Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

7. ஜாலியன்வாலா பாக்



பஞ்சாப் மாநிலத்தின் வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது.

பொற்கோயிலிலும் அதன் வளாகத்திலும் ரத்தக் கறை படிந்துள்ளது மட்டுமல்ல. அதே நகரில், அம்ரிஸ்டாரில் இன்னொரு இடமும் குருதியால் வரையப்பட்ட ஓவியாமாய்க் காட்சி தருகிறது.

அதுதாதான் ஜாலியன் வாலா கொலை. ஜாலியன் வாலா என்பது மக்கள் கூடும் ஒரு பூங்காவாக, காட்சி தருகிறது இப்போது. கொலைக் களத்தின் நினைவகம் இது. இந்திய சுதந்தர போராட்டக் காலத்தில் அது மக்கள் கூடும் இடமாக, அல்லது  காற்று வாங்கும் வெளியாக இருந்திருக்கிறது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டக் குரல் பஞ்சாப்பிலும் உரக்க ஒலித்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த ரத்தக் களறி நினைவை நடுங்க வைக்கும் வரலாற்று  இடமாக   திகழ்கிறது இந்த ஜாலியன் வாலா.
 

                                                    தோட்டாக்கள் சிதறிய அடையாலம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஐயாரிம் பேர் இந்த ஜாலியன் வாலவில் கூடி அமைதி பேரணி நடத்த முற்பட்டிருக்கிறார்கள். இங்கே கூடி பின்னர் நகர் வெளியில் நடந்து போவதாய் ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள். இவர்கள் நிராயுத பாணியாய்த்தான் இருந்திருக்கிறார்கள். கலவரமோ கலட்டாவோ செய்யவில்லை. கூடியதே குற்றம் என்றே சுட்ட கோடூரமானவர்கள் இந்த வெள்ளையர்கள்.

இதனை அறிந்த வெள்ளைய ராணுவம் அந்த இடத்துக்கு ஆயுதத்தோடு புகுந்து கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கண்மண் தெரியாமல் சுட்டிருக்கிறார்கள். முன்னறிவிப்போ, முன் எச்சரிக்கையோ எதையும் விடுக்கவில்லை. குறைந்தபட்சம். புகுந்து கொலை வெறியோட்டு சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள் வெள்ளைய ஆதிக்கர்கள்.

                 வெள்ளையாகச் சதுரமிட்டிருப்பது தோட்டக்கள் அடையாளம்

சுடப்படுவதை உணர்ந்ததும் கூட்டம் தலை தெறிக்க , திசை தெரியாமல் ஓடுகிறது. திறந்த வெளியாதலால் ஓடிப் புண்ணியமில்லை. அவர்களின் தோட்டா விரட்டிப்பிடித்துக் கொன்றிருக்கிறது. சில அங்கே தோண்டப்பட்ட பொதுக்கிணறு ஒன்றில் குதித்து உயிர் பிழைக்க முனைந்திருக்கிறார்கள். மிக அகன்ற ஆழக் கிணறு அது. நான் அதனை எட்டிப் பார்த்தேன் படு பாதளமாக இருந்தது. விழுந்தால் மேலே எழச் சிரமம். பீதி நிறைந்த தருணத்தில் கிணற்றில் எத்தனை பேர் குத்திதார்களோ.. ஒருவர் மேல் ஒருவர் குதித்தும் மாண்டிருக்கிறார்கள். சுட்டது போக சுயமாகவும்  'தற்கொலைக்கு' உந்தப்பட்டிருக்கிறார்கள்.
                                                               பெருங்கிணறு

இப்படிச் சுடப்பட்டு இறந்தவர் எண்ணிக்கை 400ஐத் தாண்டி நிற்கிறது. அவர்கள் சூடுபட்டு சுவர் ஒன்றும பல இடங்களில் குழி விழுந்திருக்கிறது.(படத்தில் பாருங்கள்.. வட்டமிட்டிருக்கிறது)

இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் அகிம்சை போராட்டத்தின் வழி வெள்ளையனை வெளியேற்ற முடியாது என்று திட்டவட்டமாக முடிவெடுத்திருக்கிறார்கள் இந்தக் கொலையைப் பார்த்துப் பதறிய இளைய
சந்ததி.  ஆயுதம் ஏந்தி  வெள்ளையனைத் துணிவோடு எதிர்த்த இளைஞர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்தான் பகத் சிங். பகத் சிங்கின் படமும் அங்கே வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. அவர்களின் புரட்சியையும் தாகுதல்களையும் முறியடித்தார்கள் வெள்ளையர்கள். பின்னர் அவர் கைது செய்யப் பட்டு தூக்கிலேற்றப்பட்டார். இன்றும் அவர் ஒரு புரட்சித் தலைவராக மக்களால் கொண்ட்டாடப்படுகிறார்.

மாவீரன்  பகத் சிங்

அவர் தூக்கிலிடப்பட சிறையில் இருந்த போது காந்தி அவரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று வராலாறு பேசுகிறது. ஆனால் காந்தி அமைதி காத்தார் என்றே ஒரு மாறாத கறை அவர் மேல் படிந்திருக்கிறது. என்ன காரணம் என்றால் காந்தி முன்னெடுத்தது அகிம்சை வழி. பகத் சிங்கின் போராட்டம் ஆயுதப் போராட்டம் என்பதால் என்கிறார்கள். அகிம்சை வழியில் செல்லாதவர்களை அவர் ஆதரித்தது கிடையாது. காந்தி செய்தது சரியா?



                                  
                                     சுடப்பட்டு மாண்டு கிடக்கிறார்கள்(வரையப் பட்டது)



              இந்த வண்ண இலைகள் கொண்ட பூச்செடியைப் பாலியிலும் பார்த்தேன்

Comments

Popular posts from this blog

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...

நடைமுறை வாழ்க்கை சிக்கல்களைக் களைய, ‘அன்பேற்றுதல்’ நூல் சொல்லும் அரிய ஆலோசனைகள்

  நம் நாட்டின் கல்வி பாடத்திட்டத்தில் நெடுங்காலமாகவே ஒரு பெரும் பின்னடைவு இருந்து வருகிறது. சோதனையில் நல்ல மதிப்பெண்கள் பெறவேண்டும் என்ற மேல்மட்ட அதிகாரிகள் தொட்டு அடித்தட்டு மனிதர்கள் வரை கொண்டிருக்கும் எதிர்பார்ப்பு நோய் , வைரஸ்போல பரவிவிட்டிருக்கிறது. இது சமூகத்திடம் மிகுதியான பண்புக் கோளாறை வளர்த்து , சரி செய்யமுடியாத அளவுக்கு நீட்சிகண்டுவிட்டது. எல்லாக் காலத்திலும் வெவ்வேறு பெயர்களில் நந்நடத்தை பாடம் போதிக்கப்பட்டு வருகிறது என்பதென்னவோ உண்மைதான் . ஆனால் அவை முக்கியத்துவம் இழந்த வெறும் பாடமாகவே , இருந்து வருகிறது. பிழைப்புக்கான   பாடமாக கருதப்படும் மொழிப்பாடங்கள் , கணிதம் அறிவியல் , வரலாறு நிலநூல் கணக்கியல் போன்ற   பாடங்களையே பள்ளிகள் வலிந்து முன்வைக்கின்றன. இவை பொருளீட்டக்கூடிய அடித்தளத்தைக் கொண்டிருப்பதால் , இந்தச் சமூகம் இதனையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.   சமூகத்தில் நிலவும் பலவகையான குணக்கேடுகளுக்குக் காரணமாகப் இந்தப் பிழைப்புவாதத்தையே அடிப்படை காராணியாகக் கூறலாம். பள்ளிகளில் நந்நடத்தை கல்வியைப் புறக்கணிப்பதிலிருந்தே சமூகத்தின் நோய்க் கோளாறு தொடங...