Skip to main content

பலிபீடம்

இந்த

மனப் பேயை

என்ன செய்யலாம்



ஒரு எதிரியையாய்

முரண்படுகிறது

மனைவியாய்

பிடுங்குகிறது

வாலியாய்

ஏழு ஆள் பலம்கொண்டு

ஏதிர்க்கிறது

ஆதிக்கச்சக்தியென

அடிமைத்தளைகொண்டு

கீழ்பணியச் செய்கிறது



தழும்புகளை

வருடியவாறே முயற்சியிலிருந்து

சற்றும் மனம் தளராத

விக்ரமாதித்தனாய்

வேதாளத்தோடு

மல்லுக்கு நிற்கிறது



உண்மைகளை

உள்ளிழுத்தவாறே

உலக வங்கியென மலையாய் நிமிர்கிறது

வட்டிக்காரனாய்

சேகரமான

பழைய பாக்கியை

கேட்டுத்தொலைக்கிறது



கடவுளாய்

சாம்பலாய்

பீனிக்ஸ் பறவையாய்

காணாமற்போகாமல்

குறுக்கே நடந்து நடந்து

மிரட்டுகிறது



கிள்ளி எரியலாமென்றால்

குழந்தையாய் அலருகிறது



புதைத்து கதையை முடித்துவிடலாமென்றல்

கமுக்கமாய் இருந்து

வேராய் கிளைபிடிக்கிறது



உருவமென்றிருந்தால்

கழுத்தை நெறித்து

கொன்று தொலைக்கலாம்



அருவமாய்

அசரீரியாய்

உயிர்பிடுங்கியாய்

உடனிருந்தே

கொன்றுகொண்டே இருக்க்கிறது.



கோ.புண்ணியவான்.

Comments

Sebastian said…
ungal valaip paguthikku vanthen.manasu pinnik kondathu.
thodarnthu varuven
-Sebastian

Popular posts from this blog

குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற வருகிறார்கள்

                                                                       குரோஹ் ஆதி குடிகள் தமிழுக்குத் தொண்டாற்ற                                                                                  வருகிறார்கள்     பேராக்கின் குரோஹ் சிற்றூர் மலை உச்சியில் அமைந்த  வனப்பான ஊர். பாலிங்கிலிருந்து மெல்ல ஏறும் மலைபாதையில் அரை மணி நேரத்தில் குரோஹ்வை அடைந்துவிடலாம். நானும் என் மனைவியும் அதிகாலை ஆறரைக்குக் கிளம்பிவிட்டோம். அது என் வழக்கமல்ல. காலை 10.00 வரை தூங்கிக்கொண்டிருப்பவன் நான். குரோஹ் தமிழ்ப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு பால்ராஜ் 21.2.25 ல்  தாய்மொழி நாள் கொண்டாட்டத்துக்குச் சிறப்பு விருந்த...

கவிதைக்குள் பாதாம்பருப்பு

                                                                                                  நா ன் பணியாற்றிய ஒரு பள்ளியில் ஓர்இளைஞர் தற்காலி ஆசிரியராக வந்து சேர்ந்தார். தொடக்கத்தில் அவர் சாமான்ய இளைஞரைப்போலத்தான் தோன்றினார்.  ஆனால் அவரிடம் சில கோளாறுகள் இருப்பது சற்றுத் தாமதமாகத்தான் தெரிய வந்தது. உடன் வேலை செய்யும் ஆசிரியர்கள் கொடுத்த புகார்களின் பேரிலும் நானே நேரடியாக அனுபவித்ததின் பேரிலும் . அவரை தொடர்ந்து பள்ளியில் வைத்திருப்பது ஆபத்தானது என்று முடிவெடுத்து மாவட்டக் கல்வி இலாகாவின் கட்டளையின் பேரில் அவரை வேலையிலிருந்து உடனே நிறுத்திவிட்டேன். பள்ளியில் படிக்கும்போது அவர் மிகவும் கெட்டிக்கார மாணவராக இருந்திருக்கிறார்.  அசாதாரண அறிவாளி தரத்தில் வைத்துப் பார்க்கவேண்டியவர் என்று அவரோடு படித்து இன்றைக்குப் பல்கலைப் பேராசிரியாரா...

யானையின் பாதத்தடம்

                                         இ ம்முறை வல்லினம் விருது பி.எம் மூர்த்திக்கு வழங்கப்படுகிறது. அதனை முன்னிட்டு மூர்த்தியையுடனான என் அனுபவப் பகிர்வு இக்கட்டுரை.           மூர்த்தியை நான் முதன் முதலில் ஜித்ரா ஐ ஏ பி கல்விக் கழகத்தில்தான்   சந்தித்தேன். இது நடந்து கிட்டதட்ட 35/40 ஆண்டுகள் கடந்துவிட்டன. எங்கள் இருவருக்கும் ஒரே அறை ஒதுக்கப்பட்டிருந்தது ஒரு தற்செயல் அல்ல அது ஏதோ ஓர் ஏற்பாடு என்று முதலில் நான் அறிந்திருக்கவில்லை. குளிர்சாதன வசதி இல்லாத அறை அது. இரவில்கூட வெக்கை உக்கிரமாகத் தாக்கும். 30 மைல்கள் ஓடிவிட்டது போல வியர்த்துக் கொட்டும். இரு முறை மும்முறை இரவில் குளித்தவுடனும் வியர்க்கும். இவ்வாறான கையறு நிலையில் உஷ்ணத்தைக் குறைக்க சில அசட்டுத்தனமான யோசனைகள் தோன்றுவது இயல்பு. உறக்கம் வராமல் தவித்துபோது , சிமிந்துத் தரையில் வாலி வாலியாக தண்ண...