Skip to main content

ஆணாதிக்கம் பெண்ணடிமை என்ற மாயை

                                 ஜெயமோகனோடு சுவாமி பிரம்மானந்தா அவர்கள்
(அச்சில் இருக்கும் என் சிறுகதைத் தொகுப்புக்கு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி வழங்கிய முன்னுரை இது.)


உலகில் இருவர் சேர்ந்திருப்பது மிகச்சிரமமான காரியம். ஏனெனில் அடிப்பபடையில் மனிதன் தனித்தன்மை வாய்ந்தவன். உலகிலேயே சுதந்திர இச்சையுடன் பரிணாம வளர்ச்சி பெற்றவன் மனிதன் மட்டுமே. அவன் மற்றவர்களோடு பொருந்தி வாழ முடியாததற்கு காரணமே அவன் பகுத்தறிவு உள்ளவன் என்பதாலேயே. என்னதான் இயற்கையான உடற் தேவை காரணமாக அவன் கூடி வாழ விரும்பினாலும் ஏதோ ஒன்று அவனுக்குள்ளே இருந்து அவனை அந்நியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. தன் உணர்ச்சியின் உச்ச நிலையைப் பகிர்ந்துகொள்ள உறவுகள் தேவைப்பட்டாலும் அந்த உறவுகளால் ஏற்படும் உரசல்களால் மீண்டும் மீண்டும் அந்நியபட்டே போகிறான். கொந்தளிப்புக்களையும் மனவலியையும் பகிர்ந்துகொள்ள சக மனிதர்கள் தேவைபட்டாலும் அவர்கள் மேல் உள்ள ஆழ்ந்த அவநம்பிக்கை மீண்டும் மீண்டும் அவனை தூரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடுகிறது. இதற்கு முக்கியக் காரணம் அவன் தன்னிலை தவிர்த்து வேறெதிலும் பாதுகாப்பை உணராத நிதர்சனம்தான். அதனால்தான் மனிதர்களுக்குக் கண்ணுக்குத்தெரியும்  மனித நம்பிக்கையைவிட  கண்ணுக்குத்தெரியாத தெயவ நம்பிக்கைகளில் அதிகப் பற்று ஏற்படுகிறது. எவ்வளவுதான் உறவுகளின்மேல் உள்ள நம்பிக்கை மனித வாழ்வுக்கு வலிமை சேர்த்தாலும் அந்தரங்கத்தில் அவன் தன்னைத் தனியனாகவே உண்ர்கிறான்.
இதனால் ஏற்படும் அழுத்தத்தால் அவன் உறவுகளைப் புறக்கணிக்கிறான்.
இந்த உறவுச்சிக்கல்களில் ஏற்படும் அவல நிலையையும் துரோகங்களையும் என்னிடம் கிடைத்த  இருபாலர் உறவு குறித்த கதைகளில் திரு கோ.புண்ணியவான் அவர்கள் நுணுக்கமாக ஆராய்கிறார். குறிப்பாக ஆண் பெண்  உறவுகளில் ஏற்படும் சிடுக்குகளை சிக்கெடுக்கும் முயற்சிகளில் அவர் கதைகள் முயற்சி செய்கின்றன.
         பொதுவாகவே இருபாலர் உறவுகளும் சுயநலமிக்கதாகவே காட்டப் படுகின்றன. தன்னுடைய தேகப்பசி  தீர்ந்த பின்னர் தூக்கி எறியப்படும் உறவுகள் இளமைக்கால மிகை உணர்ச்சியால் உந்தப்பட்டுப் பின்னர்  கைவிடப்படும் காதல்கள் பொதுவாகவே ஆண் வர்க்கத்தால் பெண்களுக்கு இழைக்கப்படும் துரோகங்கள்தான் கதைக்களனாகின்றன.
         நீரிலிருந்தும் நழுவும் மீன்கள் கதையில் அம்மா என்ற மரபு சார்ந்த புனித பிம்பம் உடைத்தெரியப் படுவது நவீன கால அம்மாக்களை  அப்பட்டமாகம் படம் பிடித்து காட்டுகிறது. இதனை ஒரு சமூகப் பிரச்சினையாக முன்வைக்கும் ஆசிரியர் சமூகத்துக்கு சுயநல்மில்லா பொறுப்புமிக்க கடமையை உணர்த்த முயற்சி செய்கிறார்.
         பொதுவாகவே பெண்கள் பலவீனமானவர்கள் என்று கட்டமைக்கப்படும் நம் சமூகத்தில் ஒரு பெண் எவ்வித ஆண் துணையில்லாமல் தன்னிச்சையோடும் சுய மரியாதையோடும் வாழ முடியுமென்று எதிர்வினை ஆற்றுகிறார் கதை நாயகி. அடிப்படையில் ஆண் பெண் என்ற பேதம் பெரிதாக ஒன்றும் கிடையாது. இரு பாலருக்கும் பொது அம்சமாக இருப்பது நான் என்ற அகங்காரம்தான். ஆண்வர்க்க மேலாதிக்கத்தினால் பொறுமை, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்ற சமூகப் பயிற்சிகளால் பெண்களுக்குச் சற்று அடங்கி இருந்தாலும்  ஆழ்மனதில் வன்மமே குடிகொண்டுள்ளது. ஒரு ஆண்மகனுக்கு ஆணவம் என்பது தன் அடிப்படை குணம் என்று நினைக்கும் தோறும் பெண்களுக்கு அது அடக்கி ஆளும் ஆளுமையாக ஆழ்மனதில் கொழுந்து விட்டு எரிந்துகொண்டே இருக்கிறது. தக்க தருணமும் அதற்கான சந்தர்ப்பமும் பிறக்கும்போது அது வன்முறையாகவே வெடித்து உறவுகளை உடைத்தெறிகிறது.
        அடிப்படையில் இரண்டு ஆணவங்களின் மோதல்தான் உறவுகளைப் பிய்த்து எறிகிறது  என்று தெரியாமல் ஒரு வர்க்கம் இன்னொரு வர்க்கத்தின்மேல் அடிமைப்படுத்துகிறது என்று வர்க்க சாயம் பூசுகிறது. இந்தக் குற்றஞ்சாட்டும் குணம் ஆணவத்திலிருந்து பிறந்து வந்ததுதான்.
        இவரின் பெண்ணியம் சார்ந்த சிறுகதைகள் மூலமாக இக்கருத்தையே வாசக மனங்களுக்கு அறிவுறுத்துகிறார் என்று தோன்றுகிறது. என் வசம் கிடைத்த சில கதைகளைப்பற்றி கருத்து மட்டுமே இது.

சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி
கூலிம் தியான ஆசிரமம்

   
 


Comments

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...