான் என்ற உணர்வு வெளியே வந்தவுடந்தான்  ஏற்படுகிறது.

மலையுச்சியிலிருந்து கீழே இறங்கி சூரிச் பட்டணத்தை அடைகிறோம். அங்கிருந்து றிஹானா நீர் வீழ்ச்சிக்குக் காரைச் செலுத்தினோம். உயரமான மலையும் காடும் உள்ள இடங்களில் நீர்வீழ்ச்சி இருப்பது சகஜம்தான். ஆனால் அது எவ்வளவு உயரத்திலிருந்து கொட்டுகிறது என்பதை மனம் கணக்குப் போட்டபடி இருந்தது. மருமகன் கூகலைப் பார்த்து  ரிஹானா இது மிகப்பிரபலமான நீர்வீழ்ச்சி என்றார்.
சூரிச்சிலிருந்து  பயணம் செய்தபோது சுவிட்சர்லேந்திலுள்ள மற்ற இடங்களைப்போல மலைத்தொடர்களோ, அழகிய காட்சியையோ காணமுடியவில்லை. நல்ல வெயில் படும் இடம் போலத்தெரிந்தது.  முப்பது நிமிடத்தில் இலக்கை அடைகிறோம். ஏராளமான பயணிகளைக் காணமுடிகிறது. அங்குள்ள சிற்றுண்டிக்கடையில் காலை உணவை முடித்துக்கொண்டு டிக்கட் வாங்க்கிக்கொண்டு உள்ளே போகிறோம்.


நீர்வீழ்ச்சியைக் காண பல பாதுக்காப்பான இடங்களை அமைத்திருந்தார்கள். நீர் புரண்டும் மலைகள் உருள்வதைப்போலக் கொட்டுக்கிறது. சுமார் 50 மீட்டர் தூரத்தில் நின்றாலும் நீர் பாலாபிஷேகம் செய்வதுபோலவே இருக்கிறது.  நீர்த் துமிகள் நம் மீது சொரிந்து குளிர்ச்சியஐ உணரமுடிகிறது. வெகு நேரம் நின்றிருந்தால் நனைந்துவிடக்கூடிய வாய்ப்பும் உண்டு. கொட்டும் நீரைத் தொட்டுணர ஒரு பிரத்தியேக இடம் இருந்தது.  அந்த இடத்தில் நின்று கொஞ்சம் எக்கினால் கொட்டும் நீரின் சுகத்தை அனுபவிக்க முடியும். சற்று நேரத்தில் நாம் நனைந்துவிடுவோம். ஆனால் மிக அண்மையில் நின்று நீர்வீழ்ச்சியைக் தோடுணர்ந்த அலாதி  மனநிலை உருவானதை மறக்கமுடியவில்லை.
ஆனால் யாரும் குளிக்க அனுமதி இல்லை நீர் புரண்டு புரண்டு சுழிக்கும் தன்மைகொண்டது. அதன் சீற்றத்தைக்கண்டாலே அச்சம் உண்டாகிறது.


ஆனால் உயரத்திலிருந்து நீர் கொட்டும் இடத்துக்கு படகுகள் பயணிகளை அழைத்துச்செல்கிறது  படகிலிருந்து இறங்கி ஒரு சிறிய குன்றில் மீது ஏறி நின்று நீர்வீழ்ச்சியின் அழகை தரிசிப்பதை நாங்கள் நின்றுகொண்டிருந்த கரையிலிருந்து காணமுடிந்தது. அந்தக் குன்றை அடைய அடைய படகின் மீது சொரியும் நீர்த்துமிகளைக் கரையிலிருந்தே காணமுடிகிறது. நீர்வீழ்ச்சியின் நனைவில் திளைக்கவேண்டுமென்றே பயணிகள் அங்கே போகிறார்கள். மலை உச்சிலிருந்து நீர் சுழித்து பொங்கிப் பிரவகித்து கொட்டுவதைப் பார்க்க இரு விழிகள் போதாது. நீர் என்றாலே தண்மை கொண்டதுதானே. உடலைமட்டும் நனைக்கவில்லை உள்ளத்தையும் நனைத்து சற்றே நம் சிந்தனையை அதன் பால் ஈர்த்துக்கொள்கிறது.


மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. அங்கிருந்து இறங்கி காரை எடுத்துக்கொண்டு ஜெனிவாவுக்கும் கிளம்பினோம். ஜெனிவா என்றது ம் உங்களுக்கு என்ன நினைவு வருகிறது.  ஐக்கிய நாட்டுச் சஐ கூடுமிடம்தானே.
அந்தக் கட்டடத்தைக் கண நேருமா என்று சிந்தித்துக்கொண்டே இருந்தேன்.நாங்கள் வாங்கிய வாடகைக்  காரைஅங்கேதான் ஒப்படைக்க வேண்டும். அதன்ன் பின்னர் பாரிசுக்குப் பயனமானோம். சுவிசில் எடுத்த காரை வேறு நாட்டுக்குக் கொண்டு செல்லத் தடை. அதனால் ஜெனிவாவில் ஒப்படைக்க நேருகிறது.

ஜெனிவாவை நோக்கிப் போகும் சாலை நிறுத்தம் ஒன்றில் இரு குதிரைகள் ஒரு இழுவண்டியில் இழுத்துச்செல்லும் ஒரு பெண்மணியைப் பார்த்தோம். அக்குதிரை பந்தயக் குதிரை. பந்தயம் நடக்கும் வளாகத்துக்குக் கொண்டு செல்கிறாள் அதனை. ஆனால் உள்ளே இரு குதிரைகள் இருந்தன. இன்னொன்று எதற்கு என்றேன். அவள் பந்தயக்குதிரைக்குத் துணையாகப் பயணம் செய்ய என்றால். தூரம் பயண்ம செய்யும் போது துணை இல்லையென்றால் அது தொல்லைகொடுக்குமாம்.அல்லது சோர்ந்துவிடுமாம். எவ்வளவு கரிசனம்- பிராணிகள் மீது.




துமிகளைத் தொட்டணரும் இடம்












தொடரும்.......

Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...