Skip to main content

காசிக்குப் போவது பாவம் தீர்க்கவா?

7. ஜாலியன்வாலா பாக்



பஞ்சாப் மாநிலத்தின் வரலாறு ரத்தத்தால் எழுதப்பட்டது.

பொற்கோயிலிலும் அதன் வளாகத்திலும் ரத்தக் கறை படிந்துள்ளது மட்டுமல்ல. அதே நகரில், அம்ரிஸ்டாரில் இன்னொரு இடமும் குருதியால் வரையப்பட்ட ஓவியாமாய்க் காட்சி தருகிறது.

அதுதாதான் ஜாலியன் வாலா கொலை. ஜாலியன் வாலா என்பது மக்கள் கூடும் ஒரு பூங்காவாக, காட்சி தருகிறது இப்போது. கொலைக் களத்தின் நினைவகம் இது. இந்திய சுதந்தர போராட்டக் காலத்தில் அது மக்கள் கூடும் இடமாக, அல்லது  காற்று வாங்கும் வெளியாக இருந்திருக்கிறது. வெள்ளையனே வெளியேறு என்ற போராட்டக் குரல் பஞ்சாப்பிலும் உரக்க ஒலித்த காலக்கட்டத்தில் நிகழ்ந்த ரத்தக் களறி நினைவை நடுங்க வைக்கும் வரலாற்று  இடமாக   திகழ்கிறது இந்த ஜாலியன் வாலா.
 

                                                    தோட்டாக்கள் சிதறிய அடையாலம்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஐயாரிம் பேர் இந்த ஜாலியன் வாலவில் கூடி அமைதி பேரணி நடத்த முற்பட்டிருக்கிறார்கள். இங்கே கூடி பின்னர் நகர் வெளியில் நடந்து போவதாய் ஒரு திட்டம் போட்டிருக்கிறார்கள். இவர்கள் நிராயுத பாணியாய்த்தான் இருந்திருக்கிறார்கள். கலவரமோ கலட்டாவோ செய்யவில்லை. கூடியதே குற்றம் என்றே சுட்ட கோடூரமானவர்கள் இந்த வெள்ளையர்கள்.

இதனை அறிந்த வெள்ளைய ராணுவம் அந்த இடத்துக்கு ஆயுதத்தோடு புகுந்து கூடியிருந்த கூட்டத்தை நோக்கி கண்மண் தெரியாமல் சுட்டிருக்கிறார்கள். முன்னறிவிப்போ, முன் எச்சரிக்கையோ எதையும் விடுக்கவில்லை. குறைந்தபட்சம். புகுந்து கொலை வெறியோட்டு சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள் வெள்ளைய ஆதிக்கர்கள்.

                 வெள்ளையாகச் சதுரமிட்டிருப்பது தோட்டக்கள் அடையாளம்

சுடப்படுவதை உணர்ந்ததும் கூட்டம் தலை தெறிக்க , திசை தெரியாமல் ஓடுகிறது. திறந்த வெளியாதலால் ஓடிப் புண்ணியமில்லை. அவர்களின் தோட்டா விரட்டிப்பிடித்துக் கொன்றிருக்கிறது. சில அங்கே தோண்டப்பட்ட பொதுக்கிணறு ஒன்றில் குதித்து உயிர் பிழைக்க முனைந்திருக்கிறார்கள். மிக அகன்ற ஆழக் கிணறு அது. நான் அதனை எட்டிப் பார்த்தேன் படு பாதளமாக இருந்தது. விழுந்தால் மேலே எழச் சிரமம். பீதி நிறைந்த தருணத்தில் கிணற்றில் எத்தனை பேர் குத்திதார்களோ.. ஒருவர் மேல் ஒருவர் குதித்தும் மாண்டிருக்கிறார்கள். சுட்டது போக சுயமாகவும்  'தற்கொலைக்கு' உந்தப்பட்டிருக்கிறார்கள்.
                                                               பெருங்கிணறு

இப்படிச் சுடப்பட்டு இறந்தவர் எண்ணிக்கை 400ஐத் தாண்டி நிற்கிறது. அவர்கள் சூடுபட்டு சுவர் ஒன்றும பல இடங்களில் குழி விழுந்திருக்கிறது.(படத்தில் பாருங்கள்.. வட்டமிட்டிருக்கிறது)

இந்தப் போராட்டத்துக்குப் பிறகுதான் அகிம்சை போராட்டத்தின் வழி வெள்ளையனை வெளியேற்ற முடியாது என்று திட்டவட்டமாக முடிவெடுத்திருக்கிறார்கள் இந்தக் கொலையைப் பார்த்துப் பதறிய இளைய
சந்ததி.  ஆயுதம் ஏந்தி  வெள்ளையனைத் துணிவோடு எதிர்த்த இளைஞர் குழுவுக்குத் தலைமை தாங்கியவர்தான் பகத் சிங். பகத் சிங்கின் படமும் அங்கே வரையப்பட்டு காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தது. அவர்களின் புரட்சியையும் தாகுதல்களையும் முறியடித்தார்கள் வெள்ளையர்கள். பின்னர் அவர் கைது செய்யப் பட்டு தூக்கிலேற்றப்பட்டார். இன்றும் அவர் ஒரு புரட்சித் தலைவராக மக்களால் கொண்ட்டாடப்படுகிறார்.

மாவீரன்  பகத் சிங்

அவர் தூக்கிலிடப்பட சிறையில் இருந்த போது காந்தி அவரைக் காப்பாற்றி இருக்கலாம் என்று வராலாறு பேசுகிறது. ஆனால் காந்தி அமைதி காத்தார் என்றே ஒரு மாறாத கறை அவர் மேல் படிந்திருக்கிறது. என்ன காரணம் என்றால் காந்தி முன்னெடுத்தது அகிம்சை வழி. பகத் சிங்கின் போராட்டம் ஆயுதப் போராட்டம் என்பதால் என்கிறார்கள். அகிம்சை வழியில் செல்லாதவர்களை அவர் ஆதரித்தது கிடையாது. காந்தி செய்தது சரியா?



                                  
                                     சுடப்பட்டு மாண்டு கிடக்கிறார்கள்(வரையப் பட்டது)



              இந்த வண்ண இலைகள் கொண்ட பூச்செடியைப் பாலியிலும் பார்த்தேன்

Comments

Popular posts from this blog

மலேசிய புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும், இன்றைய நிலையும்

கோ.புண்ணியவான். அதன் பிறகு இந்தப் புதிய வடிவத்துக்குப் பெரிதாய் வாசல் திறந்து வரவேற்பு நல்கியது புதிதாய்ச் சிறகு தரித்து நாடு முழுதும் பாட வந்த வானம்பாடி என்ற வார இதழ்.தமிழ் மலரில் ஒரு செய்தி ஆசிரியராகச்சேர்ந்த ஆதி.குமணன் என்ற இளம் பத்திரிகையாளர் பின்னாளில் வானம்பாடி வார இதழைத்தொடங்கி புதுக்கவிதையை வளர்த்தெடுப்பதில் பிரத்தியேகக் கவனத்தைச்செலுத்தினார் என்பதைச்சரித்திரம் பொன்னெழுத்துக்களால் பதிவு செய்து வைத்திருக்கிறது. இதில் மிக முக்கியமான செய்தி என்னவெனில் தமிழ் மலரில் பணியாற்றும்போதே புதுக்கவிதைக்குப் பதியம் போட்ட ஆதிகுமணன் பிற பத்திரிகைகள் கொடுக்கத்தயங்கிய அங்கீகாரத்தைத் தன் புதுப்பத்திரிகையான வானம்பாடியில் சிவப்புக்கம்பல வரவேற்பை நல்கினார்.அதன் பின்னர் வானம்பாடி புதுக்கவிதைக்கான இயக்கமாகவே மாறி அதனைத்தீவிரமாக வளர்த்தெடுக்க முயன்றது.புதுக்கவிதை வடிவம் பழைய மரபைக் கட்டுடைத்துத்தந்த சுதந்திரத்தைச் சாதகமாகப்பார்த்த பலர் இத்துறையில் தங்கள் எண்ணங்களை எழுத்துக்களாக வடித்தனர். சீ.முத்துசாமி, கோ.முனியாண்டி, கு.கிருஷ்ணன், துரை.முனியாண்டி, பிரசன்னா, இளந்தமிழன், வே.ராஜேஸ்வரி, அருள்தாசன் போன

எத்தனை கதவுகளை அடைத்துவிட முடியும் உங்களால் ?

.                      Mr Rama                             Mr.Velan  எத்தனை கதவுகளை அடைத்திவிட முடியும் உங்களால் ? என் கையறு நாவலை அச்சிடப்பட்ட புதிதில் யாவரும் பதிப்பாளரிடமிருந்து 600 பிரதிகள் தருவித்திருந்தேன். அந்த 600 பிரதிகளும் விற்றுத் தீர்ந்தன. அவற்றில் 400 பிரதிகள் நோய்த்தொற்று காலத்தில் தபால் வழிகாகவே அனுப்பவேண்டியிருந்தது.  by தொற்று நோய் பீடித்த காலத்தில் வீட்டுக்குள்ளேயே அடங்கிக் கிடந்தவர்களுக்குத் தொலைகாட்சி ஊடகம் போரடித்திருக்க வேண்டும். எனவேதான் அவர்கள் வாசிக்க நூல்களைத் தேடியிருக்கிறார்கள். கையறு நாவல் வரலாற்றுப் புனைவு என்பதாலும் அதில் கொத்தடிமைகளாக இருந்து வாழ்வின் அனைத்து துன்பங்களையும் அனுபவித்துவிட்ட தன் உறவுகள் கதை என்பதாலும்  அந்த எண்ணிக்கையை எட்டியிருந்தது.  நோய்த்தொற்று சரிந்து பழையபடி சீரான நிலைக்குத் திரும்பிக்கொண்டிருந்த  அடுத்த ஆண்டு இரண்டு இடங்களில் நூல் வெளியீடு செய்தேன். முதலில் நான் குடியிருக்கும் சுங்கைப் பட்டாணி நகரிலும் பின்னர் நான் படித்து வளர்ந்த கூலிம் நகரிலும் செய்தேன்.  நூல் வெளியீடு பெரும்பாலும் வாசகர்களே வரவேண்டும் என்று நினைப்பதால் இந்த இரு ந

தாய்மை- சிறுகதை

                                                                தாய்மை                                                      கோ.புண்ணியவான்                காரை என்னால் தொடர்ந்து செலுத்த முடியவில்லை. கார் என் கட்டுப்பாட்டிலிருந்து நழுவிய நுண்ணுணர்வு தாக்கியது. நான்  காரின் கட்டுப்பாடட்டுக்குள் அடிமையான தோல்வியை உணர்ந்தேன். அம்மா இல்லாத பின் இருக்கை, அவள் மூச்செறியும் ஓசையின்மை, குமாரு..என்று குரலெழுப்பாமை, என்னை அலைக்கழித்தது. என்னைச் சுதாரித்துக் காரை  ஓரங் கட்டினேன். காரை நிறுத்திவிட்டு  சாய்த்து சலனமற்றிருந்தேன்.                மனைவி என்னைத் தீர்க்காமாகப் பார்த்தாள்.   என் நிலைமையைப் புரிந்துகொண்டவள் போல்,” நான் ஓட்றேன். நீங்க இப்படி உட்காந்துக்குங்க,” என்று கதவைத் திறந்தாள்.வாகனங்கள் சாலையைக் கிழித்துக்கொண்டு காற்றை  அறைந்தபடிச் சீறிச் சென்றன. நான் கதவைத் திறந்தேன். திடீரென் செவிகளைத் தாக்கிய ஹார்ன் சப்தம் என் சுய நினைவை மீட்க,. மீண்டும் கதவை அடைத்தேன். மனைவி, “பாத்து” என்று பதறினாள்.               மனைவி ஓட்டுனர் சீட்டுக்கு மாறினாள் நான் பக்கத்து இருக்கையில் அமர்ந்தேன். நெஞ்சின