புதிய மனிதர்களைச் சந்திக்க நேர்வது அவர்களின் அறிமுகத்தைத் தாண்டி அவர்கள் ஏதோ ஒன்றை நம்மிடம் விட்டுச்செல்லத்தான் என்று தோணுகிறது. அல்லது ஏதோ ஒன்றை நினைவுபடுத்ததான் என்றும் நினைக்க வைக்கிறது. அந்தச் சந்திப்புகள் எதேச்சையாக வரலாற்றுச் சுவடுகளை ஏந்திவந்து நம்மை மலைப்பில் ஆழ்த்தவும் கூடும் சில தருணங்களில். யார்தான் எதிர்பார்ப்பார், கிட்டதட்ட எழுபது ஆண்டுகளுக்கும் முன்னர் நடந்தவை இந்த நாளில் சாட்சியங்களோடு வந்து முன்னிற்கும் என்று.சுவடுகளே இல்லாமல் மறைந்து போயிருக்கும் என்றுதானே நான் நினைத்திருந்தேன். ஆனால் ஊடகங்களின் பதிவு இல்லாமலேயே சில வரலாறுகள் மீண்டெழும் அபூர்வ தருணங்கள் நிகழும்.. இன்று (1.1 2025) சுங்கை கோப் வித்யாரண்யத்தில் பாரதி விழாவுக்குக் கூட்டம் நிறைந்திருந்தது. சிலர் பேசிக்கொண்டிருந்தபோது நான் அவர்களுடன் போய்க் கலந்துகொண்டேன். கலந்துகொள்ளவேண்டும் என்ற பிராப்தம் இருந்திருக்கிறது. அவர்களில் ஒருவர் உணர்ச்சி மேலிட பேசிக்கொண...
ஒவ்வொருமுறையும் நூல்கள் திறக்கப்படும்போது- நன்றிக் கடனாக அவை உங்களை அகலத் திறந்துவிடுகினறன. (ko.punniavan@gmail.com)