Skip to main content

பேயச்சம்



கழுத்தைக்கடித்து
குருதியுறுஞ்சும் பேயாகவே
மாரியம்மன் கோயிலேறும்
சடக்கில் தலைகோதி நின்ற
புளிய மரம் அச்சுறுத்திய
காலம் ஒன்றுண்டு

அம்மாதான் சொல்வாள்
ரத்தக் காட்டேறி மரமென்று
 பழம் பறிக்க பள்ளி முடிந்து
கழியெறியும் போதெல்லாம்


அதன் குச்சியொடித்து
விலாசும்போதே
தோலுறித்த ரத்தத் தடையங்கள்
உறுதிப் படுத்தியது
உண்மைதானென்று

வெயில் விரட்டும்
அதன் குளிர் நிழலில்
வியர்வை நனைய
விளையாடும் போதில்
பேய் நினைவு மெல்ல
ஒதுங்கத் தொடங்கியது


நோய் நொடி விரட்டும்
அதன் இலை மருத்தவம்
பார்த்துப் பழகி
நன்பகல் நிழலாய்
கறையத்தொடங்கியது
கொஞ்சம்

மாநுட நலம் காக்கும்
கரிசனை நோக்கம்
மரத்தை நேசிக்க நேர்ந்தது

கருவாட்டுக் குழம்புக்கும்
ஆத்துமீன் கறிக்கும்
புளிப்பு
 சுவை கூட்டியபோதும்
பயம் பறந்தோடி
பாசம் மருவியது

காய்ந்து சுல்லிகள்
நின்றெரியும் தீயில்
தோளில் ஒட்டா புளியம் பழமாய்
அச்சம் ஒட்டாது ஓடியது

கிளையேறி ஒளிந்து
விளையாடும் விறுவிறுப்பில்
கிலி அருதியாய்
 அழிந்தொழிந்தது

கல்லெறிந்து கல்லெறிந்தே
காட்டேரியை
விரட்டி அடித்தோமோ என்னவோ


கித்தா மரங்கள் இலையுதிரில்
எலும்பாய்த் துருத்தி நின்றாலும்
தீராக் கானலை, புயல் மழையை
போராடி ஜெயித்து
நெடுங்காலமாய்
நின்று நிலைக்கும்
புளிய மரம்
சோர்வுறும் மக்களுக்குச்
சூட்டிக் காட்டியது
சுய இருப்பை


பேய் பயம் முற்றாய்
தீர்ந்த
ஒரு விடிகாலைப் பொழுதில்
வாழ்வுக்குப் பயந்த
நைலான் கயிற்றில் தொங்கிய
பேடியொருவனால்
உயிர்க்கத் தொடங்கியது
மீண்டும் பயம்













Comments

அருமையான இயல்பான அந்த நடை ஆஹா.... நடையழகா, நீவீர் வாழ்க.
MUNIANDY RAJ said…
arumaiyana kavithai....siruvayathu puliya marathu vasalukku kondu poi niruthiyatthu..
MUNIANDY RAJ said…
arumaiyana kavithai....appadiye siruvayathu puliya marathu vaasalil kondi poi niruthiyathu

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...

வைரமுத்துவின் காலத்தால் அரிக்கப்படாத பாடல்கள்

கவிஞர் வைரமுத்து இந்த ஜூலை 13ல் மணிவிழா  கொண்டாடினார். மணி விழா எடுக்க எல்லாத் தகுதியும் கொண்டவர் கவிஞர். புதுக்கவிதை தமிழ்ப் படைப்புலகுக்கு அறிமுகமான  காலத்தில்   மரபிலிருந்து  புதுக்கவிதைக்குப் பெரும்  பாய்ச்சலை  நிகழ்த்தியவர்களில் மிக முக்கியமானவர்.  மரபுக்கவிதை காலமாற்றத்தால் கனிந்து உதிர்ந்து விழுந்து கொண்டிருக்கும் வேளையில் கவிதை இலக்கியம் தன்னை புதிய தோற்றத்துக்குத் தோலிருத்துக் கொண்டு புதிய சட்டையை மேலணிந்து கொள்ளத்துவங்கியது. இலக்கணச் சங்கிலியால் படைப்புச் சுதந்திரத்தை கட்டிப்போட்டிருந்த படைப்புத் தமிழ் மெல்லத் தளர்ந்து பின்னர் கட்டவிழ்த்து இலக்கணப் பிடியற்ற புதிய விடுதலைக்குத் தயாரானது. புதிய பரிமாணத்தில் புதிய கவிதை யுகத்தைப் படைக்க தொடங்கியிருந்தது. இது காலம் கொண்டுவந்த மாற்றம். மனிதர்களின் முன்தீர்மானம், திட்டமிட்ட செயல் என்றெல்லாம் சொல்வது காலம் வகுத்த விதிக்கு முரணாக சொல்லப்படும் கருத்தாக்கம். புதுக்கவிதை  மரபை பதியம்போட்டு வளர்த்த அப்போதிருந்த வானம்பாடிக் கவிஞர்களே புதுக்கவிதை இலக்கியத்தை ஒரு இயக்கமாக முன்னெடுத்தார்கள். கவிதை ...