Skip to main content

Posts

Showing posts from January 13, 2013

13. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்

மீண்டும் மலேசியா திரும்பு நாள் அன்று (26.12.2012.) எங்கள் பயண நேரம் காலை மணி 11.00 என்றுதான் ஏர் ஏசியா தொடக்கத்தில் கொடுத்திருந்தது. ஆனால் பயணம் செய்ய இரண்டு வாரத்துக்கு முன்னர் அதனை பின்னிரவு மணி 1.00 தள்ளி வைத்துவிட்டது. ஏர் ஏசியா அடிக்கடி செய்யும் கோளாறு இது. இதற்கு கேள்வி முறையெல்லாம் கிடையாது. பயணச்சீட்டு சட்டதிட்டத்தில் அப்படித்தான் உள்ளது! விடுதி அறைகள் முன்னமேயே பதிவு செய்து விட்டாதால்.. மேலும் ஒரு நாளைக்கு நீட்டித்தாக வேண்டும். ஒவ்வொரு அறையும் மலேசிய ரிங்கிட் 850.00. ஏர் ஏசிய செய்த தள்ளிவைப்பு எங்கள் பணத்துக்கு வைத்த கொல்லி வைப்பு! என்ன செய்யலாம் என்று யோசித்த பிறகு அன்றைக்கு மேலும் ஒரு இடத்தைப் பார்க்கலாம் என்று முடிவெடுத்தோம். ஆனால் வெகு தூரம் உள்ள இடத்தையே பரிந்துரை செய்தார் மைக்கல். அதற்கான கட்டணமும் அதிகம்.குளிர்ப்பபனி மெலும் கனத்திருந்தது. சாலையோ வழுக்கும். தாமதமானால் விமானத்தைப் பிடிக்கமுடியாது. என்ன செய்யலாம்? என்னையும் என் மனைவி மகள், ஒரு மருமகளை விடுதியில் ஓர் அறையில் விட்டு விட்டு மற்ற அனைவரும் பனிச்சருக்கு விளையாட்டுக்கு போவதாய் இறுத

12. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்.

                                   சொர்க்கத்தின் கோயில் முன்                                      சொர்க்கத்தின் கோயில்                                                     ஒலிம்பிக் கிராமம்                                    சொர்க்கத்தின் கோயில் அருங்காட்சியகம்                                       ஒலிம்பிக் கிராமப் பின்னணியில்                                           ஒலிம்பிக் 7 நட்சத்திர விடுதி சீனாவில் நாங்கள் பயணம் செய்த இடத்திலெல்லாம் சீனர்கள், அல்லது சீனர்களைப்போலுள்ள பிற இனத்தவர் எங்களை அணுகிப் படம் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று கேட்பார்கள். நான் அழகாய் இருக்கிறேன் அதனால்தான் என்னைப் படமெடுக்கிறார்கள் என்று சொல்வாள் என் மகள். அது காரணமாக இருக்காது! குறிப்பாக எங்கள் பேரப்பிள்ளைகளைத் தூக்கிவைத்துக் கொஞ்சுவதும் மாறி மாறி கிளிக்செய்வதுமாய் இருப்பார்கள். எனக்கு ஒரு காரணம் புலப்பட்டது. சீனாவின் சட்டவிதிப்படி ஒரே ஒரு குழந்தைதான் பெற்றுக்கொள்ள முடியும்.அதனால் குழந்தைகள் மேல் அவர்களுக்கு இருக்கும் ஏக்கத்தைத்தான் நான் பார்த்தேன். ஆனால் என்

11.சீனப்பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்

                                                  தியானமென் வளாகம்           3 மணிநேரம் ஒரே இடத்தில்  அசையாமல் நிற்கும் குங்பு போலிஸ் மறுநாள் காலையில் சீனச் சரித்திரத்தில் ஒரு கரும் புள்ளி விழுந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இடத்தைக்காணப் புறப்பட்டோம். உள்ளபடியே இந்த இடத்தைப் பார்க்கவேண்டும் என்பதே என் நெடு நாளைய ஆசை.சீன வரலாற்றை புரட்டிப்போட்டு உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்கவைத்த ரத்தக்களரி நடந்த இடம் அது.  பயணம் போகும் போது மைக்கலைk கேட்டேன். அதுபற்றிப் பேசுவதே ஒரு தேசக் குற்றம். வேண்டாம் அங்கே போய் அதெல்லாம் பேசவேண்டாம் என்று எச்சரித்தார். உலகமே அன்றைய சீன அரசை வன்மையாகக் கண்டித்த சம்பவம் அது. அனைவருக்கும் தெரிந்த மயிர்கூச்சரியும் சம்பவமாயிற்றே. பேசாக் கூடாது என்றால் என்ன அர்த்தம்? இதைத்தான் ஊரறிந்த ரகசியம் என்கிறார்களோ? பேசக்கூடாது என்பதை நான் வேறு மாதிரி பொருள்கொண்டு பார்க்கிறேன். அந்த மனித வன்மத்தல் நிகழ்த்தப்பட்ட பேரிடர். நாட்டுக்குஅவச் சொல்லைக் கொண்டு வந்ததால் அது நினைவுறுத்தப் படுவது நாட்டின் கௌரவத்துக்கு இழுக்கைத் தேடித் தருவதற்குச் சமம

10. சீனப் பெருஞ்சுவருக்கு ஒரு பயணம்

                                       வேனில் இருந்து பார்க்கும் போதே அதன் பிரம்மாண்டம் மலைக்க வைத்தது. மலை உச்சி முனைகளில் பெரும் பாலமாக தொடர்ச்சியாக  முடிவற்று நகர்கிறது பெ ரு ஞ் சு வர். .            வேனிலிருந்து இறங்கி, ஒரு மேடான நிலப்பகுதியில் ஏறி உச்சிக்குச் சென்று கேபல் காருக்காக டிக்கெட் எடுத்துக் கொண்டோம். பெருஞ்சுவரை அடையும் முன்னர் இரு மருங்கிலும் நிறைய நினைவுபொருட்களை விற்கும் கடைகள். அங்கே பலர் ஆங்கிலம் நன்றாகப் பேசுகிறார்கள். சுற்றுலாப் பயணிகள் செல்லும் இடங்களிலெல்லாம் ஆங்கிலம் பேசும் சீனர்களைப் பார்க்க முடிகிறது. உணவு விடுதியில் நமக்கு என்ன வேண்டுமென்பதை சைகை மொழியில்தான் சொல்லவேண்டும். அல்லது மெனுவைக் காட்டிதான் ஆர்டர் கொடுக்கவேண்டும். ஏனெனில் பறப்பன, நடப்பன, ஊர்வன  எல்லாவற்றையும் விதம் விதமாக சமைத்து உண்ணும் இனம் சீன இனம். நன்றியுள்ள வாலாட்டும் பிராணியும், சிவன் கழுத்தில் சுற்றி படமெடுக்கும் ஊர்வனவும், நடிகர் ராமராஜனின் உற்ற நாலு கால் நண்பனும், எல்லா உணவகங்களிலும் கிடைக்கும்மாதலால் சீனாவில் உணவு சுவையானது என்கிறார்களோ என்னவோ! ஒவ்வொரு முறையும்," நல்லா சொல்லு

9. சீனப் பெருஞ்சுரை நோக்கி ஒரு பயணம்

மறுநாள் சீனப் பெருஞ்சுவரை நேரில் காணும் ஆவலில் இருந்தோம்.குறிப்பாக என் மனைவி அதனைப் பார்த்தே ஆகவேண்டும் என்றே சீனாவுக்கு வந்தார். ஒரு உலக அதிசயத்தை இரு முறை பார்த்தாகிவிட்டது- ஆக்ராவில் உள்ள மும்தாஜுக்காக ஷாஜாஹான் கட்டிய காதல் மாளிகை. இரண்டாவதாக இந்தச் சீனப் பெருஞ்சுவர். "சாவறதுக்குமுன்ன இன்னும் அஞ்சையும் பாத்திரனும்" என்று சொல்லிக் கொண்டே இருப்பார். (அப்போ இன்னும் மொய் அதிகம் இருக்குன்னு சொல்லு)                                                       பாதையை ஒட்டிய உறைந்த கால்வாய்                                        பெருஞ்சுவருக்கு இடையிடையே குகை மாதிரியான அறை " வா...... காச வச்சி இ ன்னா பண்ணுறது?" அன்று சேவல் கூவும் நேரம் வரைக் காத்திருக்க வேண்டாம். மாலை நான்கு மணிக்கு மேல் அங்கே இருக்க முடியாது. குளிர் மட்டுமல்ல சாலை யும் வழுக்கலானது.  இரவெல்லாம் பனி கொட்டி ப க லில் வெயிலுக்கு உருகி வாகன ங் களை வழுக்கித்தள்ள காத்திருக்கும் நெடுஞ்சாலை. என்வே காலையில் சீக்கிரம் கிளம்பிவிடவேண்டும் என்று எச்சரித்தார் மைக்கல். நாங்கள் சென்ற பாதை இட