Skip to main content

தாய்லாந்தில் இரண்டு நாட்கள்- பகுதி 5





அன்று இரவு நிறைவான தூக்கம் கிடைத்தது. அதிகக் களைப்புதான் காரணம். தூக்கம் வராதவர்களுக்குப் பல்வேறு ஆலோசனைகள் சொல்லப்படுகின்றன. என் பங்குக்கு நானும் சொல்லிவைக்கிறேன். சாயங்கால நேரத்தில் உடல் களைக்க பயிற்சிகள் மேற்கொள்ளுங்கள். உடல் வலிக்க வலிக்க. அல்லது குனிந்து நிமிர்ந்து தோட்ட வேலை செய்யுங்கள். நன்றாகச் சாப்பிடுங்கள் பயிற்சி முடிந்து. இனிப்பு நீர் உள்ளவரகள் குறைந்த கேலரி உணவை அதிகம் சாப்பிடலாம். தினமும் சரியான நேரத்தில்உறங்கப் போவது மிக முக்கியம். உறங்கப்போகும் கால வரையறையைச் தள்ளிப்போடாதீர்கள். நாளாக நாளாக  11 மணி என்பது  பின்னரவு இரண்டு மூன்றுக்குத்தான் தூக்கம் வரும். உலகமே தூங்கிவிடும் நாம் மட்டுமே படுக்கையில் புரண்டுகொண்டிருப்போம். அதற்காக தூங்கும் உலகத்தைப் பார்த்து பொறாமை படாதீர்கள். தூக்கம் துக்கமாகிவிடும். நம்முடைய தூக்கம் கெடுவது கால அட்டவணையைக் கறாராகப்  பின்பற்றாததுதான் காரணம். இரண்டாவது, புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். கண்கள் தூக்கத்தை வேண்டி மல்லுக்கு நிற்கும் வரை நீயா நானா என்று சவாலுக்கு நில்லுங்கள். படுக்கை விளக்கு கைக்கெட்டிய தூரத்தில்தான் இருக்க வேண்டும். மூன்றாவது மெல்லிய இசையைக் கேளுங்கள். இந்த ஆலோசனைகள் 60 வயதைக் கடந்தவர்களுக்கு. அந்த வயதை கண்டிப்பாக எட்டிப்பிடிக்கப் போகிறவர்களுக்கும்.

மறுநாள் காலை என்னவெல்லாம் போய்ப் பார்க்கலாம் என்று லோபி பணிப்பெண்ணிடம் கேட்டுக்கொண்டிருந்தார். அவர் முக்கியமாச் சொன்ன இடம் தலாய் நோயிலுள்ள  வலசைப் பறவை சங்கமிக்கும் இடம். தலாய் நோய் கிட்டதட்ட 120 கிலோமீட்டர் தூரம். நெடுக்க  ஏரி. நீண்ட பாலங்கள். எங்களிடம் மோபைல் டாத்தா இல்லாததால் வேஸ் போட்டு இடத்தைத் தேட முடியவில்லை புற நகர்ப்பகுதியைத் தாண்டி கிராமப்புறத்துக்கு சாலை வழிகாட்டிப் பலகைகள் காட்டிக்கொண்டிருந்தன. முக்கால் வாசிப் பலகைகள் தாய் மொழியில் எழுதப் பட்டிருந்தன. சாலை பிரியும் முக்கிய  இடங்களில் மட்டுமே ஆங்கிலம்.

ஒரு சாலையில் தவறாக நுழைந்து, திரும்பி வந்து மீண்டும் தலாய் நோய் பதையைப் பிடித்தோம். ஒரு ஏரிப்பகுதியைப் படம் எடுக்க நிறுத்தினோம். சொங்க்லாக் முழுதும் ஒரே ஏரிதான். கடல்போல  சொங்க்லாக் நகரை சுற்றி அகன்று கிடக்கிறது. எத்தனை ஆயிரம் கில்லோமிட்டர் என்று தெரியவில்லை. மிக அகலம். பினாங்கு பாலத்தைப்போல இரண்டு பாலங்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. டோல் கிடையாது மக்களே. கோடிக்கணக்கான  டோல் வசூலிப்பு அடுத்த தேர்தலில்கோல்மால் செய்ய உதவும் என்ற 'தூர நோக்கு'  ஆளுங்கட்சிக்குக் கிடையாது.


ஒரு ஏரிக்கரையில் புத்தர் கோயில் இருந்தது. ரசிக்கும்  படியான காட்சி. இறங்கி படம் எடுக்கும் அளவுக்கே அதன் ரசனை இருந்தது. பெரிதாக ஒன்றும் இல்லை. பினாங்கு சயன் புத்தர் சிலைபோல பத்து மடங்கு பெரியது. கோயில் வளாகத்தின் திறந்த வெளியில் சயனித்துக் கிடந்தார். தாய் லாந்தில் பௌத்த சமய நெறிகள் முறையாகப் பின்பற்றப் படுகிறது. அங்குள்ள மக்களோடு பழகிப் பார்த்தாலே அந்த மென்மையும் தன்மையும் புலனாகிறது. தன் நாற்காலியில் வஜ்ரம் தடவி உட்கார்ந்துகொள்ள சமயத்தை ஒரு போராயுதமாகப் பயன் படுத்தும் கீழ்மை மனிதர்களை அங்கே பார்க்க முடியாது. மக்களை அச்சுறுத்தும் வகையில் சமயத்தை காலிகள் வைத்து மிரட்டுவதுமில்லை.

அங்கே ஒரு ஐஸ்கிரம் சாப்பிட்டோம். 25 பாட்தான். இங்கே அதன் விலை 5 ரிங்கிட் குறையாமல் இருக்கலாம்.

மீண்டும் காரை எடுத்து தலாய் நோய்க்குப் பயணமானோம். சிலரிடம் விசாரிக்க வேண்டியிருந்தது. ஆங்கிலம் அறுத்துப் போட்டாலும் வராது, பட்டணப் புறங்களிலும். பானு சொன்னார் இங்கே ஆங்கிலம் சொல்லிக் கொடுத்தால் ரத்த வாந்தி எடுக்க நேரிடும் என்று. நான் மலேசிய இடைநிலைப் பள்ளியில் கிட்டதட்ட எடுத்திருக்கிறேன். குறிப்பாக கிராமப் பகுதிகளில்.

தலாய் நோய்க்கு எப்படியோ வந்தடைந்தோம். அங்கே தாய் மன்னர் பிறந்தநாள் நினைவாக ஒரு புதிய சாலை அமைத்திருந்தார்கள். வயல் வெளியையும் ஏரியையும் கடந்து செல்லும் ஒரு அழகிய சாலை. வலசைப் பறவைகள் சாலையின் இருபுறத்திலும் பார்க்க முடிந்தது. இன்னும் 30 கிலோ மீட்டர் போனால் அங்கே பறவைகளைப் பார்க்கலாம் என்று சொன்னார்கள். கொஞ்ச தூரம் சென்று திரும்பிவிட்டோம். 30 தா? 300ஆ? என்ற குழப்பம்.



பசி வயிற்றில் தாளமிடத் துவங்கியது. நாங்கள் வரும் வழியில் ஒரு சிறு பட்டணத்தைக் கடந்து வந்தோம் அங்கே பசி போக்கலாம் என்று திட்டம். திரும்பி விட்டோம்.

மீண்டும் பாதையைத் தவற விட்டோம். தலாய்  நோயாயைத் தேடித் த்ஏடி தலை நோய்தான் எடுத்தது.




ஒரு கடையில் இறங்கிக் கேட்டோம். ஒரு அழகிய பெண் தெளிவான ஆங்கிலத்தில் பேசினாள் திருஷ்டிப் பரிகாரமாய். எப்படி உனக்கு மட்டும் ஆங்கிலம் என்று கேட்டேன். நான் . புக்கெட்டில் வேலை செய்தேன் என்று சொன்னாள். அப்போ சரி.

தலாய் நோயில் ஓரிரவு தங்கி வலசைப் பறவைகளைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் பார்த்த நிறைவு கிடைக்கும் என்றாள். அதற்கு முன்னமேயே விடுதியைப் புக் செய்திருக்க வேண்டுமாம்.



மீண்டும் விடுதி நோக்கிப் பயணம்.


நாளை முடியும்.....(தெரியல முடியுமாமுடியாதான்னு)






Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின